Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி :200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்


போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில், போதிய மற்றும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை கண்டறிய, அண்ணா பல்கலை, ஒரு குழுவை நியமித்தது. இக்குழு, 520 பொறியியல் கல்லூரிகளையும் ஆய்வு செய்ததில், 200 பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர்கள் இல்லாததும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததையும் கண்டறிந்தது.

குழுவின் அறிக்கை அடிப்படையில், சம்பந்தபட்ட, 200 பொறியியல் கல்லூரிகளிடம், விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும், கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாதது குறித்தும், விளக்கம் அளிக்க வேண்டும் என, நோட்டீசில், பல்கலை கேட்டுக்கொண்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு), பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், இதைவிட, பல கல்லூரிகள் குறைவான சம்பளம் வழங்குவதால், சம்பளம் அதிகம் கிடைக்கும் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர்கள் சென்று விடுகின்றனர்.

மேலும், பலர், தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, பல பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

அண்ணா பல்கலை வட்டாரம் கூறுகையில்,"நாங்கள் தெரிவித்துள்ள குறைகளை, உடனடியாக சரிசெய்யும் பணியில், கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்" என, தெரிவித்தன.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதற்கு முன், ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யவும், போதிய வசதிகளை ஏற்படுத்திவிடவும், கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக