Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 டிசம்பர், 2012

தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் சோதனை

பல்வேறு மாநிலங்களில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 84 பேரை போலீசார் மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் போலீசார் நேற்று முன்தினம் டெல் லிக்கு வந்தனர். அங்குள்ள கிராமங்களில் இருந்து சட்டவிரோதமாக சிறுவர், சிறுமிகளை வீட்டு வேலைக்காக டெல்லிக்கு கடத்தி வந்துள்ளதாகவும், அவர் களை மீட்பதற்காக வந்துள்ளதாகவும் டெல்லி போலீசுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லி மற்றும் ஜார்கண்ட் போலீசார், சக்திவாகிணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், டெல்லியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் விவரங் களை சேகரித்தனர். அப்போது 24 தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 7 தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 84 பேரை மீட்டனர். அவர்களில் 64 பேர் மைனர்கள் என்று தெரியவந்தது. மீட்கப்பட்டவர்களில் 54 பேர் பெண்கள். மீட்கப்பட்ட 84 பேரும், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் அசாமில் இருந்து வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். இதுதொடர்பாக 7 பேரை பிடித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எப்படி ஆட்களை வேலைக்கு அழைத்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மற்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களிலும் தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக