Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்

ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.

"சைல்டு ரிலிப் அண்டு யு" என்ற அரசு சாரா அமைப்பு, "லேர்னிங் பிளாக்ஸ்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்பட, 13 மாநிலங்களில் செயல்படும் 750 பள்ளிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 75 சதவீத பள்ளிகளில் டேபிள், சேர், பெஞ்ச் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 41 சதவீத பள்ளிகளில் உள்ள மாணவர்கள், பள்ளி கட்டடங்கள் இல்லாமல் திறந்தவெளியில் படிக்கின்றனர். 11 சதவீத பள்ளிகளில், டாய்லெட் வசதி இல்லை. 34 சதவீத பள்ளிகளில் டாய்லெட்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளன.

இரண்டில் ஒரு பங்கு பள்ளிகளில் டாய்லெட் அருகே தண்ணீர் இல்லை. வட மாநிலங்களில் உள்ள 70 சதவீத பள்ளிகளில், டாய்லெட் அருகே தண்ணீர் வசதி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில், டாய்லெட் பயன்படுத்திய பிறகு கையை சுத்தம் செய்ய சோப்புகள் இல்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 80 சதவீத பள்ளிகளில், டாய்லெட் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். 44 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள 74 சதவீத பள்ளிகளில் மின்வசதி இல்லை. இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த இந்த ஆய்வு, அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும் :சரத் பவார்

வரும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள ‌லோக்சபா ‌தேர்தலில் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகளே பிரதமரை தேர்வு செய்யும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தேர்வில் மாநில கட்சிகள்:
‌தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடியை அடையாளம் காட்டினாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஆறு மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகள் மட்டுமே பிரதமரை தேர்வு செய்யும். மேற்குவங்க மாநிலத்தை சேர்‌ந்த திரிணமுல் காங்கிரஸ், உ.பி., மாநிலத்தை சேர்ந்த சமஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தமிழகத்‌தை சேர்ந்த அ.தி.மு.க, ஆகிய ஆறு கட்சிகளே பிரதமர‌ை தீர்மானிக்கும் கட்சிகளாக அமையும்.
மேற்கண்ட கட்சிகள் ஆட்சி அமைக்‌க முடியாவிட்டாலும் அக்கட்சிகளின் துணையின்றி பிரதமர் தேர்வு நடைபெற சாத்தியம் இல்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் மம்தா , நவீன், முலாயம்சிங், மாயாவதி, நிதிஷ் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முக்கிய காரணியாக விளங்குவர் என தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு இன்னார்தான் தகுதி என்று தேர்தல் வருவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே அறிவித்தால், அந்த நபருக்கும் கட்சிக்கும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். தற்போது, நரேந்திர மோடிக்கும் பா.ஜ.,வுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது என்று கூறிய பவார், ராகுல் குறித்து கூறுகையில், அவருடைய திறமை குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது; ஆனால் அவருடைய குடும்ப பின்னணி காரணமாக அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என்றார்.

வரும் தேர்தலில் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து காங்கிரஸ் உடனான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் எனவும், மீண்டும் காங்கிரஸ் கட்சி‌யே ஆட்சி அமைக்கும். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை; ஆனால் ராஜய்சபா எம்பி.,யாக வருவேன் எனவும் தெரிவித்தார்.

திறக்கபடாமல் முதல்வருக்காக காத்திருக்கும் 12 புதிய கல்லூரிகள்

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பதற்காக, தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்ட, 12 அரசு கல்லூரிகள் காத்திருக்கின்றன. அவற்றில் சேர்ந்த மாணவர்கள், 37 நாட்களாக வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டசபை தொடரில், விதி எண் 110 ன் கீழ், "தமிழகத்தில், சிவகாசி, கோவில்பட்டி, முதுகுளத்தூர், திருவாடானை, கடலாடி, குமாரபாளையம், காங்கேயம், பேராவூரணி, ஓசூர், உத்தரமேரூர், காரிமங்கலம், கரம்பகுடி ஆகிய, 12 ஊர்களில், புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் துவக்கப்படும்" என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய கல்லூரிகள் கட்டுவதற்கான நிதி, ஒதுக்கீடும் செய்யப்பட்டன. தற்காலிகமாக, வாடகை கட்டங்கள், அரசு பள்ளி கட்டங்களில், கல்லூரிகள் துவக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது.

சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய 5 கல்லூரிகளுக்கு, முதல்வர்கள், 15 பேராசிரியர்கள், 17 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மற்ற 7 கல்லூரிகளுக்கும், மாற்றுப்பணியாக பிற கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு இளங்கலை பிரிவிற்கும், 60 பேர் வீதம், ஜூலை 19 முதல், மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்த கல்வி கட்டணம் என்பதால், ஒவ்வொரு கல்லூரிகளிலும், 250க்கு மேற்பட்ட மாணவர்கள்,சேர்ந்துள்ள நிலையில், இதுவரை வகுப்புகள் துவக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், "புதிய அரசு கல்லூரி வகுப்புகளை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம், துவக்கி வைக்க உள்ளார். அதற்காக, கல்லூரிகள் காத்திருக்கின்றன" என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் சேர்ந்து, 37 நாட்களாகியும், வகுப்புகள் துவங்காததால், கல்லூரி எப்போது துவங்கும் என,மாணவர்கள் தினமும் கல்லூரி வந்து கேட்டு செல்கின்றனர். "விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என கல்லூரி நிர்வாத்தினர், கூறி அனுப்புகின்றனர்.

"தாமதமாக வகுப்புகள் துவக்கினால், படிப்பதில் சிரமம் ஏற்பட்டு, பருவத் தேர்வுகளை எழுதுவதிலும், சிக்கல் ஏற்படும்" என மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, உடனே வகுப்புகள் துவக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சனி, 24 ஆகஸ்ட், 2013

முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று , இஸ்லாத்தின் கோட்பாட்டிற்காக போட்ட உத்தரவை வாபஸ் பெற்றார் எம்ஜிஆர் --- பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

திருவள்ளூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாவட்ட அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி மற்றும் மாவட்ட உலமா பெருமக்கள் இணைந்து நடத்திய இஸ்லா மிய திருமண சட்ட விளக்க கருத்தரங்கம் ஆகஸ்டு 23ம் தேதி வெள்ளி மாலை பொன்னேரி மரியம் மதீனா பள்ளிவாசலில் நடை பெற்றது.

பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா ஹாஸ் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழச்சியில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற்றி னார்.

அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது,

இந்தியாவிலுள்ள முஸ்லிம் களாகிய நமக்கு இந்திய அரசியல் சாசனத்தின் குறிப் பிடப்பட்டுள்ளபடி நமக்குள்ள தனியார் சட்டமாகிய ஷரீயத் சட்டப்படி நடப்பதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.

ஆனால் எல்லோருக்கும் ஒரே வகையான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சாரத் தால் தம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்கள் கூட குழப்பம் அடைந்து வருகிறார்கள்.

"இஷ்டத்திற்கு தலாக் சொல்கிறார்கள், பெண்கள் அடிமை படுத்தப்பட்டு கிள்ளு கீரைகளாக நடத்தப்படு கிறார்கள். முஸ்லிம்களிடையே ஆனாதிக்கம் மேலோங்கி நிற்கிறது" என ஊடகங்கள் வாயிலாக எழுதியும் பேசியும் வருவதால் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் முஸ்லிம்களாகத்தான் இருக்க வேண்டுமானால் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றித்தான் வாழ வேண்டும். நமக்கென்று உள்ள தனித்தன்மையை பாது காத்தால்ஒழிய நாம் முஸ்லிம் களாக வாழ முடியாது.

பள்ளிவாசல், கபரஸ்தான், தர்கா, வஃக்பு சொத்துக்கள் திருமண முறை, தலாக் விவகாரங்கள், சொத்து பாகப்பிரிவினை போன்ற விஷயங்களில் நம்முடைய தனித்தன்மைகளை நாம் புரிந்து வாழ வேண்டும். அப்படி வாழ வில்லை என்பதற்காகத்தான் ஷரீஅத்தை சீர்குலைத்துவிட லாம் என சிலர் கனவு காண்கிறார்கள்.

கபரஸ்தானில் ஏன் அடக்கம் செய்ய வேண்டும் இறந்தவர் களை எரியூட்ட வேண்டியது தானே என அன்றைக்கு கேட்டார்கள். இன்று பொது சிவில் சட்டத்தை கேட்கிறார் கள்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கி யில் பாங்கு சொல்ல தடை விதித் தார்கள்; இது எங்கள் உரிமை தடை கூடாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியது திரும்பப் பெற்றார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போது பள்ளிவாசல் வழியே மேள தாளம் அடிப்பதற்கு அனுமதித்து உத்தரவு போட்ட போது தொழுகை நடத்தும் நேரங்களை கேட்டார்கள். எல்லா நேரமும் தொழுகை நேரம்தான் சூரிய உதயம், உச்சம்,அஸ்தமனம் ஆகியவற்றில் சில நிமிடங்களை தவிர என விளக்கம் சொன்னோம் உத்தரவை திரும்பப் பெற்றார்கள்.

பதர் சயீத் வழக்கு
இப்போது முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் நீதி மன்றத்திற்கு சென்றிருக்கிறார். அவர் நீதிமன்றத்திற்கு சென்றதின் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன வென்றால், இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந் திருக்கிறது.

இஸ்லாமிய திருமண சட்டம் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன? என்பதை சமுதாயம் விளங்கி கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய திருண சட்டம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும்போது வக்கீல், வலி,இரண்டு சாட்சிகள் வேண் டும் இல்லையேல் திருணம் செல்லாது. எனவே இஸ்லாமிய திருமணங்களின் சிறப்பை நாமும் தெரிந்து கொண்டு குழப்பம் செய்பவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

தலாக்கிற்கு சட்டம் உள்ள ஒரே மதம் இஸ்லாம்
அதே போன்று தலாக் விஷயமும் இன்று விவகார மாக்கப்படுகிறது. உலகிலேயே தாலக்கிற்கு சட்டம் கொடுத் திருக்கின்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றுதான். முஸ்லிம்கள் இடத்தில் தலாக் விஷயத்தில் தவறான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. தலாக் சொன்னால் இறைவனின் சன்னிதானமே ஆடும்.

தலாக் பற்றிய விளக்கங்கள் முத்தலாக் என்றால் என்ன?தாலக் வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி? இவைகள் எல்லாம் சமுதாயம் விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். இந்த விளக்கங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், இமாம்கள் வகுத்தளித்த சட்டங்கள், ஃபிக்ஹு, மஸாயில்கள் ஆகிய வற்றின் மூலம் பெறலாம். அதை விளக்கி சொல்வது உலமாக் களால் மட்டும்தான் முடியும்.

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நாம் இஸ்லாத்தை பாதுகாக்க வில்லை. இஸ்லாம் நம்மை பாதுகாக்கிறது. அந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

திருமண கட்டாய பதிவு
இன்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. திருமணங்களை காலம் காலமாக நாம் ஜமாஅத்தில் பதிவு செய்கிறோம்.

திருமணம் கட்டாய பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்த பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்கள் செய்து, சென்ற ஆட்சியின் போது இஸ்லாமிய ஷரீஅத்தும் விட்டு போகாமல் அரசின் சட்டத்திற்கும் பாதகம் வராமல் இரண்டையும் ஒன்றாக இணைக்கும் வகையில் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்ய தனிப்படிவம் உருவாக்கினோம்.

அந்த படிவத்தில் நம் தப்தரில் என்ன உள்ளதோ அது அத்தனையும் சொல்லப்பட்டிருக் கிறது. அந்த படிவத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்தால் உரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டு சார்பதிவாளர் பதிவு செய்வதற்கு கடமை பட்டவர்.

ஆனால் இன்று பல இடங்களில் இப்படி நடப்பது இல்லை என்ற புகார்கள் வருகின்றன. நாம் இன்றைய அரசில் வாதாடி பெற்ற உரிமையை இந்த அரசியலும் நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நாடு தழுவிய இந்த கருத்தரங்குகள். மஹல்லா ஜமாஅத் இந்த கருத்தரங்கின் முக்கிய அம்சம் என்ன வென்றால் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத்துதான் முஸ்லிம் சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு. மஹல்லாஜமாஅத் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பள்ளிவாசல் இஸ் லாமிய மார்க்க ஒழுங்குகளின் படி செயல்பட வேண்டும் இதற்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது.

மார்க்க விஷயம் என்று வருகிற போது சங்கைக்குரிய உலமாக்களின் பேச்சை ஏன்,எதற்கு என்று கேட்காமல் பின்பற்ற வேண்டும். உலமாக் கள் இல்லை என்றால் இஸ்லாம் இல்லை. அதனால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளி வாக சொல்கிறது மார்க்க விஷ யத்தில் உலமாக்களின் பேச்சை கேட்டு செயல்படுங்கள் என்று.

இன்று போட்டி மஹல்லாஹ், போட்டி ஜமாஅத், போட்டி பள்ளிவாசல், தனி கபரஸ்தான், அமைப்பின் பெயரால் தனி தப்தர் என்று செய்துகொண்டே போய் மூன்று பெருநாள், நான்கு பெருநாள் என்று குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக் கிறது. இதை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் சமு தாயத்திற்கு உண்டு. அதை வலியுறுத்துவதுதான் இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.

காஜி,ஙாயிப் காஜி
காஜி சட்டப்படி ஒவ்வொரு பள்ளிவாசல் இமாமும் அந்த மஹல்லாவின் காஜிதான். அதற்கு பெயர் ஙாயிப் காஜி. தலைமை காஜி, மாவட்ட காஜி செய்யும் காரியத்தைத்தான் ஙாயிப் காஜி செய்வார்.

தமிழ்நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றன. அந்த பள்ளிவாசல்களின் திருமண தப்தர் பாதுகாக்கப்படுகிறது.

திருமண கட்டாய பதிவு சட்டத்தின் படி இஸ்லாமிய திருமணங்களுக்காக வடி வமைக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தின் அடிப்படையில் பள்ளிவாசல் திருமண பதிவேடுகள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு திரு மணத்திற்கு 4 படிவங்கள் ஒன்று மணமகன் வீட்டிற்கும், மற் றொன்று மணமகள் வீட்டிற்கும், இன் னொன்று சார்பதிவாளர் அலுவ லகத்தில் பதிவு செய்வதற்கும் கொடுக்க வேண்டும். மற்றொன்று அந்த மஹல்லாவில் பத்திரமாக இருக்கும். இந்த ஒழுங்குமுறைப்படி ஒவ்வொரு மஹல்லாவும் செய்யுமேயானால் திருமண பதிவில் பிரச்சனையே இருக் காது.

ஷரீஅத் பஞ்சாயத்து
ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பைத்துல்மால் இருக்க வேண்டும், ஷரீஅத் பஞ்சாயத் இருக்க வேண்டும். ஷரீஅத் கோர்ட் என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஷரீஅத் பஞ்சாயத் என்றே சொல்ல வேண்டும்.

பள்ளியின் இமாம், தலைவர், செயலாளர், விவகாரம் பேசி தீர்வு காணும் ஆற்றலுடைய மேலும் இருவர் உள்ளிட்ட ஐவருக்கு குறையாமல் அந்த பஞ்சாயத்து செயல்படலாம்.

குடும்ப பிரச்சினைகளில் இந்த பஞ்சாயத்தே முறைப்படி பேசி தீர்த்து வைக்கலாம் அல்லது மனமுறிவு வழங்கலாம். இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்களில் கூட ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக கடந்த ஆட்சிக்காலத்தில் காஜி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயற்சி மேற் கொண்டோம் ஆனால் சிலர் காஜி நியமனமே தேவையில்லை எனக் கூறியதால் எங்கள் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. காஜி என்றால் என்ன என்று சரியாக விளங்கிக்கொள்ளாத தின் விளைவே இது. பள்ளிவாசல் இமாம் அல்லது கதீப்தான் அந்த மஹல்லாஹ் வின் காஜி. மாவட்டத்திற்கு ஒரு காஜி. பெருநாள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிவிக்க ஒரு தலைமை காஜி. இதை புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை.

இதுபோன்ற விஷயங்களில் நாம் இத்தகைய கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்தி நல்ல முடிவு காண்போம். எந்த சூழ்நிலையிலும் மஹல்லாஹ் ஜமாஅத் சீர்குலைய சமுதாயம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. சுண்டைக்காய் கட்சி, புடலங் காய் அமைப்பு,வெண்டைக்காய் இயக்கம், என்றெல்லாம் தலையெடுத்து மஹல்லாஹ் ஜமாஅத் ஒற்றுமையை சீர் குலைக்க வருவார்களேயானால் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி சமூக ஒற்றுமையைக் காப்பது நம் கடமை.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி கோரிக்கை

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.

இந்த முன்னோடி திட்டத் தின் பயன்பாட்டை ஆய்ந்து, பெருமளவிலாக பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே. ரஹ்மான்கான் வெளியிட்ட அரசு பூர்வாங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

வேலூர் தொகுதியில் அமைக்க எம். அப்துல் ரஹ்மான்கோரிக்கை:

இன்று (24.08.2013) நாடாளுமன்ற கூட்டத்தின் போது பகல் 12 மணிக்கு 377வது விதியின் கீழ் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் இது தொடர்பாக கோரிக்கை வைத் தார்.

மத்திய அரசு சிறுபான்மை யினருக்காக ஐந்து பல்கலைக் கழகங்கள் உருவாக்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறு பான்மை சமூக மக்கள் அதி களவில் வாழும் தொகுதி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு பான்மையினர் இங்கு சமூக பொருளாதார கல்வித் துறை யில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் காரணத் தால் இந்த பல்கலைக்கழகம் வேலூர் தொகுதியில் நிறுவப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வேலூர் தொகுதியில் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் காட்சிகள், பீடி மற்றும் தோல் பதனிடம் தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். தொடக்கப்பள்ளி நிலையில் இருந்து உயர் கல்வி நிலைக்கு செல்வதற்கு அவர்களின் பொருளாதார இயலாமையே ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயத்தையும் பின்னுக்கு கொண்டு செல்கின்ற காரணத்தால் பள்ளி படிப்பை நிறைய பேர் பாதியிலிலேயே நிறுத்தி விடும் அவல நிலை இருந்து வருகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16 விதிகளின்படி சமூக பொருளாதார பின்னடை வில் இருக்கும் சிறுபான்மை சமூகம் நிறைந்திருக்கும் தொகுதி யாக வேலூர் தொகுதி யை மத்திய அரசு கணக்கில் எடுத்து பல்கலைக்கழகத்தை அங்கே நிறுவுவதற்குரிய பூர்வாங்க பணியை தொடங்க நான் வலியுறுத்துகிறேன்.

இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும் விதிமுறை அனைத்திற்கும் வேலூர் தொகுதி தகுதி உடையதாக இருக்கின்ற காரணத்தால் என் வேண்டுகோளை ஏற்று மிக விரைவாக மத்திய சிறுபான்மை நலத்துறை பல்கலைக்கழக அறிவிப்பை வெளியிட வேண் டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் பேசினார்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய மாணவர்கள் அதிகம் செல்லக்கூடிய, சில முக்கிய நாடுகளில், எந்தெந்த காலகட்டங்களில், விண்ணப்பம், விசா செயல்பாடுகள் மற்றும் வகுப்புகள் தொடங்குகின்றன என்பதன் சுருக்கமான விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அமெரிக்கா
12 முதல் 18 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
பிப்ரவரி இறுதியில், விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.
மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைபட்ட காலகட்டத்தில், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
விசா சுழற்சி: I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 120 நாளுக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பயணத்தை தொடங்கலாம்.
வகுப்புகள் தொடக்கம் - செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
பிரிட்டன்
படிப்பில் சேர்வதற்கு முந்தைய ஆண்டின் அக்டோபரில் விண்ணப்ப செயல்பாடு தொடங்கும்.
பொதுவாக மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடு முடிந்துவிட்டாலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜுன் வரை நீட்டிப்பு வழங்கப்படும்.
விசா சுழற்சி - செமஸ்டர் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
ஆஸ்திரேலியா
பிப்ரவரியில் தொடங்கும் விண்ணப்ப செயல்பாடு, டிசம்பரில் முடிவடையும்.
நவம்பர் தொடங்கி, ஜனவரி மாதத்திற்குள், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை கல்வி நிறுவனங்கள் அறிவித்துவிடும்.
விசா செயல்பாடு அக்டோபரில் துவங்கி, டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிந்துவிடும்.
பொதுவாக, பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கினாலும், பல்கலையைப் பொறுத்து, வேறுபாடு இருக்கலாம். மேலும், சில பல்கலைகள், செப்டம்பர் மாதத்தில், இடை சேர்க்கையையும்(mid term intake) நடத்துகின்றன.
ஜப்பான்
படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது.
செமஸ்டர் தொடங்குவதற்கு ஏறக்குறைய 4 மாதங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் வகுப்புகள் தொடங்குகின்றன.
பிரான்ஸ்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விண்ணப்ப செயல்பாடு தொடங்குகிறது.
ஜுன் மாதத்திற்கு முன்னதாக, விண்ணப்ப செயல்பாட்டை முடித்துவிட வேண்டும்.
செமஸ்டர் தொடங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
ரஷ்யா
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
முதல் செமஸ்டர் - செப்டம்பர் முதல் ஜனவரி வரை
இரண்டாம் செமஸ்டர் - பிப்ரவரி முதல் ஜுன் வரை.
ஜெர்மனி
கோடைகால செமஸ்டருக்கு, ஜனவரி 15ம் தேதிக்குள்ளும், குளிர்கால செமஸ்டராக இருந்தால், ஜுலை 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடும்.
விமானம் ஏறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
குளிர்கால செமஸ்டர் அக்டோபர் மாதத்திலும், கோடைகால செமஸ்டர் ஏப்ரல் மாதத்திலும் தொடங்குகின்றன.
சிங்கப்பூர்
மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன.
குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
கனடா
மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக, 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே, விண்ணப்ப செயல்பாடுகள் தொடங்கி விடுகின்றன.
செமஸ்டர் தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும், குளிர்கால வகுப்புகள், அவ்வப்போது, இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அதாவது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒன்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்றுமாக நடைபெறுகிறது.
அயர்லாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாகவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
புறப்படுவதற்கு 8 முதல் 10 வாரங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்குகின்றன. சில சமயங்களில் பிப்ரவரி மாதமும் தொடங்கும்.
நியூசிலாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
படிப்பு தொடங்குவதற்கு 8 முதல் 10 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்தல் நன்று.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வகுப்புகள் தொடங்குகின்றன.

முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று ஹாஜிகளை நியமித்தது அதிமுக அரசு ; சமுதாய பிரச்சினைகளை அமைச்சர் அப்துல் ரஹீமும் ,வக்ப்வாரிய தலைவரும் முதல்வருக்கு எடுத்துசொல்ல வேண்டும் :பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

மதுரை மாநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவரும், ஜீவா நகர் முஸ்லிம் ஜமாஅத் தலைவருமா கிய ஹாஜி ஏ. செய்யது புதல்வர் எஸ். அப்துல் ரஜாக், பி.இ. மணமகனுக்கும், கமுதி எம். உம்முசல்மா பர்வீன், பி.ஏ., மணமகளுக்கும் சென்னை எஸ்.ஐ.இ.டி. பெவிலியன் மஹால் அரங்கத்தில் திருமணம் நடை பெற்றது.

இத் திருமண விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி அப்துல் ரஹீம், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநிலச் செயலா ளர் காயல் மகபூப், சுதந்திர தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மவ்லவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம், செயலாளர் ஏ. இக்பால் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அ.இ.அ.தி.மு.க. சிறு பான்மை நலப்பிரிவு தலைவர் ஹாஜி கவிஞர் வீரை கறீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்த்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உரையாற்றினார்.

அப்போது அவர் குறிப்பிட்ட தாவது-

மதுரை மாநகர் மாவட்டத் தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணைத் தலைவரான அருமைச் சகோதரர் ஏ. செய்யது அவர்கள், மதுரை ஜீவா நகர் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் ஜமாஅத்தினுடைய தலைவராக இருந்து அதனுடைய வளர்ச் சிக்கு திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஏறத்தாழ 65 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். இவர்கள் மஹல்லா ஜமா அத் அமைப்புகளுக்கு கட்டுப் பட்டவர்கள். மார்க்க விஷயங் களில் உலமா பெருமக்களின் வழிகாட்டுதல்களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டு மஹல்லா ஜமாஅத்துக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. போட்டி ஜமாஅத், போட்டி பள்ளிவாசல் போன்றவைகள் ஜமாஅத் கட்டுப்பாட்டிற்கு மாற்ற மான செயல்பாடுகள் சமுதாயத் திற்கு அவப் பெயரையும், தலை குனிவையும் ஏற்படுத்தும்.

இஸ்லாமிய மார்க்கம் என்பது மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் வாழ்க்கை நெறி. இம்மைக்கும், மறுமைக் கும் வழிகாட்டக்கூடியது திருக் குர்ஆனும், திருநபியின் வழி முறையுமேயாகும். இதனை விளக்குவதற்கு உலமாக்க ளுக்கே தகுதியுண்டு.

பள்ளிவாசலை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. உண்மையான, இயற்கையான அமைப்பு இதுதான். இதற்கு கட்டுப்பட்டு எல்லா முஸ்லிம்களும் தங்களு டைய வாழ்க்கையை அமைத் துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம் களில் 95 சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் மஹல்லா ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதில் உறுதி கொண்டவர் கள்.

ஆனால், இந்த கட்டுப் பாட்டை தகர்த்து தாங்கள் விரும்புவதைப் போல் வாழ்வதற் கும் சிலர் தலைப்படுகின்றனர். மஹல்லா ஜமாஅத் நிர்வாகம், காஜிகள், ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் சமுதாயத்தை வழிநடத்தக் கூடியவர் கள். ஆனால், இந்த வழிகாட்டு தல் வேண்டாம் என இன்று சிலர் சொல்ல தலைப்பட்டிருக்கி றார்கள்.

காஜிகள் நியமனம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அன்வர் ராஜா அவர்கள் அமைச்சராக இருந்த போது, காஜிகள் நியமிக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. அதை முதல்வரு டைய கவனத்திற்கு அமைச்சர் கொண்டு சென்றார். 7, 8 மாவட்டங்களுக்கு காஜிகள் நியமிக்கப்பட்டனர். காஜிகள் நியமனத்தை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா அம்மை யார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பதை நான் இங்கே நன்றியோடு நினைவு படுத்த விரும்புகிறேன்.

அடுத்து வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களி டம் காலியாக உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் காஜிகள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதை கலைஞர் அவர்கள் ஏற்று செயல் படுத்தினார்கள்.

திருமணங்களை நடத்தி வைப்பது, வாழ்வியல் தொடர் பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, சான்று வழங்குவது போன்ற பணிகளை தலைமை காஜி, மாவட்ட காஜிகள், ஙாயிப் காஜிகள் என்ற பள்ளிவாசல் இமாம்கள் செய்து வருகின்ற னர்.

ஆனால், இது கூடாது எனச் சொல்லி, அதற்காக நீதிமன்றத் தின் வாசலையும் சில பேர் தட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளில் சமுதாயத்தின் நிலைபாட்டை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இங்கே வந்திருக் கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் அப்துல் ரஹீம் அவர்களும், வஃக்பு வாரியத்தினுடைய தலைவர் தமிழ்மகன்உசேன் அவர்களும் எடுத்துச் சொல்ல வேண்டுமென அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டுவோம் - விமர்சிக்க வேண்டிய விஷயங்களை கண்ணியத்தோடு விமர்சிப் போம். எடுத்துச்சொல்ல வேண் டிய சமுதாய காரியங்களை தயக்கமின்றி கோரிக்கையாக வைப்போம்.

மணிச்சுடர் நாளிதழ்
இந்த மேடையில் மணிச்சுடர் நாளிதழ் உங்கள் கரங்களில் தரப்பட்டிருக்கிறது. அது தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே நாளிதழ். அதில் தமிழக அரசின் செய்திகள் ஏராளமான இடம் பெறுகின்றன. அரசு எங்க ளுக்கு விளம்பரம் தருவதில்லை. அதற்காக அரசாங்கத்தின் செய்திகளை நாங்கள் புறக் கணிக்கப்பதும் இல்லை. சமுதாயம் சம்பந்தப்பட்ட பல் வேறு கோரிக்கைகள் அர சாங்கத்தின் கவனத்திற்காக இந்த நாளிதழில் இடம் பெறு கின்றன. அப்படிப்பட்ட செய்தி களை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மணமக்களை வாழ்த்துவதற்காக நாம் இங்கே வருகை தந்திருக்கிறோம். அவர்களுடைய வாழ்விற்கும் - வளத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம். ஏனெனில், பிரார்த்தனை தான் இறைவ னுடைய சந்நிதானத்தின் கதவு களை தட்டும். இந்த மணமக்களுக்காக நாம் பிரார்த்திப்போம் இவ்வாறு  பேராசிரியர்  கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.