Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 நவம்பர், 2012

தமிழகத்தில் 1.21 கோடி மக்கள் ஏழைகள்

2009-10ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக திட்டக் குழு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 7.37 கோடி ஏழை மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரில் 5.43 ‌கோடி ஏழைகளும், மகாராஷ்டிராவில் 2.7 கோடி ஏழைகளும் உள்ளனர்.

டெண்டுல்கர் கமிட்டி கொள்கையின்படி அளிக்கப்பட்ட இந்த பட்டியலை திட்டக்குழு நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது. சுகாதார, கல்வி, உண்ணும் உணவு ஆகியவற்றிற்காக செலவிடப்படும் தொகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மத்திய பிரதேசத்தில் 2.61 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 2.4 கோடி பேரும், ஆந்திராவில் 1.76 கோடி பேரும், ராஜஸ்தானில் 1.67 கோடி பேரும், ஒடிசாவில் 1.53 கோடி பேரும், கர்நாடகாவில் 1.42 கோடி பேரும், குஜராத்தில் 1.36 கோடி பேரும், ஜார்க்கண்டில் 1.26 கோடி பேரும், தமிழகம் மற்றும் சட்டீஸ்கரில் 1.21 கோடி பேரும், அசாமில் 1.16 கோடி பேரும் உள்ளனர். மிகவும் குறைந்த அளவாக அரியானாவில் 49.96 லட்சம் ஏழை மக்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக