Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 8 ஜூலை, 2012

முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரை துவங்கியது :பள்ளிவாயில்கள் தோறும் உற்சாக வரவேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மஹல்லா யாத்திரை நெல்லை மாவட்டம் தென்காசியி லிருந்து தொடங்கியது. பள்ளி வாசல்கள் தோறும் ஜமாஅத்தின ரும், நிர்வாகிகளும் சமுதாயத் தலைவருக்கு வரவேற்பு அளித்து சிறப்பித்தனர்.

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் தின் மாண்பை காக்கவும், அதனை வலிமைப்படுத்தும் வகையில் ஷரீஅத் பஞ்சாயத், பைத்துல்மால், மதரஸாக்கள், ஓராசிரியர் பள்ளி, ஆண் - பெண்களுக்கான தொழிற் பயிற்சிகள், மத்திய - மாநில அரசுகள் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு வழங்குகின்ற நலத் திட்ட உதவிகளை பெறுவதற் கான வழிகாட்டுதல் உள்ளிட்ட அனைத்தையும் உருவாக்கி ஒவ்வொரு மஹல்லாவும் முன்மாதிரி மஹல்லாவாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரையை மேற் கொள்வது என 2012ஏப்ரல் 14-ம் தேதி விழுப்புரத்தில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.

கடந்த 4-ம் தேதி செனனையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் இந்த மஹல்லா யாத்திரையை 7-ம் தேதி நெல்லை மாவட்டத்திலிருந்து தொடங்குவது என முடிவு அறிவிக் கப்பட்டது. அதன்படி, நேற்று (ஜூலை 7) நெல்லை மாவட்டம் தென் காசியிலிருந்து முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரை தொடங் கப்பட்டது. 

இது தொடங்குவதற்கான அறிவிப்பை தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவிப்பு செய்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், ஜமாஅத்தினரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அஸர் தொழுகையின்போது தென் காசி பெரிய தெரு ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசலில் மஹல்லா யாத்திரை தொடங்கப்பட்டது.

எம். முஹிப்புல்லாஷா வரவேற்று பேசினார். மஹல்லா ஜமாஅத்தினர் வரவேற்பளித்தனர். இமாம் எம்.எஸ்.எஸ். மஹ் மூது ஆலிம் துஆ ஓதினார். 

அதனைத் தொடர்ந்து நடுப்பேட்டை முஹைதீன் பள்ளி வாசலில் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி தலைவர் வி..டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், துணைத் தலைவர் எம். முஹம் மது இப்ராஹீம், செயலாளர் மீராஹுசைன், அன்சாரியா மகளிர் கல்லூரி முதல்வர் வி.எம்.என். லியாகத் அலி பைஸி, இமாம் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மஃரிப் தொழுகையின் போது சொர்ணபுரம் தெரு மஸ்ஜித் முபாரக்கில் வளர்பிறை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். பள்ளி செயலாளர் முஹம்மது சலீம், இமாம் கே.யு. காதர் ஒலி முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இஷா தொழுகையின் போது பஜார் பள்ளியில் வர்த்தகப் பிரமுகர்கள் உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். தலைவர் எம்.எஸ். காஜா மொய்தீன், அப்துல் ரஹ்மான், தவ்பா எலக்ட்ரிக்கல் டி.கே.எம். அப்துல் லத்தீப், சித்தீக் ஸ்டோர் ரிசர்வ்பா, 

தென்காசி நகர பிரைமரி தலைவர் அப்துல் அஜீஸ், துணைத் தலைவர் முஹம்மது முஸ்தபா, இளைஞர் அணி அப்துல் ஜலீல், கே.டி. காதர் மொய்தீன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரையில் தலைவர் பேராசிரியருடன் மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், சுதந் திர தொழிலாளர் யூனியன் மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் முஹம்மதலி, மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயலாளர் கடையநல்லூர் ஹைதர் அலி, மாநில பொதுக் குழு உறுப்பினர் வி.கே.புரம் கானகத்து மீரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக