Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 27 ஜூலை, 2013

நடப்பாண்டில் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ப. சிதம்பரம்

மானாமதுரையில் இந்தியன் வங்கியின் 2110வது கிளையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,"நாட்டில் 80 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு 86 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கல்வி கடனாக 50 ஆயிரம் கோடி ரூபாய் 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 108 டாலராக உயர்ந்து விட்டது. 100 டாலருக்குள் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கச்சா எண்ணை இறக்குமதியும் 70 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 

பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக தொடர்நது 2வது இடத்தில் உள்ளது. 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி 5 ஆக உள்ளது அடுத்தாண்டிற்குள் 6 சதவிகிதமாக உயரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்ட அவர் அதனைத் தொடர்ந்து மிளகானூர் கிராமத்தில் ஓரியண்டல் வங்கியின் 2010 வது கிளையை திறந்து வைத்து..," நடப்பாண்டில் 8,000 வங்கி கிளைகள் துவங்கப்படவுள்ளன. இதனால் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்"  என உறுதிப்படக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக