Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 5 மே, 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்கார் பருவத்திற்காக மணிமுத்தாறு அணை திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்கார் பருவத்திற்காக மணிமத்தாறு அணையை கலெக்டர் சமயமூர்த்தி திறந்து வைத்தார்.

முன்கார் பருவத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜமீன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பாக்குடி, வைராங்குளம், தெற்கு கல்லிடைகுறிச்சி, வைரவகுளம்,சிங்கமயம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்வதற்காக மணிமுத்தாறு அணையை இன்று காலை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி திறந்து வைத்தார்.

விநாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது தண்ணீர் 82.21 அடியாக உள்ளது, ஆகையால் அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விவசாயம் செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 2756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக