Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 16 ஜனவரி, 2013

காங்கிரஸ் கட்சிக்கு உயிர்கொடுத்த ராஜசேகர ரெட்டியின் மனைவி தன மகனுக்காக ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை


சிறையில் வாடும் தனது மகன் ஜெகன்மோகன்ரெட்டியை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார் அவரின் தாயார் விஜயலெட்சுமி. ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர்.காங்.கட்சியின்தலைவரும், கடப்பா எம்.பி.யுமான ஜெகன்மோகன்‌ரெட்டி (40). சொத்து குவிப்புவழக்கில் சி.பி.ஐ.போலீசாரால் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.இவரின் ஜாமின் மனு கோர்ட்டுகளில் தள்ளுபடியானது. சான்சல்குடா சிறையில் உள்ளார்.

இவரின் தாயாரும், எம்.எல்.ஏ.வுமான, விஜயலெட்சுமி (56), நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை , டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது , கடந்த ஆண்டு மே மாதம் முதல் தனது மகன் ஜெகன்மோகன் ,சிறையில் வாடி வருகிறார். ஆளும் காங்கிரஸ் அரசு தன் மகனை பழிவாங்குகிறது எனவும், ஜெகன்மோகன் ரெட்டியை விடுதலை செய்யக்கோரினார். மேலும் ஜெகன் மோகனை விடுதலை செய்ய கோரி 1கோடியே 9 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக