Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 17 நவம்பர், 2012

பிச்சை எடுப்பதில் மோதல், ஒரு பிச்சைக்காரர் கொலை!


பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மற்றொரு பிச்சைக்காரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே உள்ள செய்யாம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லையன், 65. அவர், அப்பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவரைப் போலவே, மற்றொரு நபரும், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

வழக்கமாக, இருவரும், நல்லூரில் உள்ள கடையின் முன் படுத்து உறங்குவது வழக்கம். கடந்த, 14ம் தேதி இரவு வழக்கமாக உறங்கும் இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நல்லையன், மற்றொரு பிச்சைக்காரரை அடித்து உதைத்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், நல்லையனை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்த நபர் யார், அவர் பெயர் என்ன என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. மேலும், நல்லையன் செல்லும் இடத்திற்கு, சம்மந்தப்பட்ட நபரும் சென்று பிச்சை எடுத்து வந்துள்ளார். அதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சம்மந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக