Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 7 ஜூலை, 2012

முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்


கடந்த 65 வருடங்களாக, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தில் வாழும் 27% முஸ்லிம்கள், நிவாரணம் பெறும் வகையில்


வெள்ளிக்கிழமையன்று (06/07/2012) மேற்கு வங்க சட்டசபையில், சரித்திரம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பாதிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், நிவாரணம் பெறத்துவங்கும். மாநிலத்தில் அமலில் இருந்து வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான 17% இட ஒதுக்கீட்டிலிருந்து, முஸ்லிம்களுக்கு 10% "உள் ஒதுக்கீடு" வழங்கும் தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டது.

எதிர்கட்சியான கம்யூனிஸ்டுகளும் இதை ஆதரித்தனர். எதிர்கட்சித்தலைவர் சூரிய காந்த மிஸ்ரா இந்த தீர்மானத்தை ஆதரித்ததோடு, உயர்க்கல்வியிலும் இந்த ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும், என்றார். இதற்க்கான சாத்தியக்கூறுகள் பற்றி, முழுத்தகவல்களையும் அடுத்த சட்டமன்றக்கூட்டத்தில் தாக்கல் செய்யுமாறு, உயர்க்கல்வித்துறை அமைச்சர், பரத்திய பாசுவுக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மம்தாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், முந்தய கம்யூனிச ஆட்சியிலும், தாங்கள் பல முறை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்ததாகவும் நினைவு கூறினர்.
 

கல்வித்துறை அலட்சியம்:கலைந்து போனது மாணவியின் கனவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மகள் கார்த்திகா (17). ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தை பாடமாக எடுத்து படித்தார். எஸ்எஸ்எல்சி தேர்வில் 74  சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற கார்த்திகா கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2வில் காலாண்டு உள்ளிட்ட தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றார். பொதுத்தேர்விற்காக நன்றாக படித்து தேர்வு எழுதிய அவருக்கு கடந்த மே 22ல் வெளியான தேர்வு முடிவு அதிர்ச்சி அளித்தது. ஆம், வெறும் 639 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால்  அனைத்து விடைத்தாள் நகல்களையும் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 3 விடைத்தாள்கள் மட்டும் வந்தன. அவையும் கார்த்திகாவின் விடைத்தாள்கள் இல்லை. மதிப்பெண் பட்டியலில் ஏமாற்றத்தை தந்த தேர்வுத் துறை, விடைத்தாள் நகலையும் மாற்றி அனுப்பி தனது குழப்பத்தை அரங்கேற்றி இருந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தன்னிடம் இருந்த ஆதாரங்களை சமர்ப்பித்து விட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறார் கார்த்திகா. மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு 39.16 சதவீதம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால் சுய நிதி பொறியியல் கல்லூரியில் கூட சேர்ந்து படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

வெள்ளி, 6 ஜூலை, 2012

உலகமே அறிந்த விஷயத்தை காலம்கடந்து வெளியிட்ட நய்யார்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆதரவு தெரிவித்ததாக பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் தனது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார்.

 விரைவில் வெளிவரவுள்ள "பியாண்ட் தி லைன்ஸ்' என்ற தனது சுயசரிதை நூலில் குல்தீப் நய்யார் தெரிவித்துள்ளதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், அதற்கு மறைமுக ஆதரவு தெரிவித்தார். கரசேவகர்கள் மசூதியை இடிக்க ஆரம்பித்தபோது, தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்த நரசிம்மராவ், மசூதி முழுமையாக இடிக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்த பின்புதான் பூஜையை முடித்துக் கொண்டார். மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயே இது குறித்து என்னிடம் தெரிவித்தார்.
 பூஜையில் இருந்த நரசிம்மராவின் காதில் மசூதி இடிக்கப்பட்ட தகவலை அவரின் உதவியாளர் தெரிவித்தவுடன் நரசிம்மராவ் எழுந்துவிட்டார் என்று மதுலிமாயே என்னிடம் தெரிவித்தார் என்று குல்தீப் நய்யார் எழுதியுள்ளார்.
 இது தொடர்பான விவரங்கள் அவரது நூலில் "நரசிம்மராவின் அரசு' என்ற துணைத் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.
 நடவடிக்கை எடுக்கவில்லை: மசூதி இடிக்கப்படுவதைத் தடுப்பதற்கு நரசிம்மராவ் முயற்சிக்கவில்லை என்று தனது நூலில் குல்தீப் நய்யார் குற்றம்சாட்டியுள்ளார்.



இது குறித்து அவர் எழுதியுள்ளது: மசூதி இடிப்புச் சம்பவத்துக்குப் பின், நாடெங்கும் கலவரம் ஏற்பட்ட சூழலில் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரை அழைத்த நரசிம்மராவ், ""மசூதி இடிக்கப்பட்டது எனக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் (மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்காமல்) என்னை ஏமாற்றிவிட்டார்'' என்று தெரிவித்தார்.
 அவரிடம் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. கல்யாண் சிங்கின் அரசை கலைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது எப்படி சாத்தியமாயிற்று என்று பத்திரிகையாளர்கள் கேட்டோம்.
 அதற்கு நரசிம்மராவ், ""மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு பிரிவை விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை'' என்றார்.
 அயோத்தியில் இருந்த மத்திய அரசுப் படைகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கும் நரசிம்மராவ் சரியான பதிலை அளிக்கவில்லை. ஆனால், அங்கு கட்டப்பட்ட கோயிலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு நரசிம்மராவ் அரசுதான் பொறுப்பு. மசூதி இடிக்கப்படும் எனத் தெளிவாகத் தெரிந்தபோதும், அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டார்.
 படுகொலை: உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக மாநில அரசு, மசூதியை இடிக்காமல் தடுப்போம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த வாக்குறுதியை மீறிவிட்டது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மசூதியை இடித்த சம்பவம் நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்ட படுகொலை என்று குல்தீப் நய்யார் கருத்து தெரிவித்துள்ளார்.
 காங்கிரஸில் உள்கட்சிப் பூசல்: நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்திருந்தது. அக்கட்சியின் பல தலைவர்கள் சோனியாவை சந்தித்து கட்சியின் தலைவர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தி வந்தனர். பாஜக அரசியல் செல்வாக்குப் பெற்றுவிடுமோ என சோனியா அச்சமடைந்தார். மதச்சார்பின்மைதான் இந்தியவின் முதுகெலும்பு என்பதை உறுதியாக நம்பிய சோனியா காந்தி, அரசியலில் இறங்க முடிவு செய்தார்.
 நரசிம்மராவ் மகன் மறுப்பு:÷குல்தீப் நய்யார் தெரிவித்த தகவலை முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகன் பி.வி.ரங்கா ராவ் மறுத்துள்ளார். ""இதை நம்பவும் முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. எனது தந்தை அவ்வாறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அவர் மிகவும் துயரத்துடன் இருந்தார். அவர் முஸ்லிம்கள் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார். மசூதி இடிப்பு நடைபெற்றிருக்கக் கூடாது என்று எங்களிடம் பலமுறை புலம்பியிருக்கிறார்'' என்றார் ரங்கா ராவ்.

வியாழன், 5 ஜூலை, 2012

சீமானின் ஈழத் தமிழர் ஆதரவு போலித்தனமானது :திருமாவளவன்

ஆனந்த விகடன் கேள்விக்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்

''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''


''என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் எதுவும் பேசக் கூடாது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956-ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது. இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்குப் பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட் டால் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப் பையும் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகை யது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவத் தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல; அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான். ஆனால், ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்ப வர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக் காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப்பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தன மானது!''


 
நன்றி : ஆனந்தவிகடன் 
11-ஜூலை -2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரை

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாத்தின் மாண்பை காக்கவும், வலிமை படுத் தவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் மாநிலம் தழுவிய மஹல்லா யாத்திரையை ஜுலை-7 சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் தென்காசியி லிருந்து தொடங்குவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டத்தில்
 முடி வெடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 04-07-2012 புதன் கிழமை காலை 11 மணிக்கு சென்னை - 1 மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள இலக்கம் 36, காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்  நடைபெற்றது.
 மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக் கினார். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
 பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் தின் மாண்பை காக்கவும் அதனை வலிமைப்படுத்தும் வகையில் ஷரீஅத் பஞ்சாயத், பைத்துல்மால், மதரஸாக்கள் ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட வைகளை உருவாக்கவும் வலி யுறுத்தும் வகையில் மஹல்லாக் கள் தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் யாத்திரை செல்வதென்று 2012 ஏப்ரல் 14ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு எடுத்த முடி வின் படி எதிர் வரும் ஜுலை 7ம் தேதி முதல் நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து இந்த மஹல்லா யாத்திரையை தொடங்குவதெனவும்,இக்கூட்டம் முடிவு செய்கிறது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சேவை திட்டங்களில் ஒன் றான புனித ரமளான் மாதத்தில் கடந்த காலங்களில் செய்த பணிகளை குறிப்பாக ஏழை களுக்கு உணவுப்பொருட்கள், புத்தாடைகள், வழங்குதல் சகோதரதுவத்தை வலியுறுத் தும் இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை களை இன்னும் சிறப்பாக செய்ய பிரைமரி அமைப்புகளை இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ரமளான் மாதத்திற்கு பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு உத வும் வகையிலும், பள்ளிவாசல் களை தூய்மைப் படுத்தும் வகையிலும், பணியாற்ற முஸ் லிம் மாணவர் பேரவை மற்றும் முஸ்லிம் யூத் லீக் செயல்வீரர் களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 இந்த ஆண்டு ரமளான் மாத நோன்பு ஜுலை 21ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்கும் அப்பகுதி யில் வாழும் சகோதர சமுதாய ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படுகிறது.

பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசி அல்லது பச்சரிசி குருணையை தமிழக அரசு மானிய விலையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு அதிகாரிகள் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப் படாத பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முடியாது எனக் கூறி விண்ணப்பங்களை நிரா கரித்துள்ளனர்.

நோன்பாளிகளுக்கு உதவும் வகையில் அரிசி வழங்கப்படு கிறதேயன்றி பள்ளிவாசல் நிர் வாகங்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இந்த அடிப்படை அம்சத்தை கவனத் தில் கொண்டு வக்ஃப் வாரியத் தில் பதிவு பெற்ற பள்ளி பதிவு பெறாத பள்ளி என பாகுபாடு காட்டாமல் அனைத்து பள்ளி களுக்கும் நோன்பு கஞ்சி அரி சியை வழங்கவும், அதனை நோன்பு துவங்கும் ஜுலை 21ம் தேதிக்கு முன்னதாகவே வழங் கிட சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

புதன், 4 ஜூலை, 2012

டெங்குவை தொடர்ந்து பீதி கிளப்பும் பேதி .............


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. இதனால் பலர் தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  70க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கடையநல்லுலூர் மக்களிடையே மேலும் பீதீயை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி பேதி காரணமாக கடையநல்லூர் பகுதியில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

நேர்மை ஜெயாவிற்கு தமிழில் பிடிக்காத வார்த்தையோ ?


அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணியிடங்களை எந்தவித பரிந்துரைக்கும், கையூட்டுக்கும் இடமின்றி நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை எடுத்த, விருதுநகர் கலெக்டர் பாலாஜி என்பவரை மாறுதல் செய்து வேறு பணியிடம் எதுவும் கொடுக்காமல், காத்திருப்போர் பட்டியலில் தமிழக  அரசு வைத்திருக்கிறது.

           பொதுமக்களுக்கு நன்மைகள் பல சட்டப்படி கிடைக்கசெய்தார் பாலாஜி .ஆக்கிரமிப்புகள் அகற்றம் ,அரசு அதிகாரிகள் நேர்மையுடன் செயல் பட உத்தரவு ,அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி நேர்மையாக செயலாற்றி வந்த கலெக்டர் என்று மக்கள் பாராட்டும் ஆட்சியர் திரு .பாலாஜி .

        அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணியிடங்களை எந்தவித பரிந்துரைக்கும், கையூட்டுக்கும் இடமின்றி நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டதால் காத்திருப்போர் பட்டியலில் ஜெயா அரசால் வைக்கப்பட்டுள்ளார் ."நேர்மை" என்ற வார்த்தை தமிழில் ஜெயா விற்கு பிடிக்காத வார்த்தையோ என்று விருதுநகர் மாவட்ட மக்கள் பேசிக்கொள்கின்றனர் .