Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 21 ஜூன், 2013

என்னை கொலை செய்ய கம்யூனிஸ்டுகள் சதி : மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள, ஊராட்சி தேர்தலையொட்டி, வடக்கு, 24 பர்கானா மாவட்டத்தில் பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, கூட்டத்தில் பேசியதாவது:கடந்த சில தினங்களுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்க சென்றிருந்தேன். அப்போது, என்னை, மாவோயிஸ்டுகளின் உதவியுடன் அங்கேயே தீர்த்துக் கட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இது, எனக்கு உளவுப்பிரிவினர் அளித்த தகவல். இதற்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன். என்னை அழித்துவிட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்ற, கம்யூனிஸ்டுகளின் கனவு ஒருபோதும் பலிக்காது.

கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து, என் அரசக்கு எதிரான வேலையில் ஈடுபட்டு வருகின்றன. என்னுடன், இந்த மண்ணின் மக்கள் இருக்கும் வரை, என் தலைமுடியைக் கூட யாராலும் தொட முடியாது.

நான் எந்த தவறும் செய்ததில்லை. சாவதற்கு நான் பயப்படவில்லை. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், கொலைகள் போன்றவற்றிலிருந்து ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளிடம், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக