Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 23 ஜனவரி, 2013

வளைகுடா வாழ் தென்தமிழக மக்களுக்காக மதுரை -துபாய் விமான சேவை வேண்டும்


வளைகுடா வாழ் தென்தமிழக மக்களின் நலன் கருதி மதுரையிலிருந்து துபாய்க்கு "ஏர் இந்தியா " விமான சேவையை உடனே துவங்கவேண்டும் என்று வலியுறுத்தி துபாய் இ.டி.ஏ.அஸ்கான் குழுமத்தின் ஆதரவோடு துபாயில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .

ஜனவரி 22 ,2013 அன்று இ.டி.ஏ.அஸ்கான் ஆடிடோரியத்தில் இ.டி.ஏ.அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் .செய்யது சலாஹுத்தீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .

காயிதே மில்லத் பேரவையின் சார்பில் அதன் கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா பேசும்போது ,தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை பயன்படுத்தும் திருநெல்வேலி ,தூத்துக்குடி மாவட்ட மக்கள் சந்திக்கும் சிரமங்களை விலாவர்ரியாக எடுத்துக் கூறியதோடு  ,மதுரை விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு "ஏர் இந்தியா" விமான சேவை மிக அவசியமான அவசரமானது என்பதை வலியுறித்தி பேசினார் .ஈமான் சங்கம் சார்பில் கீழக்கரை ஹமீது யாசீன் , தமிழ் பேரவை  சார்பில் அஹமது மீரான் ,துபாய் தமிழ் சங்கம் சார்பில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் துபாய் மக்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர் .

மேலும் தாயகத்திலிருந்து வந்திருந்த மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு , தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் கூட்டமைப்பின் முதுநிலைத் தலைவர் இரத்தின வேலு , டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் தலைவர் ஜாகிர் ஹுசைன் , செயலாளர் முஸ்தபா ஆகியோர் மதுரையிலிருந்து துபாயிக்கு விமானம் சேவை துவங்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து ,உடனடியாக அந்த சேவையை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி பேசினர் .

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய ,ஏர் இந்தியா துபாய் பிரிவின் மேலாளர் ராம்பாபு அவர்கள் , மிக விரைவில் மதுரை - துபாய் விமான சேவை துவங்கும் என்று உத்திரவாதம் தந்தார் .

நிகழ்ச்சிகளை அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் ஹமீது ரகுமான் தொகுத்து வழங்கினார் .

ரவணசமுத்திரம் மீரான் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே கூட்டம் நிறைவுபெற்றது .

1 கருத்து:

  1. உங்களின் சமூக சேவை கண்டு மனம் புல்லரிக்கிது ஹபீபே....வாழ்க நண்பர்...

    பதிலளிநீக்கு