Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 5 ஜூலை, 2013

கல்வி முறையில் மாற்றம் வேண்டும் : உச்ச நீதிமன்றம்


"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது.

இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பாளையில் கருத்தாளர்களுக்கான கருத்தரங்கம் நேற்று ஆரம்பமானது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு பாட வாரியாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது.


இந்த பயிற்சிக்கான முதன்மை கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது. முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்தார்.

ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். முனைஞ்சிபட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கவின் துவக்கி வைத்தார். ஆர்.எம்.எஸ்.ஏ ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகராஜன், செல்வராஜன் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.


நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள் தொகுத்து வழங்கினார். கருத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
இப்பயிற்சி இன்றும் (5ம் தேதி) தொடர்ந்து நடக்கிறது. இப்பயிற்சி பெறும் கருத்தாளர்கள் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

வியாழன், 4 ஜூலை, 2013

தமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் (DAIRY TECHNOLOGY ) பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம்,

சி.எம்.சி., வேலூர்,

எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேசன், சென்னை,

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை,

என்.டி.டி.பி., ஈரோடு,

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,

விவசாய கல்லூரி மற்றும் ஆய்வு மையம், கோயம்புத்தூர்,

தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லூரி, சென்னை,

கால்நடை கல்லூரி மற்றும் ஆய்வு மையம், நாமக்கல்,

சென்னை கால்நடை கல்லூரி, சென்னை,

இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் நியூட்ரிசன், காட்டுப்பாக்கம்,

 பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், ஈரோடு,

விவசாயிகள் பயிற்சி மையம், காட்டாங்குளத்தூர்

ஆகியவற்றில் பால்வளம் தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன

24 அமைப்புகளின் கூட்டமைப்பு எனும் பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் --- எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி .


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! விரைந்து ஓடுகிற ஓட்டத்தில் சில பேர் சில துண்டுச் சீட்டுகளை வீசிவிட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடங்களுக்கும் போய்சேர்ந்துவிடுவார்கள். ஆனால், துண்டுச் சீட்டுகளின் சேட்டை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கிவிடும். அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் புயலாய் உருவெடுத்து பூசல்களை உருவாக்கி சலனமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகத்தையே அலைக்கழித்துவிடுகிற நிகழ்வுகளும் நடந்துவிடும். யார் காரணம்? என்று அறிந்து அவர்களிடம் போய்க் கேட்டால் ‘‘நாங்கள் ஓடுகிற ஓட்டத்தில் எந்தச் சீட்டை எறிந்தோம் எனத் தெரியவில்லை; யார் அவைகளை எடுத்துப் படிக்கச் சொன்னது?’’ என்று கேட்பார்கள்.

பிறைநெஞ்சே! அதைப் போலத்தான் நம் சமுதாயத்தில் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைப்புச் செய்கிறோம் எனக் கூறிக் கொண்டு ‘இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு’’ என்ற பெயரில் இயங்குவதாகச் சொல்லி, ஓடுகிற ஓட்டத்தில் சம்பந்தமில்லாமல் நம் இயக்கப் பெயரை நமது தலைமையின் அனுமதியின்றியே பயன்படுத்தி துண்டுச் சீட்டுகளைப் பரப்பிவிட்டு அண்மையில் கோவை நகரில் ஒரு பூசலை உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டமைப்பின் பொதுக் கூட்ட பிரசுரத்தில் ஒரு தனிநபரின் பெயரை ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என அடையாளப்படுத்தியுள்ளதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் தலைமைக்குத் தகவல் தந்தார்கள்.

நானும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அப்போலோ ஏ.கே. முஹம்மது ஹனீபா அவர்களிடம் விளக்கமாய் பேசினோம்; தனக்கு தெரிவிக்காமலேயே நோட்டீஸ் போடப்பட்டதாகவும் உடனே தலையிட்டு நோட்டீஸ் விநியோகத்தைத் தடுத்து நிறுத்திவிடுவதாகவும், முடிந்தால் இப்போதே வேறு நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்வதாகவும் சொல்லி எங்களை அமைதிப்படுத்தினார். இது முதல் தடவையும் அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதுபோன்று வேண்டுமென்றே நமது இயக்கத்தின் பெயரை வம்புக்கு இழுத்து, பிறகு வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மீண்டும் அதே விளையாட்டை கோவை நிகழ்ச்சியிலும் ஏன் காட்டியிருக்கிறார்கள்? என்றுதான் புரியவில்லை. நாங்கள் இருவரும் விளக்கமாய் பேசிய பிறகும், அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு நிகழ்வுற்ற அந்த நிகழ்ச்சியில் இவரே தலைமை தாங்கி, அந்த தனிநபரின் பெயரைச் சொல்லி உரையாற்ற அழைக்கிறபோது ‘‘தேசிய பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என்றே அழைத்திருக்கிறார் என்றால் ‘ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் சமுதாயத்தில் குழப்பம் செய்யத் தொடங்கிவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நாம் எதிலும் தெளிவாக இருக்க விரும்புகிறோம். இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பில் நாம் இல்லை. அதனால் அதற்கு நாம் எதிர்ப்பும் இல்லை. இக்கூட்டமைப்பில் 22 அமைப்புகள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் இத்தனை அமைப்புகள் இருக்கின்றன என்று சொன்னால் அதனால் பெருமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் 60 அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றனவா? என்று இப்போது ஏளனம் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டனர் இதுதான் நிதர்சனமான உண்மை.

முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதில் யாரையும்விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறைந்ததல்ல. ஆனால், சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பில் நாம் இணைந்திருக்க முடியாததற்கு முக்கிய காரணங்கள் உண்டு. 1. முஸ்லிம் சமுதாயத்தில் மஹல்லா ஜமாஅத் எனும் பாரம்பரிய கட்டமைப்பு எல்லா ஊர்களிலும் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதனைச் சிதைப்பதற்கோ, பிளவுபடுத்துவதற்கோ, தனி திருமண பதிவு (தப்தர்), தனி கப்ருஸ்தான் என தனித்தனியாக உருவாக்கிக்கொண்டு போட்டி ஜமாஅத் முறையை உண்டாக்குவதற்கோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு காலத்திலும் உடன்படாது. மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையைப் பேணி வாழ்கிற வாழ்க்கைதான் இஸ்லாம் காட்டுகிற வாழ்வுமுறை. இவ்வாழ்வு முறைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தச் செயலையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஏற்காது. 2. மார்க்க விஷயங்களில் மார்க்க அறிஞர் பெருமக்களான சங்கைமிகு உலமாக்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதலை, மார்க்கச் சட்ட விளக்கங்களை ஏற்றுச் செயல்பட வேண்டும். அவரவர்களின் சிற்றறிவுக்கேற்ப புதுப்புது எதிர்ப்புகளையும், நவீன ஆய்வுகளையும் தெரிவித்துக் கொண்டு குழப்பங்கள் உருவாக்குவதை நாம் அனுமதிக்கவியலாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு நிலைபாடுகளிலும் நம்மைப் போன்று தெளிவாகவும், உறுதியாகவும் இருந்துவிட்டால் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. கூட்டமைப்பில் அத்தகைய உறுதிப்பாடு ஒட்டுமொத்தமாக இல்லாததால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அந்த கூட்டமைப்பில் இல்லை என்கிறோம். தனிப்பட்ட முறையில் நாம் யாருக்கும் எதிரியுமல்ல; பகையுமல்ல. நம்முடைய இந்த நிலைபாட்டை தெளிவாக்கிய பிறகும், சென்ற மாதம் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் பெயரை வேண்டுமென்றே பயன்படுத்தி, நம்முடைய அதிருப்தியைக் காட்டிய பின் ‘‘இனிமேல் அப்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லப்பட்டது. இப்போது கோவையிலும் அதே போன்று வேண்டுமென்றே பயன்படுத்தியது குழப்பம் செய்வதற்கான பிடிவாதத்தையே காட்டுகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் தொலைபேசி மூலம் மிகவும் கண்டிப்புடன் பேசிய பிறகும், அவரும் திருத்திக் கொள்வதாக உறுதியளித்த பிறகும் அவரே மேடையில் தலைமையேற்று நடத்திய நிகழ்ச்சியில் ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர்’’ என்று குறிப்பிட்டு ஒரு தனிநபரை பேசுவதற்கு அழைத்து அங்குள்ள நம்முடைய மாவட்ட நிர்வாகிகளை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறார். இப்படி வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்குகிற இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்ட மேடையை முற்றுகையிடப் போவதாக நம்மிடம் அனுமதி கேட்ட மாவட்ட நிர்வாகிகளை நாம் அமைதிப்படுத்தியிருக்கிறோம். ‘‘முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு’’ என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்குவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

ஒரு அரசியல் இயக்கத்தை அனுமதித்து அங்கீகரிப்பதும், அதனை முறைப்படி அறிவிப்பதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உரித்தான உரிமை. அதன்படி ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இயக்கத்தைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஏற்று, கேரள மாநிலத்தில் 5 அமைச்சர்களையும், 2 எம்.பி.க்களையும், 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசின் அமைச்சரவையில் ஒருவர் இடம் பெற்றிருப்பதையும் கருத்தில் கொண்டு அரசியல் அங்கீகாரம் வழங்கி தனிச் சின்னமாக ‘‘ஏணி’’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் புறந்தள்ளி எந்த தனிநபரோ, எந்த அமைப்போ அத்துமீறுமானால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விடும் என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்க விரும்புகிறோம். அரசியல் பணிகளில் தூய்மை, வாய்மை, நேர்மை எனும் நேர் கோட்டுப் பாதையினை வகுத்தளித்து, சமுதாயப் பணிகளில் உண்மை, பணிவு, துணிவு போன்ற அருங்குணங்களையே தனதாக்கிக்கொண்டு வாழ்ந்து மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள்தான் இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையிலும் மிளிர்கின்றன, இப்போதும் தொடர்கின்றன; இதனை எவரும் மறுத்திட முடியாது. அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அன்பு பாராட்டி, நேசக்கரம் நீட்டி, பாச உணர்வுகளைப் பகிர்ந்து வல்ல இறைவனுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக, அவனிடமே உதவி கோரியவர்களாக நாம் நமது பயணத்தைத் தொடர்கிறோம். இப்படித் தொடர்கிற நமது பயணத்தை எவரும் கோழைகளின் பயணம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். பயணத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டியதாகிவிடுகிறதா? அவைகளை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதையும் அறிந்தே இருக்கிறோம். இருந்தபோதிலும், நிதானமும், நியாய உணர்வும், அடக்கமும், அமைதியும் நம்மை முன்னெடுத்துச் செல்கின்றன. அதனாலேயே சீண்டாதீர்கள் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைப்பது நல்லது என எண்ணி நமது வழியில் பயணத்தைத் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்,பிறைமேடை

புதன், 3 ஜூலை, 2013

செங்கல் சேம்பரில் கொத்தடிமைகளை மீட்க 9 குடும்பத்தினர் மனு


திருப்புத்தூரில் செங்கல் சேம்பரில், கொத்தடிமைகளாக உள்ள 29 பேரை மீட்க கோரி, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.
திருப்புத்தூரில்,காரைக்குடி ரோட்டில் செங்கல் சேம்பர் செயல்படுகிறது. இங்கு, 16 குடும்பங்களை சேர்ந்த 52 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தனர். இவர்களை மீட்ககோரி, தேவகோட்டை ஆர்.டி.ஓ., கணேசனிடம் புகார் மனு அளித்தனர்.

நேற்று முன்தினம்,சேம்பரில் ஆய்வு செய்த, ஆர்.டி.ஓ., கணேசன், தாசில்தார் அமிர்தலிங்கம் ஆகியோர், கொத்தடிமைகளாக இருந்த, 7 குடும்பத்தை சேர்ந்த 23 பேரை மீட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பினர்.

நேற்று மறவமங்கலம் அருகே கழுகாடியை சேர்ந்த 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர், கிருஷ்ணன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் வந்தனர். திருப்புத்தூரில் உள்ள சேம்பரில் தாங்களும், கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளதால், எங்களையும் மீட்க கோரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்புவிடம் மனு செய்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, திரும்பி சென்றனர். இவர்கள், எஸ்.பி., அஸ்வின் கோட்னீசிடமும் மனு அளித்தனர்.

தலாக் சான்றிதழ் வழங்கும் விசயமாக அதிமுக கட்சியை சார்ந்த பதர் சயீத் தொடர்ந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க பேராசிரியர் கே.எம்.கே. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்


தலாக் சான்றிதழ் வழங்க காஜிகளுக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்கக் கோரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் வஃக்பு வாரியத் தலைவரும், முன்னாள் சிறு பான்மை குழு தலைவரு மான பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந் திருக்கும் பொதுநல வழக்கில், தன்னையும் எதிர் மனு தாரராக இணைக்க அனுமதிகோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவரும்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரு மான பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பதர் சயீத் தொடர்ந் திருக்கும் அந்த வழக்கு டபிள்யூ-பி 135339/2013 ஆக பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இஸ்லாத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து போன்ற பிரச்சினைகளில் தங்களை பாதுகாக்க சட்ட பூர்வமான உரிமைகள் இல்லை என்றும், முஸ்லிம் தம்பதி களுக்கு விவாகரத்து அளித்து மணமுறிவு சான்றிதழ் வழங்கு வதற்கு அவர்களின் பிரச் சினைகளுக்கு சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடை முறையில் இதுபோல் நடப்ப தில்லை என்றும், சில நேரங்களில் மனைவிக்கு தெரியாமலேயே கணவன் தலாக் கூறி காஜிகளிடம் திருமண முறிவுக் கான சான்றிதழ் பெற்றுவிடு கிறார் என்றும் 1880ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட காஜிகள் சட்டப்படி காஜிகளுக்கு முஸ்லிம் பெண்களின் மண முறிவுக்கான சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக மணமுறிவு சான்றிதழ் வழங்க காஜிகளுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் பதர் சயீத் கோரியுள்ளார்.

3 எதிர் மனு தாரர்கள்
அந்த வழக்கில் மத்திய அரசு சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளரை முதல் எதிர் மனு தாரராகவும், தமிழக அரசு பிற்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை செயலாளரை 2வது எதிர் மனுதாரராகவும், தமிழக அரசு தலைமை காஜியை 3வது எதிர் மனு தாரராகவும் பதர் சயீத் சேர்த்திருந்தார்.

இ.யூ. முஸ்லிம் லீக் கண்டனம்
இந்த வழக்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரி வித்து அறிக்கை வெளி யிட்டார். அது மணிச்சுடர் நாளிதழில் 06.06.2013 அன்று வெளியிடப் பட்டுள்ளது.

அந்த கண்டன அறிக்கையில் பதர் சயீத் தொடர்ந்த வழக்கின் உள்நோக் கம் என்ன என்றும், ஷரியத் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வர முயற்சியா எனவும் கேட்டிருந்த தலைவர் பேராசிரியர், அந்த வழக்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தன்னை ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு இந்த வழக்கை சந்திக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

பிரமாணப் பத்திரம் தாக்கல்
அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தன்னை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளர் மற்றும் தமிழக தலைவர் என்ற ரீதியில் பதர் சயீத் வழக்கில் தன்னை 4வது எதிர் மனு தாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி யை கோரி பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேற்று உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திர மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது; இ.யூ. முஸ்லிம் லீக் 72 வயதாகும் நான் அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்திடம் தன்னை பதிவு செய்திருக்கிறது.

கேரளாவில் அது அங்கீகரிக் கப்பட்ட கட்சி. சுதந்திர இந்தியா வில் நடைபெற்ற 15 மக்களவை தேர்தல்களில் 2வது மக்களவை தவிர அனைத்து மக்களவை களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதித்துவம் பெற்று தனது தனித்தன்மையை காட்டியிருக்கிறது. தற்போது கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆளும் கூட்டணி கட்சியாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர், மாண்புமிகு இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவிலுள்ள பழமை யான கட்சிகளில் ஒன்று. அதற்கு சிறப்பான வரலாறு உள்ளது. அது இந்தியா முழுவதும் கிட்டதட்ட எல்லா மாநிலங்களிலும் ஜனநாயக இந்தியாவின் தேர்தல் நடை முறையில் துடிப்புடன் பங் கேற்றுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம் களின் உண்மையான மதசார் பற்ற அரசியல் பிரதிநிதியாக அது அங்கீகரிக்கப்பட்டிருக் கிறது. இந்திய முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினரின் கவுரவம் மற்றும் மதக் கலாச்சார அடையாளங்களை பாது காப்பதிலும் மேம்படுத் துவதிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது தலைமை யான குறிக்கோள்களில் ஒன்றாக பணியாற்றுகிறது.

நான் ஒரு முஸ்லிம்
நான் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராகவும், வரலாற்றுத் துறை தலைவராகவும் பணி யாற்றி இருக்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் நான் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். 14 வது பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேலூர் பாராளு மன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்க ளவை உறுப்பினராக 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக் கிறேன்.

நான் இஸ்லாமிய மார்க் கத்தை அனுஷ்டிக்கும் முஸ்லிம். பதர் சயீத் அம்மையார் தொடர்ந்திருக்கும் பொது நல வழக்கான ரிட் மனு குறித்து ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

தமிழக முஸ்லிம் பெண் களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அந்த வழக்கில் இந்தியாவில் குறிப் பாக தமிழகத்திலுள்ள காஜி களுக்கு தலாக் மணமுறிவு சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை என்றும், எனவே தலாக் தொடர்பாக சான்றிதழ்களையும் மற்றும் ஆவணங்களை வழங்கு வதற்கும் எதிராக காஜிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருக்கிறது. மேலே சொன்ன எனது சமூக நிலைபாடு காரணமாகவும் மத சிறுபான்மையினர் குறித்த பல்வேறு பிரச்சினைகளில் எனக்குள்ள ஈடுபாடு காரண மாகவும் தற்போதைய ரிட் மனுவில் எனக்கு ஈடுபாடு உள்ளது.

ஷரீயத் சட்டப்படிதான் காஜிகள் நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள் என்று நான் கண்ணியத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஷரீஅத் அனைத்து முஸ்லிம் களையும் முழுமையாக கட்டுப் படுத்தக்கூடியது.

தனியார் சட்டங்கள் அத்தியாவசிய தேவை என்ப தோடு, அவை எல்லா வித மதிப்புடனும் பாதுகாத்து பேணப் படுகின்றன.

விரிவான எதிர் மனு
இப்பேர்பட்ட சூழ்நிலையில் மேதகு உயர் நீதிமன்றத்தின் தன்னுரிமை அதிகாரப்படி என்னை ஒரு எதிர் மனு தாரராக இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஒரு விரிவான எதிர் பிரமாண பத்திரத்தை, அதற் கான ஆதரவான ஆவணங்களு டன் தாக்கல் செய்ய உரிமை அளிக்கப்பட வேண்டுகிறேன்.

இதுகாரும் நான் கூறியபடி பதர் சயீத் அம்மையார் தொடர்ந்திருக்கும் வழக்கில் என்னை ஒரு பார்டியாக இணைப்பதற்கு அவசியமான வன் மற்றும் பொருத்தமானவன். எனவே அந்த வழக்கில் என்னை 4வது எதிர் மனு தாரராக இணைக்க கோரு கிறேன். எனது கோரிக்கை நிறை வேற்றப்படும் பட்சத்தில் அதனால் யாருக்கும் குறிப்பாக ரிட் மனு தாரர் அல்லது 3 எதிர் மனுதாரார்களுக்கு எந்த விதமான பாதிப்போ சிரமமோ ஏற்படாது.மாறாக எனது இந்த பிரமாண பத்திர கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் சிறுபான்மையின சமூகத்தின ரின் தனியார் சட்டம் குறித்த மிக முக்கியமான மற்றும் உணர்வு பூர்வமான விஷயத்தை தொடக்கூடிய அந்த ரிட் மனுவின் மீது முடிவெடுக்க என்னால் உதவ முடியும். எனவே என்னை 4வது எதிர் மனு தாரராக இணைக்க கோரி நீதியை நிலைநாட்ட விழை கிறேன்.

மேற்கண்டவாறு பேராசிரி யர் கே.எம் காதர் மொகிதீன் தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கிறார்.

வழக்கறிஞர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கே. அசோக்குமார் மற்றும் கே. கணேசன் ஆகியோர் பிரதிநிதித் துவம் செய்கிறார்கள்.

இந்த வழக்கு தெடர்பான அனைத்து பணிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் கவனித்து வருகிறார்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராக எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் திற்கு நாடாளுமன்ற மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் களை நியமன அடிப்படையில் தமிழக அரசு அறிவிப்பு செய்து வக்ஃபு வாரிய தலைவர் தேர்தலையும் நடத்தி தமிழ்மகன் உசேன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், வஃக்பு வாரியத்திற்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப் பினர் பிரதிநிதிகளை நியமன முறையில் அறிவிப்பு செய்வது செல்லாது என்றும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித் தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ. பிரதி நிதிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

எம்.பி. பிரதிநிதிகளாக எம்.அப்துல் ரஹ்மான், ஜே.எம். ஆரூண் ஆகியோரும், எம்.எல். ஏ.க்களில் முஹம்மது ஜான், அஸ்லம் பாஷா ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் போட்டியின்றி இவர் கள் நால்வரும் தேர்வு செய்யப் பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் சான்றிதழ் :
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை இன்று தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செய லாளரும், தேர்தல் அதிகாரியு மான முனைவர் அருள்மொழி யிடமிருந்து பெற்றுக் கொண் டார். அப்போது இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர் திருப்பூர் எம்.ஏ. சத்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்வு செய்யப்பட்ட சான்றி தழுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் வருகை தந்த எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தேர்வு சான்றிதழை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனிடம் அளித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், திருப்பூர் எம்.ஏ. சத்தார், வடசென்னை மாவட்ட இ.யூ. மாவட்ட அமைப்புச்செயலாளர் பிலால் ஹுசைன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சென்னை வாழ் முத்துப்பேட்டை ஜமாஅத் செயலாளர் ஜாபர் அலி, அதிராம்பட்டினம் ஜமாஅத் தலைவர் ஷேக் நஸ்ருதீன், அமைந்தகரை சாதிக், பத்திரிகையாளர்கள் அலி, கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைவர் தேர்தல்
தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதல் கூட்டம் வரும் 10-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் நடைபெறுகிறது. அப்போது தலைவர் பதவிக் கான தேர்தல் நடைபெறும் என்று வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் அப்துல் ராஸிக் அறிவித் துள்ளார்.