Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 ஜூன், 2012

அதிசயம் ,ஆனால் உண்மை ; எந்த நிலையிலும் உயிரை பாதுகாப்பது அதனை படைத்தவனின் வல்லமையல்லவோ !

கடந்த 4 நாட்களுக்கு முன் ஆள்துளை கிணற்றிற்குள் விழுந்த 4 வயது சிறுமி மகியை ராணுவத்தினர் ‌போராடி மீட்டனர். 85 மணிநேரமாக மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். பின்னர் அவர் உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. 

அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மஹி, 4 என்ற சிறுமி, கடந்த 20ம் தேதி இரவு, தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அருகில் இருந்த 70 அடி ஆழமுள்ள ஆள் துளை கிணற்றில், தவறி விழுந்து விட்டாள். இந்த தகவல் தெரிய வந்ததும், மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுமிக்கு, கயிற்றை பிடித்து மேலே வரும் அளவுக்கு விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, ராணுவ வீரர்களும், அங்கு வந்தனர். சிறுமி விழுந்த இடத்துக்கு சற்று அருகில், மீட்பு குழுவினர் மிகப் பெரிய பள்ளத்தை தோண்டி மீட்புப்பணியை மேற்கொண்டனர்.. ஆள் துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் தோண்டப்படும் இந்த பள்ளத்தின் வாயிலாக, சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்று, அவளை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆக்சிஜன் செலுத்தப்பட்டது: சிறுமி, சுவாசிப்பதற்காக ஆள் துளை கிணற்றுக்குள், "ஆக்சிஜன்' செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலையில், "இன்னும் சில மணி நேரத்தில் சிறுமியை மீட்டு விடுவோம்' என, மீட்பு குழுவினர் தெரிவித்தார். மாலையில் நிலைமை தலைகீழானது. சிறுமி விழுந்த துளையில் அருகில் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டும் இடத்தில், கடினமான பாறைகள் நிறைந்திருப்பதால், விரைவாக பள்ளம் தோண்ட முடியவில்லை. இதனால், கடந்த நான்கு நாட்களாக 70 அடி பள்ளத்தில் சிக்கியிருக்கும் மஹியின் கதி என்ன ஆகும் என கவலை உருவானது.

மீட்பில் தாமதம்: மகியை நெருங்க சில அடி தூரம் இருந்த நிலையில் அங்கு கடுமையான பாறைகள் இருந்ததால் மீட்டு பணியில் தாமதம் ஏற்பட்டது. 
 தொடர்ந்து இன்று காலை முதல் நடந்த மீட்பு முயற்சிக்குப்பின்னர் கடந்த 85 மணிநேர போராட்டாத்திற்கு பிறகு மதியம் 1.45 மணியளவில் மகி மீட்கப்பட்டார். தற்போது மகியை அங்கு தயார் நிலையில் வைத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக