Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 17 நவம்பர், 2012

ஒரு ஆசிரியையை காதலிப்பதில் இரு ஆசிரியர்களிடையில் மோதல்


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சுந்தரேசனார் நகரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் அம்சா, 40. இதே பள்ளியில், மதிவாணன், சங்கர், ஜானகி ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர்.தலைமை ஆசிரியையு டன், ஆசிரியர்களான மதிவாணன், சங்கர் ஆகியோர், நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இதை வேடிக்கை பார்த்த மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து, கடந்த புதன் அன்று, மாணவர்களின் பெற்றோர்,பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் மற்றும் உதவி துவக்கக் கல்வி அலுவலர் கண்ணய்யா ஆகியோர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என, தெரிந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை அம்சா, மேல் நெடுங்கல் துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆசிரியர் மதிவாணன், வெளியகரம் துவக்கப் பள்ளி, சங்கர், ராமசமுத்திரம் துவக்கப் பள்ளி, ஆசிரியை ஜானகி, நொச்சலி துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக