Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 31 ஜனவரி, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளி, பொன்னுச்சாமி ஆரம்பப்பள்ளி, அரிஜன் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–கடந்த 2011–2012–ம் கல்வி ஆண்டில் எங்களது பள்ளியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்திருந்தோம். அந்த சூழ்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இதனால் பணி நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலும், அதன்பின் மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை பின்பற்றியே தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மனு தள்ளுபடி
மேலும் மாணவர்களுக்கு கட்டாய, தரமான கல்வி அவசியம். எனவே இத்தகைய கல்வியை அவர்களுக்கு வழங்க பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெறுபவர்களே கல்வி கற்பிக்க தகுதியானவர்கள்.கடந்த 2010–ம் ஆண்டிற்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள் 5 வருடங்களுக்குள் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பை மட்டும் தகுதியாக கொண்டு வேலையில் சேர்க்க முடியாது. தகுந்த திறமையுடன் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக