Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 மார்ச், 2013

நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர் களை சிறையில் அடைத்து வைத்திருப்பது மதசார்பின்மை ஜனநாயகத்திற்கு விரோதமானது :நாடாளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழக்கம்


நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் பேசிய தாவது,

குடியரசு தலைவர் உரையில் பாரா 30 மற்றும் 31-ல் சிறுபான்மையினர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு கொஞ்சம் செய்திருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சிறுபான்மை நலத் துறைக்கும், மவ்லானா அபுல் கலாம்ஆசாத் பவுண்டே ஷனுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சிறுபான்மையினருக்கான மிக முக்கியமான பிரச்சினை சரியாக கவனிக்கப்படவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால், மத்திய அரசு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு பிரச்சினையை மத்திய அரசு மறந்து விட்டது எனக் கூறிக்கொள்ள விரும்பு கிறேன்.

இட ஒதுக்கீடு தேசவிரோதம் அல்ல:
இங்கே பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத அடிப் படையில் இட ஒதுக்கீடு செய்வது ஏதோ தேச விரோத செயல் என்பது போல் குறிப்பிட்டார்கள். சிறுபான்மை யினரை பொறுத்தவரை முக்கிய மான பிரச்சினை இடஒதுக்கிடு மட்டுமே. இதில் அரசு சிரத்தையுடன் நடந்துகொள்ளா விட்டால் அது மிகுந்த வருத்தத்திற்கு உரியது எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

பல்வேறு ஆணையங்கள் இட ஒதுக்கீட்டுக்காக எடுக்கப் பட வேண்டிய உறுதியான நடவடிக்கை குறித்து பரிந்துரைகள் செய்து விட்டன. ஆனால் சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டிற்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது? நான் அரசின் நேர்மையை சந்தேகிக்க வில்லை. இடஒதுக்கீடு பிரச் சினையில் அரசு மிக மெத்தன மாக செயல்படுகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது 2 - வது பதவி காலத்தை நிறைவு செய்திருக்கும் கட்டத்திலாவது சிறுபான்மை இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அப்துல் நாசர் மதானிக்கு அநீதி:
மத்திய அரசு கொண்டு வரும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் நோக்கம் என்ன? சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே அது இருக்க வேண்டும். அப்படி என்றால் அது சரி ஆனால் அந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படு கிறது.

ஆயிரக்கணக்கான முஸ் லிம் இளைஞர்கள் சிறைச் சாலைகளில் அடைக்கப் பட்டிருப்பதை நாம் அறிவோம். இது குறித்து அரசு அக்கறை யோடு பரிசீலனை செய்ய வேண்டும். அந்த சட்டம் யாரை யும் கைது செய்து ஜெயிலில் அடைக்கும் உரிமையை காவல் துறைக்கு வழங்கி விடக் கூடாது.

எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பிரமுகர் சிறையில் இருக்கிறார், அவர் பெயர் அப்துல் நாசர் மதானீ ,அவர் முஸ்லிம் அறிஞர். அவர்தமிழ் நாட்டில் 9 ஆண்டுகள் சிறை யில் அடைக்கப் பட்டிருந்தார் கடைசியில் எல்லா குற்றச்சாட்டு களிலிருந்தும் நிரபராதி என விடுவிக்கப் பட்டார்.

பிறகு அவர் கர்நாடக சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அவரது வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுவிட்டது. அவர் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளார். அவருக்கு நீதி வழங்கப்பட வில்லை. அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.

எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த மாதிரியான நடைமுறையை அனுமதிக்க கூடாது. இது மதசார்பின்மையின் அடிப்படை தத்துவத்திற்கு விரோதமானது. இவ்வாறு இ.டி.முஹம்மது பஷீர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக