Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆகஸ்டு 15 : தன் கல்லூரிப்படிப்பை தாய் நாட்டிற்காக துறந்த கண்ணியத்தலைவரை நினைவு கூறுவோம்

இந்திய இஸ்லாமியர்களின் உரிமையை பெற்றுத்தந்த தலைவராக  விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப்(ரஹ்). நீண்ட காலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர். அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். 

தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். நேரு,இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார். இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896 ம் ஆண்டு பிறந்தார். 

இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் குர்ஆனும்,இஸ்லாமிய நடைமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். 

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார். 1936 ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 

1945 ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ம் ஆண்டு முதல் 58 ம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராக பதவி வகித்தார். 

1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர். 

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி.இவர் 1962 ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

 "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31 ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏப்ரல் 4 ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. 

தொடர்ந்து மோசம் அடைந்தது. முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர். அன்றைய தினம் (4.4.1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. 

 முஸ்லிம் லீக் தொண்டர்களும் ,அரபிக் கல்லூரிகளின் மாணவர்களும்  அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள். நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76. 

மறுநாள் (5 ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள். 

முதல் அமைச்சர் கருணாநிதி, காலை 8.25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர். பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். 

 பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. 

அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர். 

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள். இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. 

அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது: 

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல  இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது. 

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்." 

இவ்வாறு கருணாநிதி கூறினார். 

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள். பாராளுமன்றம்  சட்டசபை அனுதாபம் இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல் மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள். 

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் பிறந்த பச்சை தமிழனாக சுற்றி வந்த பெருமகனார் காயிதே மில்லத் ( ரஹ்) அவர்கள் ,கேரளா மண்ணிலிருந்துதான் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார்களே தவிரே ,தமிழ் நாட்டிலிருந்து ஒருமுறை கூட தேர்ந்தெடுத்து அனுப்பப்படவில்லை,என்பது தமிழகத்திற்கு ,குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கரும் புள்ளி என்பதை யாராலும் மறுக்க முடியாது .

பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை


இளநிலை பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உத்திரப்பிரதேச அரசின் சாத்ரா கல்யாண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி:
இளங்கலை பட்டப்படிப்பு / முதுகலை பட்டப்படிப்பு : முந்தைய வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பி.எச்டி., : முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். காலம்: ஒரு ஆண்டு
மதிப்பு:
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு இளநிலை பட்டம்: 2,400 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் இளநிலை பட்டம்: 3,600 ரூபாய்
விவசாயம் மற்றும் பொதுப்பிரிவு முதுநிலை பட்டம்: 3,000 ரூபாய்
தொழில்நுட்பம்/மருத்துவம் முதுநிலை பட்டம்: 4,800 ரூபாய்
பி.எச்டி.,:
வகுப்பு ஏ: ஆறாயிரம் ரூபாய்
வகுப்பு பி: எட்டாயிரம் ரூபாய்
வகுப்பு சி: பத்தாயிரம் ரூபாய்
வகுப்பு டி: 12 ஆயிரம் ரூபாய்
இதர தகுதிகள்:
இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம்:  பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/- க்கு குறைவாக இருக்க வேண்டும்.

பி.எச்டி.,: பெற்றோர் / பாதுகாவலரின் வருட வருமானம் ஆண்டுக்கு ரூ.75,000/-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை விபரம்:உதவித் தொகை எண்ணிக்கை : தகுதி அளவைப் பொறுத்தது
கால அளவு: ஒரு ஆண்டு                                                                             
வழங்கப்படும் தொகை:                                                               பட்டப்படிப்பு படிப்போருக்கு : விவசாயம் மற்றும் பொதுப்பாடப் பிரிவு மாணவர்களுக்கு ரூ.2400/-
பட்டதாரிகளுக்கு: தொழில்நுட்பம் / மருத்துவம் ரூ.3600/-
முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு : விவசாயம் மற்றும் பொது பாடப்பிரிவு ரூ.3000/-
முதுகலை பட்டம்: தொழில் நுட்பம் / மருத்துவ படிப்புகளுக்கு ரூ.4800/-பி.எச்டி., படிப்போருக்கு: * பிரிவு ஏ ரூ.6000, * பிரிவு பி ரூ.8000 * பிரிவு சி ரூ.10,000/- * பிரிவு டி ரூ.12,000/-
விண்ணப்ப நடைமுறைகள்:
பிரிவு ஏ:
இந்தி, உருது, அரபி, பெர்சியன், வரலாறு,தத்துவம், அரசியல் அறிவியல், சமூக அறிவியல், ஹோம் சயின்ஸ், இசை, இதழியல், சமூக சேவை.

பிரிவு பி:
பொருளாதாரம், வர்த்தகம், மனித அறிவியல், கல்வி, ராணுவம், <உளவியல், மொழியியல், பழைமையான வரலாறு, தொல்பொருள் ஆய்வியல்

பிரிவு சி:
புவியியல், ரசாயனம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விவசாயம், மருத்துவம், பொறியியல், கணிதம், புள்ளியியல், டிராயிங், ஓவியம், வனம் சுற்றுச் சூழல்.

பிரிவு டி:
பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பயோ இன்ஸ்ட்ரூமென்டேசன், பயோ மெட்ரிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, சுற்றுச் சூழல் மற்றும் எரிதி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அலகாபாத்.

Scholarship : பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை
Course : பி. இ., பி.டெக்.,பி.டிசைன். பி.பார்ம்.,
Provider Address : INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY, ALLAHABAD, The Director, IIIT- Allahabad (IIIT-A), Deoghat Jhalwa, Allahabad 211 011 (UP), Tel:0532-2431684, 2552380, Fax: 0532-2430006, E-Mail: contact@iiita.ac.in, www.iiita.ac.in

உலக பாரம்பரிய சின்னமாகிறது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை


கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலாத் துறை, பாரம்பரிய சின்னங்கள் பட்டி யல் சேர்க்கை குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கு ஒன்று சென்னையில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர். 

இதில் சென்னை செயி ன்ட் ஜார்ஜ் கோட்டையை பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த பரிந்துரை கட்டுரையை பேராசிரியர் ஸ்ரீராம் சமர்ப்பித்தார். அதே போல பெர்ணார்டு டிராகன் என்ப வர் செட்டிநாடு குறித்தும், ரூப்மதி ஆனந்த் என்பவர் ஸ்ரீரங்கம் கோயில் குறித்தும், சேவியர் பெணடிக்ட் என் பவர் புலிக்காடு குறித்தும் தங்களது பரிந்துரை கட்டுரைகளை அளித்துள்ளனர். 

உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆலோசனைக்குழு தலைவர் சுஜித் பாணர்ஜி இந்த கட்டுரைகளை பெற்றுக்கொண்டு, கட்டுரைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த இடங்கள் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு 

 இந்தியாவில் பிரித்தானியரின்முதலாவது கோட்டையாகும். இது, 1639ஆம் ஆண்டில் கரையோர நகரானமதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிகநடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.1678ம் ஆண்டு…கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.  1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்குஅண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்
இந்தக் கோட்டையை வடக்கு தெற்காக 108 கஜங்களும் கிழக்கு மேற்காக 100 கஜங்களாக இருக்குமாறு அமைத்தனர். அன்று கட்டப்பட்ட கோட்டை அப்படியே 1714 வரை இருந்ததாகத் தெரிகிறது. கோட்டை கட்டப்பட்டதே ஒரு தனியான சரித்திரம். கோட்டை கட்டுவதற்கான முதற்கல் 1640 மார்ச் முதல் தேதியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 1642 ஜனவரி 27ஆம் தேதியிடப்பட்ட ஒரு குறிப்பில் “சூரத் தலைமையிடத்தை இந்த ஜார்ஜ் கோட்டை” என்றே குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே ஒரு டச்சுக் குறிப்பு இதை ‘செ, ஜார்ஜ் கோட்டை’ என்று அடையாளம் காட்டுகிறது
இந்தக் கருத்து சரியாக இருக்க முடியாது என்று வேறு சிலர் கூறுகிறார்கள். ஏனெனில் மார்ச் முதல் தேதியன்றே ஆரம்பித்திருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் கட்டியிருக்க முடியாது. இங்கிலாந்தின் ரக்ஷகராகக் கருதப்படும் புனித ஜார்ஜ் முனிவர் பெயரில்தான் இந்தக் கோட்டையைக் கட்டியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது,“செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்று பெயரிடப்பட்டது. கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும்,ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினஅரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது. அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.
கோட்டையின் கொடிக்கம்பம் வந்ததே ஓர் அற்புதமான கதையாகும். 1687ஆம் வருடத்தில் கவர்னராக யேல் இருந்தபோதுதான் இந்தக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. லாயல் அட்வெஞ்சர் என்றறியப்பட்டு, அப்படித்தான் நினைக்கப்படுகிறது.
கரை தட்டி உடைந்த கப்பலின் பெயர் லாயல் அட்வெஞ்சர் ஆகையால் அக்கப்பலிலிருந்துதான் கொடிக் கம்பம் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கப்பலின் கொடிக்கம்பத்திலான கம்பம் அக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்டு கோட்டையில் ஒரு கொத்தளத்தில் நிறுத்தப்பட்டது. இதன் உயரம் 50 அடி. இதுதான் இந்தியாவிலேயே அதிக உயரமான கொடிக்கம்பம். முன்பு குறிப்பிட்டது போலவே முதல் முறையாக கவர்னர் யேல் இங்கிலாந்தின் சென் ஜார்ஜ் கிராஸ் வடிவத்துடன் கூடிய கொடியை 1687ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்றினார். இந்திய சுதந்திரத்தின் போது இதில்தான் மூவர்ணக் கொடியும் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
   ஜார்ஜ் கோட்டை இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் கட்டிய முதலாவது பிரமாண்ட கோட்டை என்ற பெயரைக் கொண்டது. 1639ம் ஆண்டு அப்போதைய மதராஸில் இது கட்டப்பட்டது. இந்தக் கோட்டைதான் சென்னைப் பட்டணத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மூல வேராகும். இந்த கோட்டையை மையமாகக் கொண்டுதான் சென்னை மாநகரம் வியாபித்து வளர ஆரம்பித்தது.
கிழக்கிந்திய கம்பெனியினராக உள்ளே நுழைந்த வெள்ளையர்கள், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்டன.
.தமிழகத்தின் செயல்பாடுகளைத் தன்னகத்தே வைத்துள்ளது இந்தக் கட்டிடம். ஆம், இந்த புனித ஜார்ஜ் கோட்டை எத்தனை அரசுகளைப் பார்த்திருக்கிறது. எத்தனை மனிதர்களின் பேச்சுக்களை கிரகித்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் கட்டப்பட்ட ‘கவுன்சில் அறைகள்’ 1693ம் ஆண்டில் தகர்க்கப்பட்டு, புது அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. நந்தானியல் ஹிக்கின்ஸ் கவர்னராக இருந்தபோது கட்டப்பட்ட அலுவலகங்களில் சில இன்னும் உள்ளன. சட்டசபையில் இருக்கும் சபை தலைவர் நாற்காலி, இங்கிலாந்தின் ‘ஹவுஸ் ஆஃப் காமர்ஸ்’ஸில் இருப்பது போலவே அமைந்திருக்கும் இந்த அசெம்பிளி நாற்காலியே ஒரு கதை சொல்லும். லார்ட் விலிங்டன் கவர்னராக இருந்தகோதுதான் இந்த நாற்காலி சபைக்கு வழங்கப்பட்டது. தனது மனைவி விலிங்டனுடன் சேர்ந்து இந்த நாற்காலியை 1922 ஆம் வருடம் மார்ச் மாதம் 6 ஆம் தேதியன்று அசெம்பிளிக்கு பரிசாக அளித்தார்.


ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? :மரைன் இன்ஜினியரிங் படிப்பு


மரைன் இன்ஜினியரிங் என்பது, கடல்சார் கட்டமைப்பு மற்றும் அறிவியல் தொடர்பான ஒரு பொறியியல் பிரிவாகும். மரைன் இன்ஜினியர்கள், ஒரு கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மைக்கு முழு பொறுப்பாகிறார்கள்.
Steam turbines, gas turbines and diesel engines போன்ற ஒரு கப்பலின் சாதனங்களை தேர்வு செய்யும் பொறுப்பு இவர்களுடையது. மேலும், கட்டுமானம், இயக்கம் மற்றும் இன்ஜின் அறை பராமரிப்பு போன்ற பணிகள் இவர்களுக்கு முக்கியமானவை. மரைன் இன்ஜினியரிங் பாடமானது, ஆன்த்ரோபாலஜி, ஆர்க்கியாலஜி, சோசியாலஜி மற்றும் மனிதனின் கடல் சம்பந்தமான இன்னும் சில துறைகளுடன் தொடர்புடையது.
மரைன் இன்ஜினியரிங் தொடர்பாக வழங்கப்படும் சில பாட வகைகள்
* Diploma in Marine engineering
* Bachelor of engineering in Marine engineering
* Bachelor of technology in Marine engineering
* Bachelor of technology in naval architecture & ocean engineering
* Master of technology in air armament
* Master of engineering in Marine engineering
* Master of technology in Marine engineering
* Master of technology in ocean engineering and naval architecture

இப்படிப்பில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள்
இளநிலைப் படிப்பு
இளநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் ஒருவர், கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்களோடு, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேசமயம் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டுமெனில், JEE போன்ற கூட்டு நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் படிப்பின் காலகட்டம் 4 வருடங்கள்.
முதுநிலைப் படிப்பு
மரைன் தொடர்பான முதுநிலைப் படிப்பில் சேர்பவர்களுக்கு, பி.இ/பி.டெக் அல்லது வேறு ஏதேனும் சமமான பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்ட தகுதி இருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பின் காலஅளவு 2 வருடங்கள்.
இத்துறையில் வழங்கப்படும் சில சிறப்புநிலை(specialisation) படிப்புகள்
* Maritime commerce
* Marine refrigeration
* Command and control system
* Weaponry and weapon systems
* Navigation systems and equipment
* Marine renewable energy research
* Autonomous underwater vehicle research
* Information, communication systems and equipment
* Offshore extractive and infrastructure (cable laying)
வேலை வாய்ப்புகள்
இந்திய அளவில், சிறந்த வேலைவாய்ப்புக்காக, மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் ஒரு சில முக்கிய படிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கான வேலை வாய்ப்புகள் ஏராளம். Marine engineer, Ocean engineer and Naval architect போன்ற பணி நிலைகளுக்கு, தனியார், கல்வி, கார்பரேட் மற்றும் அரசுத் துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அபரிமித வேலைவாய்ப்புகள் உள்ளன. நவீன உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் நேவிகேஷன் போன்ற அம்சங்களால் இந்தப் பணியின் தன்மை மேம்பட்டுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது. மரைன் இன்ஜினியரிங்கில், environmental protection, offshore oil recovery, marine metals and corrosion, renewable energy, remote sensing, naval architecture, defense, underwater vehicles, global climate monitoring and marine transportation போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கவை.
இத்துறை பொறியாளர்களுக்கான சில பணி நிலைகள்
* Pumpman
* Harbor master
* Chief engineer
* Third engineer
* Fourth engineer
* Second engineer
* Marine engineering officers
* Junior (fifth) engineer
* Navy weapon engineering officer
ஊதியம்
அதிக சம்பளம் கிடைக்கும் துறைகளில் இதுவும் ஒன்றாகும். பயிற்சி நிலையில் உள்ள ஒரு பொறியாளர், மாதம் ரூ.30000 முதல் ரூ.40000 வரை பெறலாம். அனுபவம் மற்றும் விஷயங்களை தெரிந்துகொண்ட பிறகு, ஒருவர் பெறும் ஊதியம் மிக அதிகமாக இருக்கும்.
இந்திய மெர்சன்ட் நேவியில் பணிபுரியும் ஒரு பொறியாளர் கவர்ச்சிகரமான சம்பளம் பெறுகிறார். வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு மரைன் பொறியாளருக்கு NRI தகுதி கிடைக்கிறது. வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் பெறும் ஊதியமும் அபரிமிதமானது.
எங்கு படிக்கலாம் ? 
2.Sri Venkateswara College of Engineering,http://www.svce.ac.in

3.G.K.M. College of Engineering and Technology, Chennai


4.Vels College of Engineering and Technology - Chennai


5.R.L. Institute of Nautical Sciences, Madurai 


6.Indian Maritime College, Chennai


படிப்பில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே தேவை

படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.

 சென்னை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பில்லபாங் சர்வதேசப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நேருக்குநேர் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
 வாழ்வில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு லட்சியத்தைத் தேர்வு செய்து, அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து இடைவிடாமல் கடுமையாக உழைக்க
 வேண்டும்.


 அவ்வாறு உழைக்கும்போது எதிர் வரும் சிரமங்களையும், பிரச்னைகளையும்,சோதனைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற
 வேண்டும்.


 ராமேசுவரத்தில் எனக்கு கல்வி போதித்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர், பறவை எவ்வாறு வானத்தில் பறக்கிறது என்பதை விளக்கிக் கூறி, எனது படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவியதால், படிப்படியாக ஏவுகணை பொறியாளராக, விண்வெளித்துறை தொழில்நுட்பப் பொறியாளராக உயர முடிந்தது.


 மற்றொரு ஆசிரியரான அய்யாதுரை சாலமோன், வாழ்க்கையில் முன்னேற லட்சியம், அதை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை, அந்த லட்சியத்தை அடைவதற்கான கடும் உழைப்பு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தி, வழிகாட்டினார். பெரும்பாலான ஆசிரியர்களைப் போன்று அவர் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மேலும் ஊக்குவிக்காமல், படிப்பில் பின்தங்கியநிலையில் இருந்த மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தினார்.
 அவரைப்போன்று அனைத்து ஆசிரியர்களும் தங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற உதவ வேண்டும்.


 மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்தி, சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்றார்.



ஈரானில் நிலநடுக்கம்: 250 பேர் உயிரிழந்தனர்

ஈரானில் 11 நிமிட இடைவெளியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 250 பேர் உயிரிழந்தனர்.

 ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஆஹார், ஹாரிஸ், வர்சாகான் ஆகிய நகரங்களை சனிக்கிழமை மாலை 4.53 மணிக்கு நிலநடுக்கம் உலுக்கியது.
 இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளுக்கும் மேல் பதிவானதாக, தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 நிலநடுக்கத்தால் 250 பேர் வரை இறந்ததாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கங்களால் 60 கிராமங்கள் பலத்த சேதமடைந்தன. 4 கிராமங்கள் ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கண்ட நகரங்களில் 5 முறை சிறிய அளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
 இதனால் பீதியில் உறைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்ட டப்ரிஸ் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது. ஈரான் மீட்புப் பணிகள் துறைத்தலைவர் மஹ்மூத் முஸôபர் இது குறித்துக் கூறுகையில், ""அருகிலுள்ள கிராமங்களை ரேடியோ டிரான்ஸ் ரிசீவர் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.
 ஈரானின் பாம் நகரத்தில் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 11 ஆகஸ்ட், 2012

சிரியாவில் புதிய ஆட்சியை அமைக்க அமேரிக்கா துருக்கி ஆலோசனை


சிரியாவில் அதிபர் ஆசாத்தை வெளியேற்றிய பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துருக்கியும் அமெரிக்காவும் திட்டமிடத் தொடங்கியிருக்கின்றன.
ஒருநாள் பயணமாக துருக்கி சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அகமது தேவுதோக்லுவுடன் இன்று பேச்சு நடத்தினார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராகச் சண்டையிட்டுவரும் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவளிக்கும் நாடு என்ற வகையில் துருக்கியுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்கிறது.
புதிய அரசை அமைப்பது தொடர்பாக சிரிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்திக்கவும் ஹிலாரி கிளின்டன் திட்டமிட்டிருக்கிறார். சிரிய அதிபர் ஆசாத் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறப்படும் ஈரானைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.