Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஷரியத் சட்டத்தில் கைவைத்த அதிகாரிகளை எதிர்த்து வழக்கு : பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் நோன்புக்கஞ்சி குருனை அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் குருனை அரிசி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார் .பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது ,தமிழகத்தில் பள்ளிவாசல்களை மையமாகக்கொண்டு 11000 ஜமாஅத்துகள் உள்ளன .அதனைத்தான் மொஹல்லா  ஜமாஅத் என்று கூறுவர்.

 அவ்வாறு அமைந்த மொஹல்லா ஜமாத்தில் இயக்க கருத்துக்களுக்கு இடமில்லை . இயக்க கருத்துகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு ,மொஹல்லா ஜமாத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயலபடவேண்டும் என்று நாடெங்கிலும் வலியுறுத்தி வருகிறோம் . ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள ஜமாத்துகள் ஒன்றிணைந்து மாவட்ட அளவில் ஐக்கிய ஜமாத்தாக செயல்படுகின்றன .அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் கீழ் 436 ஜமாத்துகள் உள்ளன ; வசதி இல்லாத நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்புகஞ்சிக்காக குருனை அரிசி வழங்கும் விழா இங்கு நடைபெற்றது .

  இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்து மதத்தினருக்கும் இந்திய அரசியல் சாசனம் "தனியார் சட்டம்" என்று வழங்கியது 74 தனியார் சட்டம் உள்ளது .அவ்வாறு அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்பட்டது போல் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் "தனியார் சட்டம் " வழங்கப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் திருமணம் ,பாகப்பிரிவினை ,பிறப்பு ,இறப்பு போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் பொதுச்சட்டம் தலையிடமுடியாது . அது இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசியல் சாசனம் சட்டம் வழங்கிய உரிமை , சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு .எனவே ,இஸ்லாமியர்கள் திருமண வயதை அரசாங்கமோ ,அதிகாரிகளோ நிர்ணயம் செய்ய இயலாது .சமீபத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அஹ்மத் உத்தரவின் பேரில்,சில அதிகாரிகள்  அரசியல் சட்டத்திற்கு முரணாக ,சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு ,இஸ்லாமிய திருமணத்தை தடுத்து நிறுத்தி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் .அதனை, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM. அப்துர் ரஹ்மான் அவர்கள் கண்டித்து பேட்டி கொடுத்துள்ளார்கள் .அந்த அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதா ,அல்லது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதா ? என்று ஆலோசனை நடத்தி வருகின்றோம் .மிக விரைவில் வழக்கு தொடுக்கப்படும் .


நாங்கள் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையான ,ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள தமிழக முதல்வருக்கு  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

  ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளாராக ஹமீது அன்சாரி அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார் .சோனியா காந்தி முன்மொழிந்து ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அஹமது சாஹிப் ,திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் வழி மொழிந்துள்ளனர் .ஹமீது அன்சாரி அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் ,அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  வக்போர்டு சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தவர்கள் எங்களை அணுகவில்லை .முறையாக வக்போர்டுக்கு ஒரு IAS அதிகாரி ,2 இஸ்லாமிய குருமார்கள் ,முஸ்லிம் அமைப்புகள் மூலம் 2 எம்.பி.கள், 2 எம்.எல்.எ.கள், 2 பேர் பார்கவுன்சிலிருந்தும், 2 பேர் முத்தவல்லிகள் சார்பிலும் தேர்வு செய்யப்படவேண்டும் .எம்.எல்.எ கோட்டாவில் மந்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ,அது விசயமாக கோர்டு தீர்ப்பு வந்தால்தான் முடிவு தெரியும் .

  2010  ஆண்டு ஜூலை 13 ஆம்நாள் சுப்ரீம் கோர்டு ஒரு தீர்ப்பு வழங்கியது ,அதனில் ,சாதி வரி கணக்கீடு நடத்தி,பின்பு 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது .தற்போதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .இந்த சூழ்நிலையில் தமிழக அரசுக்கு ' ஜாதிவாரி கணக்கெடுப்பை மிக விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் 'என்று  கோரிக்கை வைக்கின்றோம் . இந்த சூழலில் தமிழக அரசு அனைத்துக்கட்சிகளையும் கூட்டி தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் ,அதன் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .எந்த நிலையிலும் ,அதனை மாற்ற தமிழக அரசு கட்டுப்படக்கூடாது .

 இலங்கை பிரச்சினையை பொருத்தவரை ,அந்நிய நாட்டு பிரச்சினையில் நாம் அத்து மீறி தலையிட்டு நமது நாட்டு பிரச்சினையில் பிறர் தலையிட வழி வகுத்து விடக்கூடாது .அதற்காக ,அங்கே ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது .இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இது தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையும் ஆகும் . அதே நேரத்தில் சீனா இலங்கையில் அரவணைப்பை ஏற்படுத்த வழி ஏற்பட்டுவிடுமானால் ,அது நம் நாட்டுக்குத்தான் ஆபத்தாகும் .





யா அல்லா ! என்ன நடக்குது இந்த சமூகத்தில் ?

நக்கீரனில் வந்த செய்தி ...............


முஸ்லீம்களுக்குள் மோதல்- போலீஸ் தடியடி
அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று மாலை திருப்பூர் டவுன் ஹாலில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதற்காக அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் திரண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திருப்பூர் மாநகர பல்வேறு முஸ்லிம் அமைப்பைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆவேசமாக வந்த அவர்கள் அங்கு வைக்க ப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.

மதத்துக்கு விரோதமாக எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
 
திடீரென்று ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். இதில் அஹமத்தியா முஸ்லிம் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்த அன்சார் அலி அக்பர் (நெல்லை), கோவை கரும்புக்கடையை சேர்ந்த சஜிர் அகமது (31) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. 
 
அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டன. 

மோதல் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் தலைமையில் அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் திருப்பூர் மாநகர முஸ்லிம் அமைப்பினரை அப்புறப்படுத்தினார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். 
 
அந்த நேரத்தில் சிலர் மேம்பாலத்தில் ஏறி நின்றபடி கல் வீசினார்கள். அவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டதையொட்டி பொதுக்கூட்டம் 5.30 மணிக்குள் முடிக்கப்பட்டது.
 
பின்னர் அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் அங்கிருந்து மினி பஸ்கள் மூலம் கோவைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். முஸ்லிம்கள் மோதிக் கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரமலான் (நோன்பு) பற்றி அல்-குர்ஆனும் அண்ணல் நபியும்


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

 'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

 'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)


'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)

ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு), திர்மிதி-619

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)




சனி, 14 ஜூலை, 2012

மரியாதையுடனும் ,அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன்........


ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டுள்ளதை மிகுந்த மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஹமீது அன்சாரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
 
நாட்டின் உயரிய பதவிகளில்  ஒன்றான துணை ஜனாதிபதி பதவிக்காக என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எனக்கு அதரவளித்துள்ள கூட்டணி  கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பை அடக்கத்துடன் ஏற்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இவரது அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் அறிவிப்பு குறித்த செய்தியை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் முதலில் கொண்டுபோய் சேர்த்தார்.
 
இதற்கு முன்பு துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரி சிறந்த முறையில் பண்பாளராகவும் மேன்மைக்குரியவராகவும் ராஜ்யசபாவை நடத்தினார். இதனால் அவரையே இரண்டாவது முறையாகவும் தேர்வு செய்தோம் என்று பன்சால் தெரிவித்தார்.

கண்ணியத்தலைவரும் கர்மவீரரும்


காமராஜர் முதல் அமைச்சராக பதவி ஏற்றபோது, அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் விரும்பி இருந்தால், மேல் சபை உறுப்பினராக ஆகி இருக்கலாம். அல்லது காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய ஒரு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.யை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுலபமாக வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆகி இருக்கலாம்.

இதையெல்லாம் காமராஜர் விரும்பவில்லை. ஏற்கனவே காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். குடியாத்தம் தொகுதி, "கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை" என்று கருதப்பட்ட தொகுதியாகும். அங்கு காமராஜர் போட்டியிட்டது, அனைவருக்கும் வியப்பளித்தது. காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டியிட்டார்.

(அப்போது கம்யூனிஸ்டு கட்சி பிளவு படாமல் ஒரே கட்சியாக இருந்தது.)   தேர்தலில் காமராஜரை ஆதரித்து ஈ.வெ.ரா.பெரியார் பிரசாரம் செய்தார். "காமராஜர் பச்சைத் தமிழர். அவர் முதல் அமைச்சராக இருந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்" என்று பெரியார் கூறினார். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததற்காக காமராஜருக்கு ஆதரவு தெரிவித்த பேரறிஞர் அண்ணா, "குலக்கொழுந்தே! குணாளா!" என்று பாராட்டி எழுதினார்.

       ஆனால் ,காமராஜர் ஒரு முக்கியத்தலைவரின் ஆதரவு கிடைத்தாலே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கை வைத்துக்கொண்டு ,அந்த முக்கியத்தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார் .அந்தத் தலைவர் கூறினார் ,நானும் என் சமுதாயமும் குடியாத்தம் இடைத்தேர்தலில் உங்களை ஆதரிக்கிறோம் .அந்த தலைவரின் வார்த்தைகளை கேட்டவுடன் ,வெற்றி பெற்ற சந்தோசத்தை காமராஜர் அடைந்தார் ,வெற்றியும் பெற்றார்.அந்த முக்கியத்தலைவர் ,யார் தெரியுமா ? இந்திய சிறுபான்மை சமுதாய மக்களின் உண்மைக் குரலாக ,உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் ,முஸ்லிம்களின் சமுதாயத் தந்தை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் . ஆனால் இந்த வரலாற்று நிகழ்வை இன்றைய காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்ல எல்லா ஊடகங்களும் மறைத்து விடுகின்றன .

கம்யூனிஸ்டு கட்சி நீங்கலாக, எல்லா கட்சிகளும் காமராஜரை ஆதரித்தன.   1954 ஆகஸ்டு மாதத்தில் (முதல் அமைச்சராக பதவி ஏற்ற 4 மாத காலத்தில்) நடைபெற்ற குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அவருக்கு 64,344 ஓட்டுகளும், கம்யூனிஸ்டு வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,132 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது 38,212 ஓட்டு வித்தியாசத்தில் காமராஜர் வென்றார்.



முஸ்லிம் கல்விக்கூடங்களில் அரபி பாடம், உர்தூ மொழிகளில் தனி வகுப்புகள் நடத்தவேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கோரிக்கை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கோவையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித் தார். 

அப்போது அவர் கூறிய தாவது- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் 100 ஆண்டை கடந்து இந்திய அரசியலில் தொடா;ந்து நீடித்து கொண்டு இருக்கும் இயக்கமாகும் சுதந்திரத்திற்கு முன்பு அகில இந்திய முஸ்லிம்லீக் என்று இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்ற பெயர் பெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் 14 மாநிலங்களில் உள்ளது. கேரளாவில் வலிமை வாய்ந்த அரசியல் கட்சியாக விளங்கு கிறது. அடுத்து தமிழகத்திலும் உள்ளோம். கடந்த காலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக விளங்கி வந்ததை மாற்றி ஒரே அமைப் பாக செயல்படுவது என்ற முடிவெடுத்து இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று செயல்படுவதுடன் அனைத் திலும் அங்கீகாரம் பெற்று உள்ளோம். 

எங்களுக்கு கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் ஏணி ஆகும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏணி சின்னத் தில் போட்டியிடலாம் என்று அங்கீhரம் வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இப்போது கேரளா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உள்ளதை மேலும் மூன்று மாநிலத்தில் வரும் காலங்களில் போட்டி யிட்டு அதன் அடிப்படையில் தேசிய அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதற்குரிய பணி களை செய்து வருவதுடன் வரும் டிசம்பர் மாதத்திற்குள் எல்லா மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் லீக் கட்சி தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிட்டுள் ளோம். 

ஆக இந்திய அரசியலில் எங்களது செயல்பாடு வளர்ந் திருக்கிறது. தமிழகத்தில் எங்களை பொருத்தவரை வளர்ந்து வருவதோடு மேலும் வலுப்படுத்துவதற்காக வரும் செப்டம்பர் மாதம் கல்வி விழிப் புணர்வு மாநாடு கும்பகோணத் தில் நடக்க உள்ளது. அந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் இ. அகம்மது சஹிப் மற்றும் சச்சார் கமினனராக விளங்கிய ராஜேந்திர சச்சார் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் சிறுபான்மை கல்வி சம்பந்தப்பட்ட பிரச் சனைகள் முக்கியமென கருதி அதன் தீர்வு தொடர்பாக மாநாட்டில் தெளிவுபடுத்த உள்ளோம். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தி வருவது தேசிய ஒறுமைபாட்டை வளர்த்துவது எல்லா மக்களுடன் சமயநல் லிணக்கத்தை வலுப்படுத் துவது, சிறுபான்மையினராக முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாப்பது என்ற அடிப்படை கொள்கையை வைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது. 

இப்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஐ.மு. கூட்டணி அரசுக்கு ஆதரவாகவும், அக்கூட்டணி யில் தொடர்ந்து நீடித்து வருவதாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகா;ஜியை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆதரிப் பது என முடிவு செய்து அதற்கான ஆதரவை அளித்து வருகிறோம். அவரை எதிர்த்து போட்டியிடக்கூடிய சங்மா அவருடைய பேச்சு அவருடைய செயல்பாடு ஒரு சாதாரண முனிசிபாலிட்டி தேர்தலில் போட்டியிடுவது போலவும், மற்றவர்களை கொச்சைப் படுத்தும் நிலையிலும் உள்ளது. இது ஒரு கண்ணியமான ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடக்கூடிய வேட்பாளராக கருத முடியவில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித் துள்ள பிரணாப்முகர்ஜி வெற்றி பெறுவது உறுதி என அறி கிறோம். 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் திலும், பாராளுமன்றத்திலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள் ளோம். 

தி.மு.க.வுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வருகின்றோம். தி.மு.க. தலைவர் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டதில் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் சிறைக்கு செல்வார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் கிடைத்த தகவல் இரண்டரை இலட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள தகவல்கள் வெளியானதை வைத்து பார்க் கின்ற போது இன்று அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சட்டமன்றத்தில் தே.மு.தி.க. எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. தனிப்பெரும் எதிர்கட்சியாக திகழ்கிறது என்பது இதுவே சான்றாகும். 

தமிழகத்தில் இன்று ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதா சில துணிச்சலான காரியங்களை செய்து வருவதாக இருந்தாலும், அதற்கு ஒரு உதாரணம் அவரது ஆட்சியில் சென்னையில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்களை அழைத்து அவர்களை கடுமை யாக எச்சரிக்கப்பட்ட செய்திகள் செய்தித் தாள்களில் வந்ததை நாம் அறிந்ததே. மேலும் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ்கள் வாங்குவதற்கும், 11,12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு அலுவலகத் திற்கு சென்று பதிவு செய்வதை அந்தந்த பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வந் துள்ளது. அரசாங்கம் உத்திர விடப்பட்டு உள்ளதை வர வேற்கிறோம். 

மேலும் தமிழக முதல்வரால் தினமும் ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டங்கள் வெறும் அறி விப்பு மட்டுமின்றி அதை நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு சென்றடைந்தால் வரவேற்கத்தக்கதாகும். 

நாங்கள் எப்போதும் ஆட்சியா ளர்கள் நல்லதை செய்யும் போது பாராட்டு வதும் உண்டு. அல்லா ததை செய்யும் பொது அதன் குற்றங்குறைகளை சுட்டிக் காட்டுவதும் உண்டு. நல்ல திட்டங்களின் மூலம் வாரத் தில் இருநாள் நீதி போதனை கள் நடத்துவதற்கு அறி விப்பு செய் யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் சிறுபான்மை கல்விக்கூடங் களிலும் அரபி பாடம் உருது மொழி ஆகியவற்றில் போதனை செய்வதற்கு தனிவகுப்பு களை ஏற்படுத்த வேண்டு மென அரசுக்கு தெரிவித் துக் கொள்கிறேன். 

கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான பேசன்ஜர் ரயில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் இயக்கப் படுவதில்லை. இதனால் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மக்கள் பாதிப்பிற்குள்ளாவதுடன் அன்று தான் மக்கள் அதிகமாக இந்த ரயிலை பயன்படுத்தும் பயனாளி களாக உள்ளனர். இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு எல்லா நாட்களிலும் இந்த ரயிலை இயக்;குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்பாக எங்களது அகில இந்திய தலைவரும் மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது சாகிப் அவர்களு டன் பேசி ரயில்வே துறை அமைச்சரிடம் தெரிவிக்கவும் எண்ணியுள்ளோம். 

மேட்டுப்பாளையத்தில் அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளி மற்றும் வெளி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கக்க அதிநவீன வசதிகள் ஏதும் செய்யப்படாமல் உள்ளது. இந்த மருத்துவமனை 130 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறே தற்போது வரை உள்ளது மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டப் பகுதியிலிருந்து வரக்கூடிய அவசர சிகிச்சைக் கான வசதிகள் மிகவும் குறைவாகவும் உள்ளது. மற்ற அடிப்படையான அனைத்து வசதிகளும் இந்த மருத்துவ மனையில் மேம்படுத்துவதுடன் அனைத்து நவீன கருவிகளை இம்மருத்துவமனையில் அமைத்து இயக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேடுப்பாளையம் நகரத்தில் அதிகமாக சிறு வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற் கும் மற்றும் காய்கறி பொருட்கள் அதிகமாக மேட்டுப்பாளை யத்தில் இறக்குமதியாவதால் அதை பதப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளாட்சி அமைப்பு கள் செய்து கொடுக்க வேண் டும் என்றும் பேட்டியின் போது பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பத்திரிக்கையாளர் களிடம் தெரிவித்தார்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

திருப்பமோ திருப்பம் , அதிரடி திருப்பம்

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பமாக ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதையடுத்து மாநில முதல்வராக உள்ள கிரண்குமார்ரெட்டி மாற்றப்பட்டு காங்கிரஸ் ஆதரவுடன் ஜெகன் முதல்வராகலாம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., ஆதரவோடு சங்மாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூனில் ஆந்திராவில் 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் ஆந்திராவில் அடுத்த ஆட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.
இடைத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சிபிஐயால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன்ரெட்டி கைது செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலை தான் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயம்மா பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இரு கட்சித் தொண்டர்களும் கூறினர். இந்நிலையில் உ.பி., மாநிலத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சிபிஐ வழக்குகளுக்காக காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது, ஒய்எஸ்ஆர் கட்சி நிர்வாகிகளை யோசிக்க வைத்தது.

வீணாக காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்வதை விட அனுசரித்து சுமூகமாக போவது நல்லது என்று ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு யோசனை கூறியுள்ளனர். மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசுக்கு ஓரிடம் கூட கிடைக்காது என்பதால் அக் கட்சியினரும் ஜெகன்மோகன்ரெட்டி நெருங்கி வந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காங்., மேலிடத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் இரு கட்சியினருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே பிரணாப்புக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெகன்மோகன்ரெட்டிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஜூனில் நடந்த இடைத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு அக் கட்சிக்கு கணிசமாக முஸ்லிம்கள் வாக்களித்ததுதான் காரணம். மதச்சார்பற்ற கொள்கையில்தான் ஜெகனுக்கு பற்றும், நம்பிக்கையும் உண்டு. 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியையோ அல்லது மூன்றாவது அணியையோ தான் ஆதரிக்க வேண்டும் என்று ஜெகன் ஏற்கனவே முடிவெடுத்திருந்தார். ஜனாதிபதி தேர்தல் ஒரு கட்சி சாரா பதவியாகும். எனவே அப்பதவிக்கு பொருத்தமானவராக திகழும் பிரணாப்பை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார் என்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியிடம் நெருங்கி வர தான் தயார் என்பதை ஜெகன் சூசகமாக உணர்த்துவார் என்று தெரிகிறது. எனவே ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மாற்றப்பட்டு காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.