Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 30 ஜூன், 2013

இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு பா.ஜ.க . அலறுவது ஏன்? காங்கிரஸ் கேள்வி

"பா.ஜ., கட்சியினர், எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக, சி.பி.ஐ., விசாரணையை பார்த்து, அலற வேண்டும்,'' என, காங்., செய்தி தொடர்பாளர், பக்த சரண் தாஸ், கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்., செய்தி தொடர்பாளர், பக்த சரண் தாஸ் கூறியதாவது: குஜராத்தில் நடந்த, இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை சிக்க வைப்பதற்காக, சி.பி.ஐ.,யை, மத்திய அரசு, தவறாக பயன்படுத்துவதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், கவலை தெரிவித்துள்ளனர். 


பா.ஜ., கட்சியினர், எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக, சி.பி.ஐ., விசாரணையை பார்த்து, அவர்கள் அலற வேண்டும்? சட்டம், அதன் கடமையைச் செய்யும்போது, அதைப் பார்த்து, ஏன் பயப்பட வேண்டும்? வழக்கு என்று வந்து விட்டால், விசாரணை, கைது என்பது போன்ற நடைமுறைகள், வழக்கமானதே. 

குற்றம் செய்யாதவர்கள், அதைப் பார்த்து, பயப்பட வேண்டிய அவசியமில்லை. குஜராத் மாநில, நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பாபுபாய் பொக்கிரியாவுக்கு, ஊழல் வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும், அவர், அமைச்சர் பதவியில் தொடருவது எப்படி என்பது பற்றி, பா.ஜ., தலைவர்கள் தான், விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பக்த சரண் தாஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக