Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 9 மார்ச், 2013

தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் "ரேடியோ டாக்சி"


டில்லியில், கடந்த ஆண்டு, மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது; அதே அளவிற்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கூடியுள்ளன.

இரவு நேரத்தில், தனியாக, வாடகை காரில் பயணம் செய்யும் பெண்கள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில், "ரேடியோ டாக்சி' என்ற தனியார், டாக்சி சேவை நிறுவனம், வேலை பார்க்கும் பெண்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.கிளம்பிய நேரத்திலிருந்து, குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு ஒரு முறை, டாக்சியிலிருந்து தானாக, எஸ்.எம்.எஸ்., செய்தி, டாக்சி சேவை நிறுவனம் மற்றும் பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்று கொண்டே இருக்கும்.அந்த செய்திகளில், "இப்போது டாக்சி, இந்த இடத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இங்கே நின்று கொண்டிருக்கிறது, இன்னும் சில நிமிடங்களில் இறக்குமிடத்தை அடைந்து விடும்' என்பன போன்ற செய்திகள், தானாக அனுப்பப்பட்டு கொண்டே இருக்கும். இதை, டாக்சி டிரைவரோ அல்லது வேறு நபர்களோ மாற்ற முடியாது.இந்த வசதி, அந்த டாக்சியில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதுடன், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்தபடியே, டாக்சி செல்லுமிடம் கண்காணிக்கப்படுவதால், நள்ளிரவு நேரத்திலும், ரேடியோ டாக்சி சேவை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக