Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 4 மார்ச், 2013

இன்டர்நெட் மூலம் உடனடி மணி ஆர்டர் சேவை தபால் துறையில் துவக்கம்


தபால் துறையில் இன்டர்நெட் மூலம் உடனடி மணி ஆர்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, குறைந்த செலவில், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பி, ஒரு சில நிமிடங்களில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தபால் துறையில் மணி ஆர்டர் அனுப்பி நான்கு, ஐந்து நாட்களுக்கு பின், பணம் பெற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. பின், இ.எம்.ஒ., என்னும் எலக்ட்ரானிக் மணி ஆர்டர் மூலம் அனுப்பப்படும் பணம், மறுநாள் கிடைக்கும் வகையில் இருந்தது. தற்போது, கம்ப்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், 1,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்ப முடியும். பணம் அனுப்பும் போது, 16 இலக்க எண் வழங்கப்படும்; இந்த எண்ணை, பணத்தை பெறும் நபருக்கு போனில் தகவல் தெரிவித்து விட வேண்டும்.
பணம் பெறும் நபர், தன் அடையாள அட்டையின் நகலுடன் 16 இலக்க ரகசிய எண்ணை தபால் அலுவலகத்தில் தெரிவித்து, பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

 ஏ.டி.எம்.,களில் கூட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், இந்த சேவையில் ஒருவர், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.

ராமநாதபுரம் மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் குமாரகிருஷ்ணன் கூறியதாவது:ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரைக்கு 100ம், 10 ஆயிரத்து ஒன்று முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை 110ம், 30 ஆயிரத்து ஒன்று முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பணம் அனுப்பிய ஒரு சில நிமிடத்தில் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக