Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 ஜூன், 2012

தென்பொதிகை குற்றால சாரல் துவங்கியது ,அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

                                                               
                           
  தென்மேற்கு பருவமழை தீரவிமடைந்துவருவதையொட்டி ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்தது.கடந்த சிலநாட்களாக தென்மேற்கு பருவமழை கேரள வனப்பகுதிகளில் மட்டுமே பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மட்டுமே பெய்துவந்தது. தமிழக பகுதிகளில் கண்ணாமூச்சி காட்டிவந்த பருவமழை தற்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஐந்தருவி, குற்றாலம் போன்ற பகுதிகளில் பெய்துவருவதால் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்து வருகிறது.குற்றாலம் மெயின்அருவியில் சற்று குறைவாக தண்ணீர் விழுந்த போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி போன்ற அருவிகளில் தண்ணீரின்றி வெறிச்சோடி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியை நோக்கி படையெடுத்தவண்ணம் உள்ளனர். இப்பகுதியில் மழைமேகம் சூழ்ந்து பருவக்காற்று தீவிரமாக வீசிவருவதால் மேலும் மழை தீரவிமடையும் சூழல் நிலவிவருகிறது.
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக