Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 12 நவம்பர், 2012

ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங்


இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய், இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது ஆப்கானிற்கு ஒத்துழைப்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், ஹமீது கர்சாயுடன் இன்று நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

உரம், நிலக்கரி, தாதுப்பொருட்கள் மற்றும் சிறு திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. போரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானின் மேம்பாட்டிற்காக  ரூ.10000 கோடி நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

மேலும் ஆப்கானின் வளர்ச்சி, வலிமை, ஒற்றுமை, இறையாண்மை ஆகிய விசயங்களில் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

ஆப்கானில் அரசியல் மற்றும் பாதுகாப்பில் மாற்றம் கொண்டு வர உலக நாடுகளின் ஒத்துழைப்பிற்கும் அப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தங்கள் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதால் இந்திய முதலீட்டாளர்கள் அங்கு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று ஹமீது கர்சாய் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக