Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 12 ஜூலை, 2013

தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கு அரசாணை : ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்

தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச., அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுச் செயலாளர் தர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் சம்பந்தமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்பதை ஐந்தாண்டாக மாற்றம் செய்தும், நலிந்த நிலையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மாற்றி அமைக்கவும் (தனியாருக்கு விற்கவும்) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தொழிலாளர்களின் வேலைக்கும், வாழ்வுக்கும் தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும். அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நேரடியாக போராட்டம் நடத்த தொ.மு.ச., திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக