Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 23 ஜனவரி, 2013

வேளாண்துறையில் காலி பணியிடம் நிரப்பும் பணி தீவிரம்


வேளாண் துறையில் காலியாகவுள்ள, அதிகாரிகள் மற்றும் ஊழியர் பணியிடங்களை நிரப்பும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. வேளாண்துறையில், ஐந்துக்கும் மேற்பட்ட துணை இயக்குனர் பணியிடங்கள் மட்டுமின்றி, மாவட்ட வேளாண் அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பணிகள், தற்போது, முழுவீச்சில் துவங்கியுள்ளன. 2006-07 முதல், 2012-13ம் ஆண்டுக்களுக்கான, அலுவலக உதவியாளர்கள்,104 பேர், 9ம்தேதி பணிநியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், வேளாண்துறை கமிஷனர் அலுவலகம், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், வேளாண் தொழிற்நுட்ப பிரிவு பொறியாளர் அலுவலகம், விதைச்சான்றளிப்பு இயக்குனரகம் உள்ளிட்ட, இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வேளாண்துறையில் காலியாகவுள்ள, தட்டச்சர் பணியிடங்களில், 13 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, வேளாண்துறை பணிமேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு உத்தரவை அடுத்து, காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில், துணை இயக்குனர் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படும். பணியிடங்களில்,புதிய நியமனங்கள் தேவைப்படும் பட்சத்தில், இதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிடும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக