Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 31 மார்ச், 2013

முஸ்லிம்களுக்கு 10%தனி இடஒதுக்கீடு,பூரண மதுவிலக்கு ; அப்பாவி சிறைவாசிகள் விடுதலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்ரல் 2–ந்தேதி நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்


இது குறித்து மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இடஒதுக்கீடு
இந்தியாவில் 13.4 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மாநில அரசு வழங்குகின்ற 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை முன்பு வருகிற 2–ந்தேதி காலை 10–30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் சபையினர் கலந்து கொள்கிறார்கள்.

தென்காசி ரெயில்வே மேம்பால பணி
தென்காசி ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்தவேண்டும். தென்காசியில் இருந்து ஈரோடு, தஞ்சாவூர், நாகூர் ஆகிய ஊர்களுக்கு மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் அகல ரெயில் பாதையான பிறகு நிறுதப்பட்டுள்ளன. எனவே அந்த ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும்.

கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஆர்.சி. புத்தகம் வைத்து இருக்கவேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். முருகன்குறிச்சியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர் முகமது இஸ்மாயில், மாவட்ட தலைவர் துராப்ஷா, வர்த்தக அணி செயலாளர் பாட்டபத்து முகமது அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Power Finance Corporation நிறுவனத்தில் அக்கவுண்டென்ட பணி


மத்திய அரசுக்கு சொந்தமான Power Finance Corporation நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer(E2) MS Programmer (Oracle ERP Apps.Technical)

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.24,900 - 50,500

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர எம்.சி.ஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Jr.Accountant

காலியிடங்கள்: 12

சம்பளம்: ரூ.16,000 - 35,500

வயதுவரம்பு: 34க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.காம் முடித்திருக்க வேண்டும். மேலும் 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மொழி பெயர்பாளர் (Translator Hindi)

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.15,500 - 34,500

வயதுவரம்பு: 31க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுநி்லை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட ஹிந்தி மொழி பெயர்பாளராக பணியாற்றிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant(HindI) (w3)

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.11,500 - 26,000

வயதுவரம்பு: 33க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்புகள் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC/ST/PH பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.pfcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2013

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பதிவிறக்க நகல்களை அனுப்ப வேண்டிய முகவரி: The.Sr.Manager(HR), Power Finance Corporation Ltd, Urjanidhi 1, Barakhamba Lane, New Delhi - 110001.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப விவரங்களை அஞ்சலில் அனுப்புவதற்கான கடைசி தேதி: 20.04.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pfcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கல்வி கட்டணம் வழங்குவதில் அரசு காலதாமதம் நிதி நெருக்கடியில் பள்ளிகள்


அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை, அந்தந்த பள்ளிக்கு அரசு வழங்காததால், பள்ளிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 7,000க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த, 2007 - 08க்கு முன் வரை, இப்பள்ளிகளில் கல்விக் கட்டணமாக, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், 32.50 ரூபாய், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், 47.50 ரூபாய், மேல்நிலைக் கல்வி வகுப்புகளில், 73 முதல், 273 ரூபாய் வரை, பிரிவுகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக நன்கொடை, 25 ரூபாய் வரை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகளில் வசூல் செய்யப்படும் இக்கட்டணங்களைக் கொண்டே, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், எழுதுபொருள் செலவு மட்டுமின்றி, மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி, கலை இலக்கிய விழா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வந்தனர். அரசு பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில், பல மடங்கு அதிகமாக வசூல் செய்யும் நிலை, பல பள்ளிகளில் காணப்பட்டது. கட்டாய வசூல் மற்றும் அதிகப்படியான கட்டண வசூல் குறித்து, தமிழகம் முழுவதும் பரவலாக புகார் எழுந்தது. இதனால், தமிழக அரசு, 2007 - 08ம் கல்வியாண்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் நன்கொடை வசூல் கட்டாயம் செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது. கல்விக் கட்டணத்தில் செய்து வந்த செலவுகளுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை போக்கும் வகையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை தமிழக அரசே பள்ளிகளுக்கு திருப்பி வழங்கி வந்தது. நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையிலும், இதுவரை கல்விக் கட்டணத்தை, பள்ளிகளுக்கு தமிழக அரசு திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், அரசு பள்ளிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: நன்கொடை வசூலிப்பதில் கெடுபிடி காட்டுவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி நிலை, நல்ல நிலையில் இருப்பதில்லை. ஆனாலும், பள்ளிகளில் உள்ள, பராமரிப்பு செலவு, விளையாட்டு விழா, கலை இலக்கிய விழா என, அனைத்து செலவுகளுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகமே செலவிட வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு தேர்வின் போது, ஜெனரேட்டர் வாடகை எடுத்த பணம் கூட, ஓராண்டாகியும் வழங்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் கல்விக் கட்டணமும் ஓராண்டாகியும் திரும்ப வழங்கப்படவில்லை. அனைத்து பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதே நிலை நீடித்தால், வரும் கல்வியாண்டு துவக்கத்திலேயே, அனைத்து அரசு பள்ளிகளும், மாணவர்களிடம் வசூல் வேட்டையில் இறங்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு தேர்வுத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை

தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன. இல்லை எனில், வரும் ஆண்டுகளில், இந்த இரு துறைகளிலும், பெரிய குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டுவிடும் என, துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுத்துறை இயக்குனரகம், 1975ல் ஏற்படுத்தப்பட்டபோது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதோ, அதே பணியிடங்கள் தான், இன்றைக்கும் இருக்கின்றன. இயக்குனரகம் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் சேர்த்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500. இதில், 120 பணியிடங்கள், காலியாக இருக்கின்றன.

கடந்த 98ல், பிளஸ் 2 தேர்வை, 3.63 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, ஐந்து லட்சம் பேரும் எழுதினர். ஆனால், நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, மூன்று மடங்கும், 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, இரு மடங்கையும் தாண்டிவிட்டது.

மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என, ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்ட தேர்வுகளை, தேர்வுத்துறை நடத்தி வருகிறது. அனைத்து தேர்வுப் பணிகளும், ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஏற்ப, துறையை வலுப்படுத்தவோ, காலி இடங்களை நிரப்பவோ, கூடுதலாக புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு.

கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ச்சியாக ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தேர்வுத்துறை திணறி வருவதாகவும், அவர்கள் கூறுகின்றனர். கடந்த 28ம் தேதி நடந்த 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்ப தேவையான வங்கி செலானை, மாணவர்களுக்கு வழங்காதது, இதுவரை நடந்த குளறுபடிகளில், உச்சகட்டமாக உள்ளது.

கேள்வித்தாள் அச்சடிப்பது, வினியோகம் உள்ளிட்ட பணிகளை, வேறு யாரிடமும் ஒப்படைக்காமல், இயக்குனரே, நேரடியாக கவனிப்பதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், "தனக்கும் எதுவும் தெரியவில்லை; இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்" என, இயக்குனர் வசுந்தராதேவி கூறுவது, விந்தையாக உள்ளது.

தேர்வுத்துறை நிலை இப்படி என்றால், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட, டேட்டா சென்டரின் நிலைமை, இன்னும் மோசமாக உள்ளது. இந்த மையம், நிதித்துறையின் கீழ் இருக்கிறது. ஆனால், கல்வித்துறை பணிகளை செய்து வருகிறது. "தம் துறை பணிகள் நடக்காதபோது, நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்" என்ற மன நிலையில், நிதித்துறையும், "பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படாத போது, நாம் என்ன செய்ய முடியும்" என்ற நிலையில், கல்வித்துறையும் உள்ளன.

இந்த பிரச்சனையை தீர்க்க, டேட்டா சென்டரை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து, இந்த மையத்தை வலுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மையத்தில், வெறும் ஏழு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தான் உள்ளனர். 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி. தகவல்களை தொகுத்து, மேற்பார்வையிடும் அதிகாரிகள் நிலையில், மூன்று பணியிடங்கள் காலி. இந்த பதவியில் கூட, ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர்.

கம்ப்யூட்டர்களும், தொழில்நுட்பங்களும், மிக, மிக பழமையானவை என, துறை ஊழியர்கள் வேதனைப்படுகின்றனர். நடப்பு ஆண்டில், மதிப்பெண்களை தொகுக்கும் பணிக்காக, 70 பேரை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர். ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு, ஒரு ரூபாய் என்ற வீதத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வகையில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, டேட்டா சென்டர் செலவழிக்க உள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணியில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வது, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமா என, தெரியவில்லை.

டி.என்.பி.எஸ்.சி.,-டி.ஆர்.பி., போன்ற அமைப்புகள், விடைத்தாள்களை, "ஸ்கேன்" செய்து, நவீன முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மிக விரைவாக, தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றன. அதேபோன்ற தொழில்நுட்பத்தை, தேர்வுத்துறையிலும் புகுத்த வேண்டும் என, துறை அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சனி, 30 மார்ச், 2013

பொறியியல் மாணவர்களுக்கு இந்திய கலாசார பாடம்


 "தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன், இந்திய வரலாறு, சுதந்திர போராட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளோம்" என டில்லி அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா தெரிவித்தார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில் நுட்ப கல்லூரி, கட்டட கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தார். விழாவில், முதலிடம் பிடித்த, 102 மாணவர்களுக்கு, தங்க பதக்கங்களையும், 4,513 மாணவர்களுக்கு, பட்டங்களையும் வழங்கி, டில்லி, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா பேசியதாவது:

சர்வதேச போட்டிக்கு ஏற்ப, இளைஞர்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உயர் கல்விக்கு உள்ளது. தொழிற்கல்வி, பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. அதே நேரத்தில், சமூகம் சார்ந்த அறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

ஒவ்வொரு இளைஞனும், தன் பொது அறிவை, உலக போட்டிக்கு ஏற்ப, வளர்த்து கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த, கல்வி அறிவை உருவாக்க வேண்டும். இல்லையேல், கல்வியால், எந்த பயனும் இல்லை.

நம்நாட்டில், தொழிற்கல்வியை, தனியார் நிறுவனங்களும், அரசும் அளித்து வருகின்றன. அரசு கல்வி நிலையங்கள், அரசு தரும் மானிய தொகையில் இயங்குகின்றன. தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை நம்பி உள்ளன. நிதியாதாரத்தை மேம்படுத்த, புதிய முயற்சிகளை அரசும், தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

போதிய நிதியாதாரம் இல்லாமல், உயர்கல்வியை மேம்படுத்த முடியாது. இப்பிரச்னைக்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், தீர்வு ஏற்படும் என, நம்புகிறோம். ஆசிரியர் பற்றாக்குறை, போதிய அடிப்படை வசதியின்மை இல்லாதது போன்றவை, உயர்கல்வித் தரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த விஷயத்தில், இந்தியா, உலக நாடுகளில் முன்னணியில் உள்ளது.

உயர் கல்வியில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் வரலாறு, சுதந்திர போராட்டம் ஆகியவற்றை, இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. கலாசாரத்தை, வரலாற்றை அறிந்து கொள்வது அடிப்படை உரிமையாக உள்ளது.

இந்திய கலாசாரம் குறித்து, தனி பட்ட வகுப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மந்தா பேசினார்.

துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவை - ஏப்ரல் -02 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி விழிப்புணர்வு கருத்தரங்கம் சமுதாய ஆர்வலர்கள், அமீரக வாழ் தமிழக ஜமாஅத் பிரதிநிதிகள் திரளாக பங்கேற்பு!


அமீரக காயிதே மில்லத் பேரவை - துபாய் தேரா கிளையின் சார்பில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 66 - ஆவது நிறுவன நாள் , ஏப்ரல் - 02கோரிக்கை பேரணி விழிப்புணர்வு கருத்தங்கம் மற்றும் மறைந்த மாநிலசெயலாளர் கமுதி பஷீர் இரங்கல் பிரார்த்தனை கூட்டம் துபாய் - தேரா -அல் அயாத் ஹோட்டலில் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அறக்கட்டளை அறங்காவலர் அய்யம் பேட்டை வாலன்.ஜே .ஜெய்லானிபாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் களமருதூர்சம்சுத்தீன் ஹாஜியார் , தேரா பகுதி செயலாளர்கள்  குண்டு காசிம் ராஜாஜி, நெல்லை ஷேக் சிந்தா ,துபாய் கிளை மக்கள் தொடர்பு செயலாளர்ஜெ.முஹைதீன் பாட்சா ,அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர்ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,  ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மெளலவி கலீலுல்லாஹ் ஆலிம் அவர்கள் கிராத்துடன் நிகழ்ச்சிதுவங்கியது . விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத்அலி வரவேற்புரையாற்றினார் .நிகழ்ச்சிகளை ஷார்ஜா மண்டலசெயலாளர் தஞ்சை பாட்சா கனி  தொகுத்து வழங்கினார் .

அமீரக காயிதே மில்லத் பேரவையின் துபாய் மண்டல செயலாளர்முதுவை ஹிதாயத்துல்லா துவக்க உரையாற்றிய பின்பு ,பன்னாட்டுஇஸ்லாமிய இலக்கிய கழகத்தலைவர் கிளியனூர் இஸ்மத்  ,மதுக்கூர்முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் செயலாளர் சாகுல் ஹமீது ,பூதமங்கலம்ஜமாஅத் நிர்வாகி முஹைதீன் அப்துல்காதிர் ,அம்மாபட்டினம் ஜமாஅத்மௌலவி ஷேக் அப்துல்லா ,திட்டச்சேரி ஜமாஅத் சாதிக் ஃபைஜி,லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.எம்.ஜக்கரியா,கோட்டக்குப்பம்யஹ்யா மன்பஈ ஹஸ்ரத் ஆகியோர் கருத்துரை வழங்கினர் .

அமீரக காயிதே மில்லத் பேரவை அல்- கூஸ் பகுதி  செயலாளர்திண்டுக்கல் ஜமால் மைதீன் இன்றைய காலகட்டத்தில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக்கின் அவசியம் குறித்து விளக்கமாக உரையாற்றினார்.கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா தனது உரையில்மறைந்த கமுதி பஷீர் அவர்களின் சமூக பணிகள் குறித்தும் ,சிறைசாலைகளில்   நம் சமூதாய இளைஞர்களின் நிலை  குறித்தும்,அவர்கள் விடுதலைக்காக  இந்திய முஸ்லிம் லீக் மேற்கொள்ளும்சட்டப்பூர்வ போராட்டங்கள் குறித்தும், வி.களத்தூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி.எடுத்த சமாதான நடவடிக்க்கைகள் குறித்தும் மிக விரிவாக எடுத்துக் கூறினார் .

அமைப்புசெயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்முஸ்லிம்களுக்கான  இடஒதுக்கீடு போராட்டத்தில் முஸ்லிம் லீக் கண்டபோராட்ட களங்களையும்,அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பெற தாய்ச்சபையே காரணம் என்றும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக்கூறினார் .அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரைஎஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும்அதன் தலைவர்களும் சமுதாய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாங்குகுறித்தும் அதனால் ,சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் ,இடஒதுக்கீடு ,மதுவிலக்கு ஆகிய விசயங்களில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விளக்கினார் .

பொதுசெயலாளர் திருபனந்தாள் ஏ. முஹம்மது தாஹா அவர்கள் தனதுஉரையில் அமீரக காயிதே மில்லத் பேரவை அமீரகத்தில் செய்து வரும் சமுதாயப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் .

நிகழ்ச்சியின்இறுதியாக சிறப்புரையாற்றிய அமீரக காயிதே மில்லத் பேரவைதலைவர் 'சேவை செம்மல் ' குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தனத ுஉரையில் மறைந்த முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் கமுதி பஷீர்அவர்களின் இயக்க பணிகள் குறித்து உணர்ச்சி ததும்ப நினைவுபடுத்தியதோடு ஏப்ரல் - 02 தமிழக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறஇருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கைப் பேரணி வெற்றிபெற அமீரகத்தில் உள்ள தமிழக ஜமாஅத்தார்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்து கூறியதோடு, தமிழகத்தில் உள்ள நம் சொந்தபந்தங்கள் உற்றார் உறவினர்கள் ,ஜமாத்தார்கள் அனைவரையும் ஒற்றுமையோடு பேரணியில் கலந்து கொள்ள செய்து பேரணியின்கோரிக்கை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தஞ்சை பாட்ஷா கனி, அய்யம் பேட்டை குண்டு ராஜாஜி காசிம், ஆகியோருக்கும், துணை நின்ற இராமநாதபுரம் பரக்கத் அலி, ரஹ்மத்துல்லா, சஹாப்தீன், நெல்லை ஷேக் சிந்தா, வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

கருத்தரங்கில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் சார்பில் ஏப்ரல் - 02 அன்று நடைபெறும் முப்பெரும் கோரிக்கை பேரணி ,ஆர்பாட்டங்கள் சிறப்புற நடத்திட அரும்பாடுபட்டுவரும் மாநில மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்தகருத்தரங்கம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது .

2.ஏப்ரல் - 02 பேரணியில் சமுதாய மக்களை அனைவரையும் பங்கேற்கசெய்ய  தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் தயாராகஇருப்பது கண்டு இக்கருத்தரங்கம் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

3.தமிழகத்தில் முஸ்லிம் களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை உயர்த்திவழங்க தமிழக அரசையும், அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்திய முழுவதும் பல்லாண்டுகள் சிறைசாலைகளில்விசாரணைகைதிகளாக உள்ள அப்பாவிகளை விடுதலை  செய்யுமாறும்இந்திய  அரசையும் , தமிழக அரசையும் இக்கருத்தரங்கம் வலியுறித்திகேட்டுக் கொள்கிறது.அனைத்து தீமைகளுக்கும் மூளையாக விளங்கும்மதுவை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்  என மத்திய மாநிலஅரசுகளை அமீரக காயிதெமில்லத் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அமீரக காயிதே மில்லத்  பேரவை துணைத்தலைவர் காயல் நூஹுஹாஜியார் நன்றி கூற , துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது .மதுக்கூர் ஜமாஅத் தலைவர் ரஹ்மத்துல்லா, முத்துப் பேட்டை ஜமாஅத் தலைவர் ஃபசுல் ரஹ்மான், திருநெல்வேலி இஷாக், துபாய் சோனாப்பூர்கிளை செயலாளர் ரஹ்மத்துல்லா . சகாபுதீன் , தேரா பகுதி வி.களத்தூர்ஷாகுல் ஹமீது, அபுதாபி முஸஃபா  பகுதி செயலாளர்தேவிப்பட்டிணம் நிஜாம் அக்பர்,அய்யம்பேட்டை ஜாபர் அலி, மெஞ்ஞான சபையினர் உளிட்ட  அமீரகத்தில் உள்ள திருநெல்வேலி,ராமநாதபுரம்உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத் அங்கத்தினர்களும் திரளாககலந்துகொண்டனர் .

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு துபாயில் வரவேற்பு;மதுரை-துபாய் விமான சேவையை துரிதப்படுத்தவும் கோரிக்கை


பரோடா வங்கியின் நூறாவது வெளிநாட்டு கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள துபாய் வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு, அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் இக்குழுவினர் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மதுரை – துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த கோரிக்கையை விடுத்ததோடு, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் இந்த கோரிக்கை, நீண்ட காலமாக நிறைவேற்ற படாமல் இருப்பது குறித்தும் எடுத்து கூறினர். இந்த கோரிக்கையை செவியுற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசிதேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார்.

இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு நன்றி கூறிய நெல்லை S.S.மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்திய சேவை மேலும் தாமதமாகும் பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பில்,நெல்லை S.S.மீரான், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், விழாக் குழு செயலாளர் பரக்கத் அலி, ஈமான் அமைப்பின் விழா குழு செயலாளர்  ஹமீது யாசீன், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.