Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 ஜூன், 2012

கேட்பதற்கே சந்தோசமாக இருக்கின்றது ,சுத்தமாக இருக்க அரசு அதிரடி உத்தரவு













சுத்தம், நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அனைத்து பள்ளிகளும் உரிய நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் சுத்தமாகவும், நேரம் தவறாமலும் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் தினமும் சுத்தமாக சீருடை அணிந்து வர வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
தரமான கல்வியை வழங்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு பசுமையாக வைக்க வேண்டும். மாணவர்களின் கற்கும் திறனை கண்காணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து ஒவ்வொரு மாணவரின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக