Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 அக்டோபர், 2012

ஜெம்மாலஜி (Gemology) துறை வேலை வாய்ப்புகள்


ரத்தினக் கற்கள், வைரங்கள், தங்க நகைத்தயாரிப்பு மற்றும் நகை வடிவமைப்பு போன்ற துறைகளை தொழில்நுட்ப ரீதியாக படிப்பது "ஜெம் மாலஜி'.
இன்றைய நிலையில் தொ ழில் நுட்பம் நன்கு வளர்ந் துள்ளதால், கணினி அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
விலையுயர்ந்த கற்களின் அமைப்பு மற்றும் பண மதிப்பு அடிப்படையில், அவற்றை அடையாளப்படுத்தி, தரப் படுத்தி மற்றும் வகைப் படுத்துவது ஒரு ஜெம்மால ஜிஸ்டின் பணியாகும். மேலும் அவை சேதமாகாமல் தடுக்கும் வழிகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். விலையுயர்ந்த கற்கள்(ஜெம்ஸ்) மற்றும் தங்க நகை தொழி லானது, இந்தியாவில் அதிக பணம் புரளும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவின் வைரத் தொழில்துறையானது, உலகளவில் புகழ்பெற்ற ஒன்று.
மதிப்புத் தரக்கூடியதாகவும், ஏற்றுமதிப் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் இருப் பதால் வைரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நமது குணாதிசயத்திலும், அதிர்ஷ்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பொரு ளாக விலையுயர்ந்த கற்கள் இன்றைய நிலையில் மதிக்கப் படுகின்றன.
மேலும், தங்கம் மற்றும் வைரங்கள் சேர்க்கப்பட்டு, புதிய புதிய டிசைன்கள் அவ்வப்போது அறிமுகப் படுத்தப்படுவதால், இத்துறை யில் நிபுணர் களுக்கான தேவை என்றும் உண்டு.
தேவைப்படும் பண்புகள்: சிறந்த கிரகிக்கும் திறன், கற்பனை மற்றும் படைப் பாக்கத் திறன், வண்ணப் பொருத்தம் பற்றிய அறிவு, அழகுணர்ச்சி, பாரம்பரிய வடிவமைப்புகளைப் பற்றிய அறிவு, கடின உழைப்புடன் சிறந்த தகவல்தொடர்புத் திறன் போன்றவை அவசியம். இவற் றுடன் மக்களின் ரசனைகள் மற்றும் மாறும் சூழலைக் கருத்தில்கொண்டு செயல்படு பவர்களுக்கு உகந்த துறை இது.
ஒருவர் இத்துறையில் வடிவமைப்பாளர், மேலாளர், உற்பத்தியாளர், ஆராய்ச்சியா ளர், தொழில்நுட்ப மதிப்பீட் டாளர் அல்லது இத்துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் போன்ற பலவிதப் பணிகளில், தனக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம். ஒரு மாதம் சான்றிதழ் படிப்பு முதல் டிப்ளமோ, ஓர் ஆண்டு அட்வான்ஸ்ட் படிப்பு என பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த படிப்புகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்:

Arch Academy of Design, Jaipur
Delhi Gems and Jewellery Institute, New Delhi
Gemcraft Jewellery Institute, New Delhi
Gemmological Institute of India, Mumbai
Indian Institute of Gemmolgy, New Delhi
Indian Institute of Gems and Jewellery, New Delhi
Indian Institute of Jewellery, Mumbai
National Institute of Jewellery Design & Technology, New Delhi
St. Xavier's College, Mumbai
Shingar Institute & Kolkatta.

பரந்து விரிந்த வேதியல்துறையும் அதன் வேலைவாய்ப்புகளும் !


அறிவியலின் ஒரு துறையான வேதியியல், உயிர்பொருள் சார்பில்லாதது (Inorganic), உயிர்பொருள் சார்ந்தது (organic) மற்றும் பவுதீகம் தொடர்பானது (Physical) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் இத்துறையில் நவீன வளர்ச்சி ஏற்பட்டு, பயோகெமிஸ்ட்ரி(உயிர் பொருட்களிலுள்ள அடிப்படை கூறுகளை ஆராய்தல்), நியூரோகெமிஸ்ட்ரி(நரம்பியல் அமைப்பின் ரசாயனம் செயல்பாடு பற்றி ஆராய்தல்) போன்ற துறைகள் உருவாகியுள்ளன.
ரசாயன தொழில்நுட்பம்: தொழில்நுட்பம் என்பது பொறியியலின் பயன்பாடு. பல்வேறு துறைகள் மற்றும் தொழிற்சாலைகளில், செயல்பாடுகள், நடைமுறைகள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. ரசாயன ஆய்வாளர்கள் பொதுவில் ரசாயன தொழில்நுட்ப நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேசமயம், ஆல்கஹால் தொழில்நுட்ப நிபுணர், செராமிக் தொழில்நுட்ப நிபுணர், பைபர் தொழில்நுட்ப நிபுணர், சணல் தொழில்நுட்ப நிபுணர், உணவு தொழில்நுட்ப நிபுணர், எரிபொருள் தொழில்நுட்ப நிபுணர், கண்ணாடி தொழில்நுட்ப நிபுணர், லெதர் தொழில்நுட்ப நிபுணர், மர தொழில்நுட்ப நிபுணர் என்று துறைவாரியாகவும் அழைக்கப்படுகிறார்கள்.
ரசாயன பொறியியல் என்பதிலிருந்து, ரசாயன தொழில்நுட்பம் என்பது அதிகம் மாறுபட்ட ஒன்றாகும். தொழில்நுட்பம் என்பது, மேம்பாடு மற்றும் உற்பத்தி நோக்கத்திற்கான செயல்பாட்டு இயக்கம் தொடர்பானதாகும். பொறியியல் என்பது வடிவமைப்பு, கட்டுமானம், நிறுவுதல் மற்றும் பிளான்டுகளின் இயக்கம் மற்றும் ரசாயன பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தொடர்பானது.

பணியின் தன்மை: பெரியளவிலான ரசாயனம் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கான செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவது ரசாயன தொழில்நுட்ப நிபுணரின் பணி. கச்சாப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் வாங்கப்பட்டுள்ளதா மற்றும் தயாரிப்பு பணிகள் முறையாக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது இவரின் முக்கியப் பணி. குறைந்த விலையில் பொருட்கள் வாங்குவதை மேற்பார்வையிடுவதும் இவரின் பணி. இதைத்தவிர, புதிய கச்சாப் பொருட்களை கண்டுபிடித்தல், இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருட்களுக்கு மாற்றாக உள்ளூரிலேயே புதிய கச்சாப் பொருளை கண்டுபிடித்தல், கச்சாப் பொருட்கள் மற்றும் முடிவுப் பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்தல் போன்றவையும் முக்கிய பணிகள்.
ஒரு தொழில்நுட்ப நிபுணரின் பணியானது, ஆராய்ச்சி-உற்பத்தி-நிர்வாகம் என்று பரந்த அளவில் வியாபித்துள்ளது. தயாரிப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு, விற்பனை, தொழிலாளர் நலம் ஆகிய பல துறைகளையும் கவனிப்பதால், முழு நிறுவன செயல்பாட்டிற்கும் அவர் பொறுப்பாகிறார்.
மேலும், இவரது பணியில், ஜூனியர் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சி பணியாளர்கள், இயக்குபவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்குள்ளேயே பலவிதங்களில் வேதியியல் தொழில்நுட்ப வல்லுனர் பணியாற்றுகிறார். வெளியே செல்லும் பணி இவருக்கு இல்லை. தூசு படிந்த, அழுக்கான, சூடான, பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட, நாற்றமடிக்கும், ஈரமான என்பது போன்ற பலவித அசவுகரிய சூழல்களிலும் அவர் பணிபுரிய வேண்டியதிருக்கும். மேலும், ஆசிட், பலவித ரசாயனங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் அவர் கையாள வேண்டியிருக்கும்.

இப்பணிக்கான தகுதிகள்: ஒருவர் ரசாயன தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிய, பி.டெக்/பி.டெக்ஸ்ட்/பி.எஸ்சி(டெக்) ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் சேர, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, மெரிட் அடிப்படையிலும், போட்டித் தேர்வுகளின் அடிப்படையிலும் நடைபெறுகிறது.
சில கல்வி நிறுவனங்கள்,(சில பாலிடெக்னிக்குகள் உட்பட), டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம், இனாமல்(உலோகத்திற்கு அழகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பளபளப்பான பொருள்) தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்ட் தொழில்நுட்பம், லெதர் தொழில்நுட்பம், லெட்டர் ப்ரெஸ் பிரின்டிங், பிரின்டிங் தொழில்நுட்பம் ஆகிய பலவித துறைகளில் 2 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரையிலான படிப்புகளை வழங்குகின்றன. கான்பூரிலுள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட், 1 வருட சுகர் டெக்னாலஜி படிப்பை நடத்துகிறது. மேலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ நிலைகளில் உயர்தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்புகள்: ரசாயன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான வேலைவாய்ப்பை பல தொழில் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆசிட், ஆல்கலீஸ், உப்பு, கொழுப்பு, சோப்பு, எண்ணெய், காய்கறி எண்ணெய், களிமண், கண்ணாடி, மருந்துகள், பூச்சிக்கொல்லி, வெடிபொருட்கள், மெழுகு, பசை, எரிசாராயம், வர்ணங்கள், பூச்சுகள், சாயம், பெட்ரோலிய பொருட்கள், ரப்பர், ரேயான், பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உண்டு. அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள பலவித ஆராய்ச்சி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு உண்டு.
இத்துறையில், தயாரிப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாகவே பலருக்கு பணிகள் கிடைத்தாலும், சிலருக்கு சந்தை ஆராய்ச்சி, பிளான்ட் வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சோதனை, கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியப் பணி, விற்பனை மற்றும் சேவைப் பணி, டெக்னிக்கல் ரைட்டிங் மற்றும் ஜர்னலிசம் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ரசாயன பொறியாளர்: ரசாயனங்கள், பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்கள், பாலிமர்கள், சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு, தாதுக்கள் மற்றும் உலோகங்கள், பேப்பர்கள் மற்றும் பலகைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தி செயல்பாட்டை வடிவமைத்தல் மற்றும் இயக்கம் ஆகியவற்றுக்கு ரசாயன பொறியாளர் பொறுப்புடையவர். மேலும் இவர்கள், தண்ணீர் அல்லது கழிவுகளை கையாளுதல், சூழல் விதிமுறை போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம் அல்லது உலோகவியல் அறிஞராக பணியாற்றலாம்.
புதிய மற்றும் திறன்வாய்ந்த செயல்பாடு, உபகரணங்களை பாதுகாப்பாகவும், சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு நேராதவாறும் பயன்படுத்தல், தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டை ஆய்வுசெய்து, அதை இன்னும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் எப்படி மாற்றலாம் என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்களிலும் ரசாயன பொறியாளர் பணியாற்றுவார்.

தேவைப்படும் பண்புகள்: அடையாளப்படுத்தும், பகுப்பாய்வு செய்யும், பிரச்னைகளை தீர்க்கும் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் வேண்டும். மேலும் நல்ல படைப்பு திறனும், நடைமுறை தேவைகளை புரிந்து செயல்படும் திறனும், மேற்பார்வையாளர் இல்லாமல் பணியாற்றும் தன்மையும் இருக்க வேண்டும்.

அனலிடிகல் கெமிஸ்ட்: பாலில் உள்ள நச்சுத்தன்மை, ஸ்டீலில் உள்ள மாங்கனீஸ் அளவு, சாக்லேட் தயாரிக்க உதவும் கச்சாப் பொருட்களை சோதனையிடுதல், பெயின்ட் தயாரிக்க உதவும் கரிமத்தின் தூய்மையை சோதனை செய்வது போன்ற பல பணிகள் இவருக்கு உள்ளது.
இதற்கு தேவையான பண்புகள்: நல்ல தொழில்நுட்ப திறன், வேதியியல் பாடத்தில் தீவிர ஆர்வம், ஒருங்கிணைக்கும் திறன் போன்றவை சில முக்கிய தகுதிகளாகும்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சேவையுடன் சம்பாதிக்க ஆகாயவியல் துறை (Aerospace)


பொறியியல் பாடங்களில் வித்தியாசமானதும் மாணவர்களுக்குப் புதிய பாதையைக் காட்டும் துறையுமான ஆகாயவியல் (Aerospace) பாடத்தை கன்னியாகுமாரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைகழகம் கற்றுத் தருகிறது. இது நான்காண்டு படிப்பாகும். 2009-ம் ஆண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆகாயவியல் துறையின் உட்பிரிவுகளான விமானப் பகுதிகளை வடிவமைத்தல், பிரித்தல், பரிசோதித்தல்,, விண்வெளிக் கலன்களைக் கட்டுதல், ஏவுதல் மற்றும் விண்வெளி சார்ந்த பணிகளைத் தெரியப்படுத்தி, அதில் வல்லுநர்களாக்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்கிறார் பல்கலை வேந்தர் ஏ.பி.மஜீத்கான். இத்துறையில் மிகவும் புகழ்பெற்ற பேராசிரியர்கள் பல்கலைகழக மாணவர்களுக்கு ஆகாயவியல் சார்ந்த அனைத்து உட்பிரிவுகளின் நுணுக்கங்களையும் தெளிவாகக் கற்றுக்கொடுக்கின்றனர்.

இங்கு அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களுடனும் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சிக்குத் தேவையான நவீன உபகரணங்கள் அடங்கிய பரிசோதனைக் கூடம், மற்றும் புஷ்பக், செஸ்னா, லியர்ஜெட் ஆகிய விமானங்கள் மாணவர்களின் பயிற்சிக்காக வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் விமானத்தில் பறப்பது,பறத்தலைக் கட்டுப்படுத்துவது போன்றவையும் கற்றுத் தரப்படுகிறது.

இத்துறையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறும் பட்டதாரிகள் விமானக் கட்டுமானம், விமானம் ஓட்டுதல், வடிவமைத்தல், விமானப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் ஐ.எஸ்.ஆர்.ஓ. போன்ற பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றிடப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் உலக அரங்கில் இந்தியா தனித்திறமையுடன் விளங்க இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு, தென் தமிழகத்தில் 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலுகின்ற மாணவர்களை நுழைவுப் பரீட்சை அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களில் 500 பேருக்கு ஆண்டுதோ

றும் 15 நாள்கள் அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பயிற்சியளிக்கிறது. அவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக இப்பல்கலைக்கழகம் இதைக் கடந்த 11 ஆண்டுகளாக செய்து வருகிறது.

சனி, 20 அக்டோபர், 2012

இளைய சமுதாயமே ! நம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம் !


                  தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.எனவே , சமுதாயம் ,சமுதாயம் என்று நாள் தோறும் சாலை மறியல் ,ஆர்ப்பாட்டம்  , மக்களிடம் வசூல் போன்றவற்றில் தீவிரமாக உள்ள நாம் ,நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயம் முன்னேற செய்த பணிகள் என்ன என்பதனை சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம் .

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ,தமிழகத்தை பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்திற்கென்று இருந்த ஒரே கல்லூரி 1919 - ஆண்டு வாணியம்பாடியில் ஆரம்பிக்கப் பட்ட இஸ்லாமியக் கல்லூரி ஒன்று மட்டும் ஆகும் .

     இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு , அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ,அதன் தனித்துவத்தை அகற்றுவதற்கு  அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தபோதும் , சென்னையில் முஹம்மதன் கல்லூரியின் பெயரை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்த போதும் கடுமையாக  எதிர்த்து போராடிய நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத்தும் அவர் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சமுதாயத் தளபதிகளும் ,சமுதாயத்தின் நிலை குறித்தும் , தங்களுக்கென்று கல்வி நிலையங்கள் வேண்டும் என்று சிந்தித்து அதனை செயல் படுத்தியும் காட்டினார்கள் . அசைத்து பார்க்க நினைத்த ஆட்சியாளர்களை , அதிரவைத்தது  நம் சமுதாயத் தலைவர்களின் செயல்பாடுகள்.

     ஆம் ,ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் , கல்வியில் நம் சமுதாயத்தின் நிலையையும் ஆலோசித்து , நமக்கென்று நாமே கல்லூரிகளை உருவாக்க முடிவு செய்தார்கள் .

   முடிவு செய்த மாத்திரத்தில் , காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் , சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது , M .M.பீர் முஹம்மது சாஹிபு போன்ற நாவன்மை மிக்க  தன் போர்படை தளபதிகளை அழைத்துக் கொண்டு ,சிங்கப்பூர் , மலேசியா  , பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று நம் சமுதாய பெரு மக்களை சந்தித்து , பள்ளிவாசல்கள் தோறும் சென்று சென்று இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி நிலை உயர வேண்டும் என்பதனை எடுத்துக்கூறி , மடிப்பிச்சை ஏந்தி வசூல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயை கொண்டுவந்து , அன்று பணக்காரர்கள் கூடும் ஜாலி கிளப் இருந்த இன்றைய சென்னை ராயபேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள் .

      அவ்வாறு வாங்கப் பட்ட இடத்தில்தான் 1951 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான்  இன்று சென்னையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் "புதுக்கல்லூரி"ஆகும் .  அப்படி உருவாக்கிய அந்த கல்லூரியின் ,ஒவ்வொரு வளர்ச்சியிலும் காயிதே மில்லத் (ரஹ் ) கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் . அதனை தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிபு அவர்கள் 14 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தலைவராக இருந்து அந்தக் கல்லூரியை படிப் படியாக உயரச் செய்தார்கள் .

     இன்றைக்கும் அந்தக் கல்லூரி இன்றைய சமுதாயத்தை பார்த்து கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளது , அதனை இன்றைய இளைய சமுதாயம் மறந்து விடுகின்றது . வீதி தோறும் உணர்ச்சிகளை தூண்டி , வசூல் செய்கின்றீர்களே, என்னை உருவாக்கி ,என்னை வளரச் செய்த தலைவர்கள் போன்று , உங்களால் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்க முடியவில்லையா ? என்று கேள்வி எழுப்பிக்  கொண்டுள்ளது .

இன்ஷாஅல்லாஹ் ,கேள்விகள் தொடரும்................

   

நமக்கு நாமே மின்சாரம் ! வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய் இருக்கிறார்கள். தொழில் நகரங்களெல்லாம் மின் விடுமுறை விடுவதென்று தீர்மானித் தால் வாரத்தின் 6 நாட்கள் விடுமுறை விட்டாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் என மின்சாரத்தில் இயங்கும் பொருட்களெல்லாம் இலவசமாகத் தருவதாகச் சொன்ன அரசு, இவற்றை இயக்க மின்சாரம் தராததால், வாங்கிய மிக்சி,கிரைண்டரை மூலையில் கிடத்தி விட்டு, மூலையில் கிடந்த ஆட்டுக் கல்லை எடுத்து அம்மிகொத்தித் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தனது விற்பனையை விரிவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஓம்சக்தி ஆட்டுக்கல் விற்பனையாளர்.

செய்முறைத் தேர்வு நேரத்தில் மின் துண்டிக்கப்படாததால், தங்கள் மதிப்பெண்களைக் குறித்துக் கவலைப்பட்ட மாணவ, மாணவியர் தேர்வுக்குப் படிப்பதற்கே விளக்குகளற்று விழிபிதுங்கி நிற்கின்றனர். இன்வெர்ட்டர்களில் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தி வந்தவர்கள்; சேமிப்பதற்கும் மின்சாரம் இல்லாததால் வீணாக்கிப்போன பேட்டரிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருகும் மின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்ற திட்டமிடல் இல்லாமல் 2001-_06 அ.தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 2006ல் அமைந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.

2008க்குப் பிறகு மின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக எழுந்த நேரத்தில், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, தற்காலிகமாகப் பிரச்சினையைக் - குறைத்த கலைஞர், நிரந்தரத் தீர்வுக்காக புதிய மின் திட்டங்களை தொடங்கினார். அவை 2013ல் பயன்தரத் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் 2011ல் வந்தது அதிமுக அரசு! தி.மு.க.வின் மின்திட்டங்களை மனதில் வைத்து 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன ஜெயலலிதா அரசு, அந்தத் திட்டங்களையும் காலத்தே முடித்து பயனுக்குக் கொண்டுவரத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வழக்கம்போல் மின்வெட்டில் தவிக்கின்றன. மாற்று மின்சக்தியை முன்னிறுத்த வேண்டிய அரசு அதனைப் பெரிதும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது. கொஞ்ச காலமே சூரிய ஒளி இருக்கும் அய்ரோப்பிய நாடுகளே அதனை மின் ஆற்ற லாக மாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும்போது, தினமும் வெய்யில் கொளுத்தும் இந்தியாவில் அதற்கான முன்னெ டுப்புகள் பரந்த அளவில் செய்யப் படவில்லை. கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்நாட்டில் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமோ ஆராய்ச்சிகளோ அதிகளவில் செய்யப்பட்டுள்ளனவா?

பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.

சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .

இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும்  (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.

சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .

கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.

இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.

சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.


தமிழகத்தில் ஆசிரியர்கள் ஆர்பாட்டம் அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ரெங்கராஜன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மாதம் தோறும் 8,170 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமையின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தகுதி தேர்வு பிரச்னையால் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சுமார் 3 லட்சம் பேருக்கு பாதிப்புகள் ஏற்படும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத தவணை தொகை 150 ரூபாய் பிடித்தம் செய்ய்பபடுகிறது. இந்த தொகையை குறைக்க வேண்டும். கல்வித் துறை அலுவலகங்களில் சுமார் 2,534 காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 18ம் தேதிக்குள் இக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து நவம்பர் மாதம் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும், வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி அனைத்து பகுதிகளிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கோரிக்கைகளுக்காக பிற ஆசிரிய சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி !


மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளைஞர் நலப்படிப்பியல் துறை சார்பில் 2013-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இப்பயிற்சிக்கு அனைத்து வகுப்புகளையும் சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.mkuniversity.org மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பெயர், கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும், சுயவிலாசமிட்ட ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து, முனைவர் பொ.பா.செல்லத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர், ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.12. அக்டோபர் 31-ம் தேதி முனைவர் முவ அரங்கில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.