Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழ்நாட்டில் கோடையின் தொடக்கமே சதத்தை தாண்டியது !


கோடை காலம் தொடங்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை லட்சத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது.

இதன் காரணமாக தென்தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் தற்போது மழை பெய்ய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது வலுவிழந்து வருகிறது.

இருப்பினும் இதன் காரணமாக கேரளத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தைப் பொருத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் என்றனர்.

சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருச்சி - 103

கரூர் - 102

மதுரை, சேலம் - 101

தருமபுரி - 100

கோவை - 99

சென்னை - 97

வேலூர் - 95

கன்னியாகுமரி, கடலூர் - 92

தூத்துக்குடி - 91

நாகப்பட்டினம் - 89

குன்னூர் - 74

கொடைக்கானல் - 69

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக