Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 31 ஜனவரி, 2013

கிணறை காணவில்லை தாசில்தார் மனைவி புகார்

கரூர் அருகே தனது நிலத்தில் இருந்த கிணறை காணவில்லை என்று ஓய்வு பெற்ற தாசில்தார் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின¢றனர்.ஒரு சினிமா படத்தில் கிணறை காணவில்லை என நடிகர் வடிவேலு போலீசில் புகார் செய்வார். அதேபோன்ற ஒரு சம்பவம் கரூர் அருகே நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு: கரூர் மாவட்டம் தாந்தோணிமலையை சேர்ந்தவர் முருகேசன். ஓய்வுபெற்ற தாசில்தார். இவரது மனைவி இந்திராணியின் பூர்வீக நிலம் அருகில் உள்ள மோளபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தில் கிணறு இருந்தது. இந்த நிலத்தை இந்திராணியின் பங்காளிகள் அனுபவித்து வந்தனர். நிலம் தொடர்பாக இந்திராணிக்கும், பங்காளிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டு வழக்கு நடந்து வந்தது. வழக்கில் இந்திராணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ளவும், கிணற்றில் பம்புசெட் அமைக்கவும் முடிவு செய்த இந்திராணி நிலத்தை போய் பார்த்தார். அப்போது அங்கு இருந்த கிணறு தகர்க்கப்பட்டு மூடி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பரமத்தி போலீசில் இந்திராணி நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில் தனது நிலத்தில் இருந்த கிணறை காணவில்லை. இதுபற்றி கேட்டபோது எனது தாய் மாமாவின் மனைவி ராமாத்தாள், அவரது மருமகள் பர்வதம் (47), உறவினர் சண்முகம் (45) ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என மனுவில் கூறி இருந்தார். இந்திராணியின் புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக