Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 25 ஜூலை, 2013

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு எதிர் மனு தாரராக சேர்க்க கோரும் பேராசிரியர் கே.எம்.கே.மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

இஸ்லாத்தை சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து போன்ற பிரச்சினைகளில் தங்களை பாதுகாக்க சட்டப் பூர்வமான உரிமைகள் இல்லை என்றும், மனைவிக்கு தெரியாம லேயே கணவன் தலாக் கூறி காஜிகளிடம் மணமுறிவுக்கான சான்றிதழ் பெற்றுவிடுகிறார் என்றும் எனவே மணமுறிவு சான்றிதழ் வழங்க காஜி களுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான பதர் சயீத் ஜுன் 5ம் தேதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், தமிழக அரசு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை செயலாளர், தமிழக தலைமை காஜி ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள னர்.

""""பதர் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு, பள்ளிவாசலை மைய மாகக்கொண்டு செயல்படும் மஹல்லா ஜமாஅத்தை சீர் குலைக்கவும், ஷரீஅத் சட்டத் திற்கு பதிலாக பொது சிவில் சட்டத்தை ஊக்குவிக்கவும் செய்யும் முயற்சி என்றும் எனவே இதனை முறியடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தன்னை ஒரு தரப்பினராக இணைத்து இந்த வழக்கை எதிர் கொள்ளும்"" என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜுலை 3ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில் அவர் """" மத சிறுபா ன்மையினர் விஷயங்களில் எனக்குள்ள ஈடுபாடு காரண மாக இந்த ரிட் மனுவில் எனக்கு அக்கறை உண்டு. ஷரீஅத் அனைத்து முஸ்லிம் களையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஷரீஅத் சட்டப்படிதான் காஜிகள், ஙாயிப் காஜிகள், என்ற பள்ளிவாசல் இமாம்கள் திருமணங்களை பதிவு செய் கிறார்கள். தனியார் சட்டங்கள் அத்தியாவசிய தேவை என்பதோடு அவை எல்லா மதிப்புடனும் பாதுகாத்து பேணப்படுகின்றன. பதர் சயீத் வழக்கில் நான் எதிர் மனு தாரராக ஏற்றுக் கொள்ளப் பட்டால் சிறுபான்மை சமுகத்தி னரின் தனியார் சட்டம் குறித்த மிக முக்கியமான -உணர்வு பூர்வமான விஷயங்களை நீதிமன்றத்தில் என்னால் சமர்ப்பிக்க முடியும். எனவே என்னை நான்காவது எதிர் மனு தாரராக இணைக்கக்கோரி நீதியை நிலைநாட்ட விழை கிறேன்.""- எனக்குறிப் பிட்டுள்ளார்.

இந்த வழக்கை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் கே. அசோக்குமார்,கே. கணேசன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள னர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து பணிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் கவனித்து வருகிறார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அன்று அளித்த தீர்ப்பை தொடர்ந்து அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி ஷரீஅத் பாதுகாப்பு சட்ட மசோதா கொண்டு வந்த நிறைவேற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் ஜி.எம்.பனாத் வாலா தாக்கல் செய்த தனி நபர் மசோதாவே காரணம் என்பதும், அவரது வாதத்திற்கு அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக் கொடுத்தவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என்பதும், இதற்கு பெரும் துணை புரிந்தவர் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவூதி ஹஸரத் என்பதும் நினைவு கூறத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக