Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 ஜூன், 2012

பள்ளி - கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: கல்வித்துறை நடவடிக்கை

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் பள்ளி-கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என கல்வி துறை உயர் அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடைசெய்ய வேண்டும் என அறிவுரை கூறி உள்ளனர். 

இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்களுக்கு சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதில் அவர் கூறிஇருப்பதாவது:- 

பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்தகூடாது. இதனால் மாணவ, மாணவிகளின் நேரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க பள்ளி வளாகத்தில் செல்போன் எடுத்து வரவும், பயன்படுத்தவும் கூடாது என தெரிவித்துள்ளார். 

இந்த அறிவுரையை ஏற்று சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி , கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு யாரும் இனி பள்ளி , கல்லூரி வளாகத்தினுள் செல்போன் பயன்படுத்தகூடாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த அறிவுரையை மீறி யாரும் கல்லூரி, பள்ளி வளாகத்தில் செல்போன் பேசினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கல்வி துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக