Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 29 டிசம்பர், 2012

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு 40 பேர் பலி


வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில், கடும் பனி பொழிவு காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்க முடியாமல் பலியானோர் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது.இதில், உ.பி., மாநிலத்தில் கடும் பனி காரணமாக, 30 பேர் பலியாகியுள்ளனர். ஆக்ராவில் தொடர்ந்து அதிக குளிர் நிலவுகிறது. இங்கு, குறைந்த பட்ச வெப்பநிலை, 2.6 டிகிரி செல்சியசுக்கும் கீழே இருந்தது. மாநிலத்தில், பெரும்பாலான பகுதிகளில், அதிக பட்ச வெப்ப நிலை, 8 முதல், 10 டிகிரி செல்சியசுக்கும் கீழ் இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடும் குளிர் நிலவியது. நேற்று முன்தினம் மாலை, பனிபொழிவு அதிகமாக இருந்தது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில், கடும் பனி மூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட, டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நேற்று விமான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு நாட்களாக, நிலவும் மிதமான பனிமூட்டம், விமான சேவையை பாதிக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, பனி மூட்டம் இருந்தது. ஆனால், காலையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக