Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 15 ஜூன், 2013

நரேந்திர மோடியை 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக பா.ஜ., அறிவிக்க கூடாது : ஐக்கிய ஜனதாதளம்

தங்களின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து பா.ஜ., உடனடியாகவும், வெளிப்படையாகவும் பதிலளிக்க வேண்டும்; தனிப்பட்ட வாக்குறுதிகள் எதையும் செய்து விடாது; தனிப்பட்ட ஒருநபர் தனது திறமையால் அனைவரையும் தன் வசப்படுத்தலாம்; ஆனால் அவர் நாட்டின் பிரதமர் பதவிக்கு ஏற்றவராக இருக்க முடியாது; தகுதி அடிப்படையில் பார்த்தால் மோடி பிரதமர் பதவிக்கு ஏற்றவர் அல்ல;

 பா.ஜ., தனது பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க கூடாது; அவ்வாறு செய்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகும் எனது முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயாராக உள்ளேன்; மோடியை முன்னிறுத்தி கட்சி செயல்படுமானால் பா.ஜ., உடனான ஐக்கிய ஜனதா தளத்தின் 17 ஆண்டு கால உறவு முறிவதை யாராலும் மாற்ற முடியாது; இவ்வாறு பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவு :
ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நேற்று முதல் கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. கட்சியின் முடிவு குறித்து நிதிஷ்குமாரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தங்களின் இறுதி முடிவை இன்று (ஜூன் 15ம் தேதி) அறிவிக்க உள்ளதாக சரத் யாதவ் ஏற்கனே தெரிவித்திருந்தார்.

கூட்டணியை ‌காப்பாற்றுவதற்காக ஐக்கிய ஜனதா கட்சியை சமாதானப்படுத்த அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், கட்காரி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக