Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 17 ஏப்ரல், 2013

இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்


சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது.

மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ இந்த புதிய முறையை திட்டமிட்டுள்ளது. திறந்த புத்தக தேர்வு முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்கு இந்த முறையை சிபிஎஸ்இ கொண்டு வர உள்ளது.

மாணவர்கள் தேர்வு நேரத்தில் அனைத்து பாடங்களையும் படித்து குழம்புவதை விட, தேர்வுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும் என்று 4 மாதங்களுக்கு முன்பே மாணவ, மாணவியருக்கு தெரிவிக்கப்படும். தேர்வுக்கு அதனை மட்டும் படித்தால் போதும், இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, பயமின்றி தேர்வு எழுதவும் முடியும். இதனால் திறந்த புத்தக தேர்வு முறை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக