Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 26 ஜூன், 2013

குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக உள்ளது

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதாலும், குளுமையான சூழல் நிலவியதாலும் நேற்று சீசன் அருமையாக இருந்தது.

மழை குறைந்தது
நெல்லை மாவட்டம் குற்றாலம் மலையில் மழை நீடித்ததால் மெயின் அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று காலையில் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிப்பதற்கு ஏதுவாக தண்ணீர் கொட்டியது. நேற்று காலை முதல் ஏராளமானவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மெயின்அருவி மட்டுமின்றி ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சீசன் அருமை
பகலில் விட்டு விட்டு வெயில் காய்ந்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே சாரல் மழையும் பன்னீர் தெளிப்பது போன்று தூவியது. நேற்று முழுவதும் அருமையான சீசன் நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக