Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 12 நவம்பர், 2012

சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக புதிய கூட்டணி கத்தரில் உருவானது


சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் எதிர்  படைகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. எதிர் படையினர் மற்றும் எதிர்ப்பாளர்களின் புதிய தேசிய கூட்டணி நேற்று கத்தார் நாட்டின் தோகா நகரில் தொடங்கப்பட்டது.

 இந்த புதிய கூட்டணியின் தலைவராக தலைநகர் டமாஸ்கஸ் மசூதியின் முன்னாள் இமாம் மௌசு அல் காதிப் செயல்படுவார்.

இந்த தேசிய கூட்டணி ஒரு அரசியல் கட்சியாக செயல்பட்டு சிரியா மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று இக்கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உள்நாட்டு போரால் பொதுமக்கள் கொல்லப்படுவது இந்த புதிய கூட்டணியால் தடுத்து நிறுத்தப்படுமேயானால் அது வரவேற்கக்கூடியது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகினறனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக