இந்தியாவில் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களே காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன.
வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர், பள்ளிக் கல்லூரிகளின் விடுதிகளுக்கான சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர் என, நான்கு வகையான சிலிண்டர்களை விலை மாற்றங்களுடன் வினியோகம் செய்து வந்தன.
இதில், வீடுகளுக்கு மானிய சிலிண்டர், 401 ரூபாய்க்கும், பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கான சிலிண்டர் கடந்த மாதம் வரை, 1,260.50 ரூபாய்க்கும், வர்த்தக சிலிண்டர், 1,676 ரூபாய்க்கும், மானியம் இல்லாத சிலிண்டர், 932.50 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வந்தது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதாலும், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையை ஆயில் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரிப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாதம் தோறும் ஒரு விலை ஏற்றம் அரங்கேறி வருகிறது.
ஆயில் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகளின் விடுதிகளுக்கு வழங்கி வந்த சிலிண்டர் வினியோகத்தில் மாற்றம் செய்துள்ளது. கடந்த மாதம் வரை, பள்ளிக் கல்லூரி விடுதிகளுக்கு பிரத்தியோக சிலிண்டர்களை, 1,260.50 ரூபாய்க்கு வழங்கி வந்தது.
ஆனால், நடப்பு மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கான பிரத்தியோக சிலிண்டர்களை ரத்து செய்து விட்டு, வீடுகளுக்கு வழங்கப்படும், மத்திய, மாநில அரசுகளின் மானியம் இல்லாத சிலிண்டர்களை வினியோகிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக