Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக் கோரி பாளை.யில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாளை.யில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை.யில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்திற்கு மாநில பொது செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில உதவி பொதுசெயலாளர் தாயப்பன் வரவேற்றார். சி.எஸ்.ஐ., நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளி மேலாளர் வேதநாயகம் , இரட்சண்யசேனை பள்ளிகள் செயலாளர் ஆல்பர்ட் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.

போராட்டத்தில் நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யது அகமது கபீர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொது செயலாளர் போத்திலிங்கம், சி.எம்.எஸ்., எவாஞ்செலிக்கல் பள்ளிகள் செயலாளர் டேவிட் ஸ்டீபன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சிவஞானம், ஆரோக்கியராஜ், பாலசுந்தர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி, தலைவர் ராஜ்குமார், மாநில செயலாளர் முருகேசன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பஸ்லுக் ஹக், இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் இசக்கியப்பன், கைத்தொழில் ஆசிரியர் சங்க மாநில கவுரவ தலைவர் சுவாமிநாதன், டி.டி.டி.ஏ., துவக்கப்பள்ளி மேலாளர் சுவாமிதாஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி சாம்மாணிக்கராஜ் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

போராட்டத்தில் சங்க மாநில பொருளாளர் டேவிட் அய்யாத்துரை, மாநில துணை தலைவர்கள் கணேசன், ஜேபஸ் பொன்னையா, சண்முகநாதன், சண்முகவேல், மாநில துணை செயலாளர்கள் விவேகானந்தன், பத்பநாபன், கோவிந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள், மேலாளர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூட்டா மாநில பொருளாளர் சுப்பாராஜ் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். சங்க மாவட்ட தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக