Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 1 நவம்பர், 2012

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவருக்கும் தயாரிப்பவருக்கும் தினமும் அபராதம்


நெல்லை மாநகரப்பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் 100 ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 500 ரூபாயும் தினமும் அபராதம் விதிக்கவேண்டும் என சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உத்தரவிட்டார்.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் விஜிலா தலைமையில் நடந்தது.

துணைமேயர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

மேயர்: தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், மின் தட்டுப்பாட்டை போக்க சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்க சூரிய சக்தி கொள்கை, போலீசில் இளைஞர் படையை உருவாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் இரங்கல் தீர்மானத்தை மேயர் விஜிலா வாசிக்க, சபை அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து அரை மணிநேரம் கழித்து கூட்டம் துவங்கியதும், வாயில் கறுப்பு துணி கட்டிக் கொண்டும், கையில் ஒரு போர்டுடனும் 3வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் வந்தார். அந்த போர்டில் மக்கள் பிரச்னைக்காக போராடிய கவுன்சிலர் மீது பொய் வழக்கு போடுவதா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் வாயில் இருக்கும் கருப்புத்துணியை அவிழ்த்துவைத்துவிட்டு, கழுத்தில் உள்ள போர்டை வெளியே வைத்துவிட்டு வருமாறு மேயர் அறிவுறுத்தினார். 3 முறை எச்சரிக்கை செய்தார். ஆனால் கவுன்சிலர் அதை கேட்காமல் சபையில் அமர்ந்தார். இதையடுத்து கவுன்சிலர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்தார். இதனால் கவுன்சிலர் சுப்பிரமணியன் வெளியேற்றப்பட்டார்.

ஹைதர்அலி: மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பைகளை அகற்ற கூடுதல் வாகனங்களை வாங்களை வழங்கவேண்டும்.மேயர்: சுனாமி துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.110லிருந்து ரூ.160 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும்.

ஹைதர்அலி: மேலப்பாளையம் மண்டலத்தில் விரிவாக்கப்பகுதிகள் அதிகம் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். வரிவிதிப்பு குறித்து டிமாண்ட் நோட்டீஸ் அச்சடிக்க அந்தந்த மண்டலங்களுக்கே அதிகாரம் வழங்கவேண்டும்.

விஜயன்: 12வது வார்டில் பொதுஇடங்களில் ஆக்ரமிப்புகள் உள்ளன. ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கமாலுதீன்: நெல்லை மாநகராட்சியில் மறைந்த முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் படத்தை வைக்கவேண்டும். நெல்லை மாநகரப்பகுதியில் பொருட்காட்சிகள் நடத்தும் போது மாநகராட்சிக்கு வசூலிக்கும் கட்டணத்தை அதிகரிக்கவேண்டும்.

நடராஜன்: மேலப்பாளையம் மண்டலத்தில் குப்பைத் தொட்டிகள் அதிகம் இல்லை. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளை அகற்றவேண்டும்.மேயர்: பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ளவேண்டும்.சுப்பிரமணியன் (6வது வார்டு): குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றாவிடில் நோய் பரவ வாய்ப்புள்ளது.

உமாபதிசிவன்: நெல்லை மாநகராட்சியின் கடந்த 3 கூட்டங்களுக்கு கமிஷனர் வரவில்லை. கவுன்சிலர்கள் 3 கூட்டங்களுக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கிறீர்கள். நெல்லை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை போக்க திருச்செந்தூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மத்திய அரசில் இருந்து நிதி பெற்றுத்தர மத்திய அமைச்சர் வாசன் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேயர்: நெல்லை மாநகராட்சியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பூச்சியியல் துறை நிபுணர் ஒருவரையும், உணவு பாதுகாப்பு அலுவலர்களையும் அரசு பணி நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.உமாபதிசிவன்: காலிமனை தீர்வை வசூலிப்பதில் முரண்பாடு உள்ளது. 13 அரையாண்டு என கூறிவிட்டு 14 அரையாண்டு கட்டணம் வசூலிக்கின்றனர். இதில் உள்ள குளறுபடிகளை போக்கவேண்டும்.கணேஷ்: நெல்லை டவுனில் பஸ்களை நிறுத்திச் செல்ல வசதியாக தனியார் மடத்திற்கு சொந்தமான 8 ஏக்கர் இடத்தில் பஸ்ஸ்டாண்ட் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அழகுராஜ்: நெல்லையில் சுகாதாரப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு இன்று வரை புழக்கத்தில் உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையாளர்களை தடுக்கவேண்டும்.மேயர்: நெல்லை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விற்பனையாளர்களுக்கு 100 ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு தினமும் அபராதம் விதிக்கவேண்டும்.

அழகுராஜ்: பாலித்தீன் பைகளால் கழிவு நீரோடை, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யவேண்டும். வாறுகால்களில் பொதுப்பணித்துறையினர் தூர்வாரிவிட்டு கழிவுகளை கரையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதை அகற்றவேண்டும். எனது வார்டு இளநிலைப் பொறியாளரின் பணிகளில் திருப்தி இல்லை. அவரை இடமாற்றம் செய்யவேண்டும்.

முருகன்: வீடுகளை இடித்து கழிவுகளை வாறுகால்களிலும், கால்வாய்களிலும் போடுகின்றனர். ரோட்டோரங்களில் கொட்டுகின்றனர். மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிக அபராதம் விதிக்கவேண்டும்.

ராமகிருஷ்ணன்: மழையினால் கீழே விழும் மரங்களை உடனுக்குடன் ஏலத்தில் விடவேண்டும். இல்லையேல் மழையில் நனைந்து, கரையான் அரிந்து மரங்கள் செல்லரித்து போகின்றன. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து மாநகராட்சியின் ஓராண்டு சாதனை குறித்து பேசிய ஆளும் கட்சி தவிர, திமுக, காங்., மதிமுக, பா.ஜ., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் என அனைவரும் மாநகராட்சியின் செயல்பாடுகளையும், மேயரையும் பாராட்டி பேசினர்.

புதன், 31 அக்டோபர், 2012

ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு அறிவித்துள்ள மருத்துவப் பணிகள்


இந்தியாவின் பழமைமிக்க துறையில் ஒன்றாகவும், இன்றைய இந்தியாவின் அத்தியாவசியத் துறைகளில் ஒன்றாகவும் உள்ள இந்திய ரயில்வே துறையில் உள்ள காலி இடங்களை ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு எனப்படும் ஆர்.ஆர்.பீ., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்து வருகிறது.

மிகப் பிரம்மாண்டமான இந்திய ரயில்வே நவீனமயமாக்கலிலும் தனித்துவம் பெறுகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள பாரா மெடிக்கல் பணிகள் பலவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
இந்திய ரயில்வேயில் ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 406 இடங்களும்,
ஹெல்த் அண்டு மலேரியா இன்ஸ்பெக்டர் பிரிவில் 129 இடங்களும், பார்மஸிஸ்ட் பிரிவில் 187 இடங்களும்,
இ.சி.ஜி., டெக்னீசியன் பிரிவில் 7 இடங்களும்,
எக்ஸ்ரே டெக்னீசியன்/ரேடியோகிராபர் பிரிவில் 22 இடங்களும்,
கிரேடு 2 லேப் டெக்னீசியன் பிரிவில் 25 காலி இடங்களும்,
லேப் சூப்பரிண்டண்ட் பிரிவில் 13 இடங்களும்,
கார்டியாலஜி டெக்னீசியன் பிரிவில் 2 இடங்களும்,
ஸ்பீச் தெரபிஸ்ட் பிரிவில் ஒரு இடமும்,
பிஸியோதெரபிஸ்ட் பிரிவில் 7 இடங்களும்,
எக்ஸ்டென்சன் எஜூகேடர் பிரிவில் 8 இடங்களும்,
டயட்டீசியன், ஆப்தால்மிக் ஆப்டீசியன், கிளினிகல் சைகாலஜிஸ்ட் பிரிவு லேப் சூப்பரிண்டண்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
ஆர்.ஆர்.பீ.,யின் பாராமெடிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து குறைந்த பட்ச வயதும் அதிக பட்ச வயதும் மாறுபடுகிறது. அதே போல் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதியும் மாறுபடுகிறது. பிரிவு வாரியான தகுதியைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். இந்த விபரங்கள் இந்த மாதம் 4ஆம் தேதியிட்ட இந்து நாளிதழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவை
ரயில்வே ரெக்ரூடெண்ட் போர்டின் மருத்துவம் சார்ந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கும் மண்டலம் சார்ந்த ஆர்.ஆர்.பீ., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று தேவைகளை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 12.11.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்:12.11.2012. இணையதள முகவரி www.rrbchennai.net

செவ்வாய், 30 அக்டோபர், 2012

கதை அல்ல நிஜம் :4 மொழிகள் பேசும் 10 வயது ரிஸ்வான்


குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 - 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான். பிறகு பொது அறிவு புத்தகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.

அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான்.  பின்னர் உலக பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.

காய்கறிகள் விற்பனை செய்து வந்த அவனது தந்தையின் கால் விபத்தில் முறிந்துவிட்டது. வீட்டு வேலை பார்க்கும் அவனது தாயாரின் சம்பளத்தில் அவன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான். வாழ்க்கையைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ரிஷ்வான் சேக், அப்துல் கலாமைப்போல் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறான்.

திங்கள், 29 அக்டோபர், 2012

நானோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்


கோழிக்கோடு  பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எம்.எஸ்சி., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, இயற்பியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி அல்லது பாலிமர் கெமிஸ்ட்சி ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்.சி, எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250ம் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

தகுதியான மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

நவம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.universityofcalicut.info/notification/MtechNanoscience19.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அரவணைப்பார் யாருமில்லாமல் மியான்மார் முஸ்லிம்கள் தவிப்பு!


மியான்மர் நாட்டில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான  பயங்கர மோதல் ஏற்பட்டு நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இடையில் அமைதி நிலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக ரக்கைன் பிராந்தியத்தில் கலவரம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 82 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடான வங்காள தேசத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே மியான்மரில் இருந்து ஓடி வந்த பல லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே மேற்கொண்டு அகதிகளை அனுமதிக்காமல் வங்காள தேச படைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் அவர்களால் வங்காள தேசத்துக்கும் செல்ல முடியாமல் , சொந்த பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் அங்குள்ள தீவு பகுதிகளிலும், மலை காடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் இப்படி தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பட்டினி கிடக்கிறார்கள். காடுகளில் கிடைக்கும் உணவு மட்டுமே அவர்கள் பசியாற்றுகிறது.

அகதிகள் தங்கி இருக்கும் பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்த்தனர். அவர்கள் இந்த அகதிகளுக்கு உடனடியாக உணவு சப்ளை செய்ய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர். எனவே அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

   உலக மக்களின் அரவணைப்பை எதிர்பார்த்து அம்மக்கள் ஏங்கி காத்துக் கிடக்கின்றனர் .

நியூசிலாந்து -கல்வி கற்க எளிய நடைமுறை, குறைந்த கட்டணம்!


எளிதான குடியேற்ற நடைமுறைகள் மற்றும் குறைந்த கல்வி கட்டணங்கள் ஆகியவை, நியூசிலாந்து நாட்டை வெளிநாட்டு மாணவர்கள் விரும்புவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

இங்கே படிக்கவரும் சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு, பல சிறந்த விதிமுறைகளை இந்நாடு வகுத்துள்ளது. இந்நாட்டின் கல்வி அமைப்பானது, 100க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கி வருகிறது மற்றும் வணிகம், மானுடவியல், மேலாண்மை, மருத்துவம், ஐடி, தூய அறிவியல் போன்ற துறைகளில், சர்வதேச நிலையிலான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகம், கேன்டர்பரி பல்கலைக்கழகம், லின்கன் பல்கலைக்கழகம், வெய்கடோ பல்கலைக்கழகம் போன்றவை, இந்திய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.

கல்வி உதவித்தொகைகள்

படிப்பில் சிறப்பான செயல்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்கள், நியூசிலாந்து அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி அமைப்புகள் போன்றவை வழங்கும் பலவிதமான நிதியுதவிகளைப் பெறலாம். அந்நாட்டின் பல பல்கலைகள், 70 முதல் 100 உதவித்தொகைகள் வரை வழங்குகின்றன.

தர உத்திரவாதம்

உலகின் அனைத்து தொழில்துறை நாடுகளிலும், 15 வயது மாணவர்களின் சாதனைகள் தொடர்பாக, 3 வருடங்களுக்கு 1 முறை நடத்தப்படும் The Programme for International Student Assessment(PISA) என்ற சர்வேயானது, நியூசிலாந்து நாட்டின் பள்ளி அமைப்பிற்கு நற்சான்றிதழ் அளிக்கிறது. Times Higher Education Supplement Top 500 மற்றும் Shanghai Jiao Tong Top 500 போன்ற சர்வேக்களிலும், நியூசிலாந்து பல்கலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும், Newzealand Qualifications Authority(NZQA) என்ற அமைப்பானது, அந்நாட்டின் தேசிய பாடத்திட்டங்கள் மற்றும் தகுதிகளை மேம்படுத்தி, தர நிர்ணயம் செய்கிறது.

விசா விசாரணைகள்

மொத்தம் 3 மாதங்கள் வரை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை மேற்கொள்ள விசா பெற வேண்டியதில்லை. Newzealand Qualifications Authority இந்த முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில் ஒருவர், விசிட்டர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேசமயம், படிக்கும் காலம் 3 மாதங்களுக்கு மேல் என்றால், மாணவர்கள் அங்கிருக்கும் காலத்தில், தேவைப்படும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

விசா வழிகாட்டுதல்கள்

* பல்கலையிடமிருந்து அனுமதி கடிதம், செல்லத்தக்க பாஸ்போர்ட், கட்டணம் செலுத்தியதற்கான சான்று மற்றும் போதுமான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றுக்கான சான்றுகளுடன், பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

* மருத்துவ மற்றும் தற்காலிக நுழைவு எக்ஸ்-ரே சான்றிதழை சமர்ப்பிக்கவும்.

* உங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச்சீட்டிற்கான ஆதாரம் அல்லது அந்த பயணச் சீட்டை வாங்குவதற்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்கான சான்றுகளை காட்ட வேண்டும்.

* நியூசிலாந்திலிருந்து நீங்கள் திரும்பிவரும் தேதிக்குப் பிறகு, உங்களின் பாஸ்போர்ட் 3 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்குமா? என்பதை உறுதிசெய்து கொள்க.

அமெரிக்க படத்திற்கு எதிராக ஐநா சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் --- சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்


புனித ஹஜ்யாத்திரை நிகழ்வை முன்னிட்டு மக்காவில் நடந்த உலக முஸ்லிம் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மன்னர் அப்துல்லா பேசியதாவது ,முஹம்மது நபியின் வாழ்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க படத்திற்கு எதிராக  ஐநா சபையில் கண்டன தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும்.இஸ்லாத்தையும் ,இறைத்தூதர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் .

     அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இன்னொசென்ஸ் ஆப் முஸ்லிம் என்ற படம் உலக முஸ்லிம்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்கும் ,அமெரிக்க உணவுப் பொருட்களை  , அவர்களின் கல்விநிலையங்களை புறக்கணிப்பதற்கும் ,தூதரகங்கள் தாக்கப்படுவதற்கும் காரணமாயிற்று .

     சவூதி அரபிய அரசு அந்த படத்தை நீக்குமாறு கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் இருந்ததால் youtube மற்றும் google மீது நடவடிக்கை மேற்கொண்டோம் .அவர்கள் தன நிலையை மாற்றாவிட்டால் ,சவூதி அரசின் நடவடிக்கை அவர்கள் மீது தொடரும் .

         முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில்,நாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு மத்தியிலும்  கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கபட்டு ,ஒற்றுமைக்கு வழிகோலவேண்டும்.பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்களையும் ,தீவிரவாதத்தையும் ஒழிக்கலாம் என்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் பேசினார் .