Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 22 மார்ச், 2013

73 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



ஜாமின் உத்தரவாதம் வழங்க யாரும் முன்வராததால் தமிழ்நாட்டில் உள்ள சிறையில் வாடும் 73 விசாரணை கைதிகளை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இவ்வகையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும்படி சட்ட உதவி குழுவினருக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, சட்ட உதவி குழுவினர் கொடுத்த தகவல்களின்படி, ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராததால் 272 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளது தெரிய வந்தது. இவர்களைப் பற்றிய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப, 73 கைதிகளை சொந்த ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக