Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 31 மார்ச், 2013

முஸ்லிம்களுக்கு 10%தனி இடஒதுக்கீடு,பூரண மதுவிலக்கு ; அப்பாவி சிறைவாசிகள் விடுதலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்ரல் 2–ந்தேதி நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்


இது குறித்து மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இடஒதுக்கீடு
இந்தியாவில் 13.4 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மாநில அரசு வழங்குகின்ற 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை முன்பு வருகிற 2–ந்தேதி காலை 10–30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் சபையினர் கலந்து கொள்கிறார்கள்.

தென்காசி ரெயில்வே மேம்பால பணி
தென்காசி ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்தவேண்டும். தென்காசியில் இருந்து ஈரோடு, தஞ்சாவூர், நாகூர் ஆகிய ஊர்களுக்கு மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் அகல ரெயில் பாதையான பிறகு நிறுதப்பட்டுள்ளன. எனவே அந்த ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும்.

கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஆர்.சி. புத்தகம் வைத்து இருக்கவேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். முருகன்குறிச்சியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர் முகமது இஸ்மாயில், மாவட்ட தலைவர் துராப்ஷா, வர்த்தக அணி செயலாளர் பாட்டபத்து முகமது அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக