Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை: குடியரசுத் தலைவர்


உலகத்தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே அறிவியல் தேடலையும், ஆராய்ச்சி மனோநிலையையையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டிய உடனடித் தேவை இந்தியாவுக்கு உள்ளது என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இல்லாதிருப்பதன் காரணங்கள் பற்றி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
"கல்வி புகட்டும் அதேநேரத்தில் ஆராய்ச்சிகள் செய்து அறிவுப் பெருக்கத்துக்கு பங்காற்ற வேண்டிய இடங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை" என்று குழந்தைசாமி கூறினார்.
"இந்தியாவில் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பாடம் புகட்ட வேண்டியது மட்டுமே ஆசிரியர்களுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் கல்விக் கட்டமைப்பில் இடமில்லை" என்று அவர் நொந்துகொண்டார்.
இந்த நிலை மாறினால்தான், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

திங்கள், 17 செப்டம்பர், 2012

விரைவில் 3,000 முதுகலை ஆசிரியர் நியமனம் : அமைச்சர் சிவபதி

"தமிழகத்தில் விரைவில், 3,000 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.
தமிழக மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், முதல் கட்டமாக, 1,080 பணியிடங்களுக்கு மாவட்ட அளவிலான கவுன்சிலிங், ஆன்-லைன் மூலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 397 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள, 683 காலிப் பணியிடங்களுக்கு, மாநில அளவிலான கவுன்சிலிங், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.இந்தியாவிலேயே முதல் முறையாக, ஆன்-லைன் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமன கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் முன்னிலை வகித்தார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உட்பட, 13 பாடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சிவபதி பேசியதாவது:தமிழக அரசு இதுவரை, ஒளிவு, மறைவில்லாமல் கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்குகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், முதல் முறையாக இணையதளம் (ஆன்-லைன்) மூலம் கவுன்சிலிங் நடக்கிறது. மாவட்ட அளவிலான கவுன்சிலிங் நேற்று நடந்தது. சொந்த மாவட்டங்களில் பணியிடம் இல்லாதவர்களுக்கு, இன்று (நேற்று) விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யும் கவுன்சிலிங் நடக்கிறது. பணி ஆணை பெறும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். பெற்றோர் போல மாணவர்களிடம் நடக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் துவங்கி, 25 ஆண்டு கால வரலாற்றில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் என மொத்தம், ஒரு லட்சத்து, 3,000 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத, 59 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சொந்த மாவட்டங்களில் வேலை கிடைக்காதோர் கவலைப்பட வேண்டாம். விரைவில், 3,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அப்போது, "சீனியாரிட்டி' அடிப்படையில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

புதன், 12 செப்டம்பர், 2012

"காயிதேமில்லத் பல்கலைக் கழகம்" காலத்தின் கட்டாயம் !


இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய சபையில் எத்தனையோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருந்தும் ,தனியொருவராக நின்று இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தொன்மையான , நான் பேசும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு ,அந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) ஆவார்கள் .

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் ,தன கல்லூரி படிப்பை தூக்கி எறிந்துவிட்டு ,ஒத்துழையாமை இயக்க மாநாட்டை தான் பிறந்த நெல்லை சீமையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் )

பெரியார் ,அண்ணா ,காமராஜர் ,போன்ற தலைவர்களை எல்லா தலைமுறையினரும் அறியும் பொருட்டு அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன .அதுபோல் ,நாட்டுப்பற்றாலும் ,மொழிப்பற்றாலும் உயர்ந்து நிற்கும் அந்த பெருமகனார் யார் என்று வாழும் தலைமுறையும் , எதிர்வரும்  தலைமுறையும் அறியும் பொருட்டு ,தமிழகத்தில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம் தமிழக அரசு உருவாக்க வேண்டும் .இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பது தமிழக மக்களின் அனைவரின் கடமை .

டிப்ளமோ படித்தவர்களுக்கு டைடல் பார்க்கில் வேலை : 20 ஆயிரம் சம்பளம்


சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் காலியாக உள்ள Technical Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Technical Assistant
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: Store Keeper
கல்வித்தகுதி: ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்பளமோ அல்லது மெட்ரீயல் மேனேஜ்மென்டில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000

வயதுவரம்பு: 01.09.2012 தேதிப்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 20.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.

தங்களைப்பற்றிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டிய முகவரி
The Managing Director, TIDEL Park Limited, 1st Floor, ''A'' Block, No: 4, Rajiv Gandhi salai, Taramani, Chennai - 600113

மேலும் முழுமையான தகவல்களை அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இ-மெயில் முகவரி: tidel@vsnl.com

மனித உருவில் மிருகங்களின் அட்டகாசம் !

ஊத்துக்கோட்டை கூனிபாளையத்தை சேர்ந்தவர் எழிலரசன் (எ) நாகலிங்கம். இவருக்கும், கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் மண்டபம் களை கட்டியிருந்தது.

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூனிபாளையத்தை சேர்ந்த வினோத், பிரதாப், பாபுராஜ், பிரேம் ஆகியோர், ‘திருமணத்தில் பிரியாணி போடாதது ஏன்' என கேட்டு போதையில் தகராறு செய்தனர். அதோடு, மணமேடைக்கு சென்றனர். அங்கு, மணமக்களுக்காக கேக் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து, மணமகளுக்கும் மணமகனுக்கும் ஊட்டினர். பின்னர், கேக்கை எடுத்து மணமக்களின் முகத்திலும் பூசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர், பிளஸ் 2 படிக்கும் கவுதம் தாசா (17) என்ற மாணவன், 4 பேரையும் தட்டி கேட்டான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 4 பேரும், அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து கவுதம் தாசாவை தாக்கினர். அதில், கவுதம் தாசாவின் வயிறு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் அலறி துடிப்பதை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர். அதற்குள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கவுதம் தாசாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் நேற்றிரவு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்ஐ சக்கரை வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பால் பொருள் பதப்படுத்த ஒரு மாத இலவச பயிற்சி



பால் பொருட்கள் பதப்படுத்துதல், மீன் பொருட்கள் தயாரித்தல் குறித்த, இலவசப் பயிற்சியில் சேர விரும்புவோர், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், அக்., 1 முதல், அக்., 31ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு, பால் பதப்படுத்துதல் தொடர்பாக இலவசப் பயிற்சி அளிக்க உள்ளது.பால் உற்பத்தியாளர்கள், பால் பதப்படுத்தும் தொழில் ஆர்வமுள்ளோர், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 25ம் தேதி, விண்ணப்பித்தோரில், 30 பேர் தேர்வு செய்யப்படுவர்.

 விவரம் தேவைப்படுவோர், முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம், சென்னை - 52 என்ற முகவரியிலும், 2768 0214, 2768 0217 என்ற தொலைபேசியிலும், 94448 10657 என்ற அலைபேசியிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


திங்கள், 10 செப்டம்பர், 2012

சச்சார் கமிசனும் ,ரங்கநாத் மிஸ்ரா கமிசனும் அமைக்க முழுக்காராணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : இ.அஹமது சாஹிப்


ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்ப கோணம் அல்-அமீன் பள்ளி மைதானத்தில் அல்ஹாஜ் எம்.ஏ. ஜமால் முகைதீன் பாப்பா நுழைவு வாயிலில் அரசியல்ஞானி வடகரை எம்.எம். பக்கர் நினை வரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் `கல்வி விழிப் புணர்வு மாநாடு'மிகப் பிரம் மாண்டமாக நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் மாநில கல்விப் பணி செயலாள ரும், மாநாட்டு அமைப்பாளரு மான ஆடுதுறை ஏ.எம். ஷாஜ ஹான் வரவேற்புரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, காயிதெ மில்லத் பேரவை சர்வ தேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தமிழாக்கம் செய்தார்.

மாண்புமிகு இ.அஹமது சாஹிப் இம் மாநாட்டில் பேசிய தாவது-

தஞ்சை தரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னோடிகள் மிகப் பிரம்மாண் டமாக ஏற்பாடு செய்திருக்க கூடிய இம் மாபெரும் மாநாட்டில் நான் பங்கேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து இந்த இரவு வரை நடக்கின்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கிடைத்த பெரும் பாக்கியத்தை எண்ணி பூரிப்படைகின்றேன்.

இன்று காலையில் நடை பெற்ற முஸ்லிம்களின் கல்வி நிலையும், இடஒதுக்கீட்டின் பயனும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றியவர் கள் பல அரிய கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். நானும் அதிலே கலந்து கொண்டு பல விளக்கங்களை அளித்தேன். இன்று மாலையில் நடை பெற்ற எழுச்சிமிகு ஊர்வலத்தில் அருமைமிகு இளைஞர்களும், அன்பு மாணவர்களும் உணர்ச்சி முழக்கத்தோடு கம்பீரமாக அணிவகுத்து வந்த காட்சியை காணுகின்ற போது எனக்கே ஒரு உத்வேகம் பிறந்து விட்டது.

இந்த அணிவகுப்பில் யானை ஒன்று கம்பீரமாக பீடு நடை போட்டு வந்ததும், குதிரை களில் இளைஞர்கள் கொடி பிடித்து வந்தது மகிழ்ச்சியை தந்தது. அந்த காட்சியை பார்க்கின்ற போது இந்த நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பலம் பொருந்திய யானையைப் போன்று பலம் பொருந்தி செயல்படுகிறது. தலைமை நிலையம் அமைந்துள்ள தமிழ கத்தில் அதன் தலைவர்கள் பலம் மிக்க இயக்கமாக தாய்ச் சபையை வளர்த்து வருகி றார்கள்.

கண்ணியமிக்க காயிதெ மில்லத் சொன்னார்கள்: `இரண் டரை கோடி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று� அவர்கள் காலத்தில் இரண்டரை கோடி முஸ்லிம்கள் இருந்தார் கள். இன்று நமது நாடடில் 18 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார் கள். அவர்கள் அத்தனை பேருக்கும் பிரதிநிதித்துவ சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இளைய தலை முறையா னாலும், மூத்த தலை முறையா னாலும், அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்,

இன்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஏதோ கேரளாவிலும், தமிழ்நாட்டில் மட்டும்தான் செயல்படுகிறது என்று. கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை அது பல்வேறு மாநிலங்களில் பரவி செயல் பட்டு கொண்டு இருக்கிறது.

அஸ்ஸாம் கலவரத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் களை பார்ப்பதற்காக என்னு டைய தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு சென்றது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் வந்து கலந்து கொண்டனர்.
அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளாவில் இருந்து ரயில்வே வேகன்களில் ஆடைகளும், தமிழ்நாட்டில் இருந்து பணமும், உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு ஏறத் தாழ ஒன்றரை லட்சம் மக்க ளுக்கு அவைகளை விநியோ கித்தோம். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. சாதி, சமய வித்தியாசம் இன்றி ஒட்டு மொத்த பாரத மக்களுக்கா கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இத்தகைய கடமைகளை செய்து வருகிறது. முஸ்லிம் லீக் பழமைவாய்ந்த இயக்கம் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில பேர் இது மதவாத இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மதச் சார்பற்ற தன்மையை கடைபிடிப்பதில் நாம் உறுதியாக இருப்பவர்கள் மட்டும் அல்ல; மதச்சார்பற்ற அரசில் ஆளும் கட்சியாக திகழும் காட்சியை கண்டு கொண்டு இருக்கிறீர்கள்.

முஸ்லிம் லீக் வரலாற்று பேரியக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா வின் எந்த மூலையில் வேண்டு மானாலும் நின்று கொண்டு முஸ்லிம் லீக் என்று சொல்லிப் பாருங்கள். ஜிந்தாபாத் என்ற பதில் கோஷம் உடனே வரும்.

ஆளும் கட்சியாக இடம் பெற்று பேசாமடந்தைகளாக நாங்கள் சும்மா இருக்கவில்லை. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எண்ணற்ற நன்மைகளை பெற்றுத் தரும் பல்வேறு திட் டங்கள் உருவாவதற்கு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கி றோம்.

சச்சார், மிஸ்ரா கமிஷன்கள் வர இ.யூ. முஸ்லிம் லீகே காரணம்
முஸ்லிம்களுக்கு நன்மை கள் கிடைப்பதற்காகத்தான் சச்சார் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு இந்த சமுதாயத் துக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்து வருகின்றன. சச்சார் கமிஷன் அமைக்கப்படுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் காரணம் என்று பெருமைப் படுகிறோம்.

இந்த சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பாரதப் பிரதமரின் 15 அம்ச திட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக செயல்படுத்தப்படுவது முஸ்லிம்களுக்கான கல்வி உதவித் தொகை. இந்த உதவித் தொகை கடந்த ஆண்டில் மட்டும் 62 கோடியே 71 லட்சம் நம்முடைய சமுதாயத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது மகத்தான சாதனை ஆகும். நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம், இத்தகைய உதவிகள் செய்யப் படுகின்றன. 

சிறுபான்மை முஸ்லிம் களின் கல்வி நலனுக்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது என்பதை இங்கு மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த தொகை போதாது. இது உயர்த்தப்பட வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசாங்கத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிறுபான்மை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கார ணத்தால் எங்கெல்லாம் அந்த வசதி தேவைப்படுகிறதோ அந்த பள்ளிகளில் எல்லாம் குறிப்பாக மாணவர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் பொது சுகாதார வசதிகள் எங்கெல்லாம் தேவைப்படு கிறதோ அங்கெல்லாம் ஒவ் வொரு பள்ளிக்கும் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் முஸ்லிம் சமுதாயம் நடத்துகின்ற பள்ளி களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 350 முஸ்லிம் பள்ளிகளுக்கு 135 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள் ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த 50 லட்ச ரூபாயில் மத்திய அரசு 90 சதவிகிதமும், மாநில அரசுகள் 10 சதவிகிதமும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நலத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன ளிக்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ள இத் திட்டத்தால் பயன்பெறும் பள்ளிகள் மூலம் எல்லா சமுதாய மக்களும் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்காக அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசு தரும் 90 சதவிகிதத்தைப் பெற்று தங்களின் பங்களிப்பாக 10 சதவீதத்தையும் சேர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. மத்திய அரசு நிதியை செயல்படுத்த மறுக்கும்

குஜராத் பி.ஜே.பி. அரசு

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது ஒரே ஒரு மாநிலம் மட்டும் முஸ்லிம்க ளுக்கு நன்மை பயக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அடம் பிடிக்கிறது. அந்த ஒரு மாநிலம் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் ஆகும்.

90 சதவிகிதம் நாங்கள் தரும் தொகையோடு வெறும் 10 சதவிகிதம் மட்டும் நீங்கள் சேர்த்து இத் திட்டத்தை பயன் படுத்தினால் என்ன என்று கேட்டபோது, நரேந்திரமோடி அரசு சொன்ன பதில், `நாங்கள் 10 சதவிகிதம் தந்தால் தானே 90 சதவிகித உங்கள் பணம் சிறுபான்மை சமுதாய நலனுக்கு செல்லும். ஆகவே, இந்த 10 சதவிகிதம் தரவே மாட்டோம் என அடம் பிடிக்கின்றனர். இதனால் முஸ்லிம் சமுதா யத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்காமல் இருக் கிறது. இப்படி சாதி, மத வெறி பிடித்த அரசு குஜராத்தில் இருக்கிறது என்பது நமக்கு எல்லாம் வருத்தம் அளிக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசில் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முஸ்லிம்களின் நலனுக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கி றார். நாங்கள் அவருக்கு உறு துணையாக ஒருங்ணைப்போடு செயல்படுகிறோம். இன்று, சச்சார் கமிஷன், ரங்கநாத் கமிஷன் அறிக்கை கள் எல்லாம் பெறப்பட்டதற்கு பிறகு முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. இது போதாது குறைந்தபட்சம் ஆறு சதவீத அளவிலாவது இந்த இடஒதுக்கீடு இருக்க வேண் டும் என முஸ்லிம் சமுதாயம் வேண்டுகோள் விடுத்த நிலை யில் நீதிமன்றத்தால் இது முடக் கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத் துறையில் நான் அமைச்சராக இருக்கிறேன். இந்த இடஒதுக் கீட்டை எப்படி பயன்படுத்த போகிறோம் என யோசித்துக் கொண்டு இருக்கும்போது எங்கள் கனவில் பேரிடியாக இந்த நீதிமன்ற உத்தரவு ஏற் படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்ற நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். டாக்டர் மன்மோகன்சிங் அரசு பொறுப் பேற்றுள்ள நாள் முதல் பி.ஜே.பி., சிவசேனா கட்சிகள் எல்லாம் எதற்கெடுத்தாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பதையும், நாடாளுமன்றத்தை முடக்குவ தையும் வழக்கமாக கொண்டுள் ளன. இதற்கு காரணம் சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத் திற்கு இந்த அரசு நன்மைகள செய்து வருகின்றது என்பதால் தான்.

ஊழலில் ஒட்டுமொத்தமாக திகழ்ந்து கர்நாடகத்தை பங்கு போடும் பா.ஜ.க., டாக்டர் மன்மோகன்சிங் அரசை ஊழல் அரசு என குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பது எங்களின் நிலைப்பாடு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் ஜனநாயகத்தின் அத்தனை விஷயங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ள இயக்கமாகும். மதச்சார்பற்ற தன்மையில் ஆழமாகவும், அழுத்தமாகவும் உறுதி கொண்டுள்ள இயக்கம். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் பிரச்சினைகள் வரும் போது விவாதத்திற்கு தயார் ஆகி உண்மைகளை அறிந்து கொள்ள முன்வர வேண்டும். விவாதத்திற்கும் தயாராக இல்லை; நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வரத் தயாராக இல்லை என்றால் இவர்களை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ச்சபை என்ற வரலாற்று பேரியக்கத்தை தம்முடைய மூத்த தலைவர்கள் தந்துள்ள னர். இந்த பெருமைக்குரிய வரலாற்றை தொடங்கி வைத் தது காயிதெ மில்லத் அவர்கள். அவர்களுக்குப் பின் சையது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், சி.ஹெச். முஹம்மது கோயா, ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், சையது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட தலைவர்கள் இந்த தாய்ச்சபை யின் பணிகளை நம்முடைய கரங்களில் ஒப்படைத்திருக்கி றார்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற் கும், மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்டவும் மிக உறுதியாக இருந்தார்கள். இந்த அடிப்படை யில்தான் மதச்சார்பற்ற, மத சகிப்புத்தன்மை, மதங்களி டையே வேறுபாடு கிடையாது. எல்லாரும் சகோதர்கள்; நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு உறவு முறை களோடு வாழச்செய்வதை எடுத்து இயம்புகின்ற இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயங்குகின்றது.

இந்த இயக்கத்தை அழிப் பதற்கோ, ஒடுக்குவதற்கோ யாராலும் முடியாது. இந்த நாட்டில் கடைசி முஸ்லிம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை முஸ்லிம் லீக் என்ற இந்த இயக்கம் செயல்படும். முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!

இவ்வாறு இ. அஹமது சாஹிப் உரையாற்றினார்.