Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 8 மே, 2013

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி கந்தக டை ஆக்சைடு வெளியேறியது. இதையடுத்து கடந்த 30-ந்தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்கு சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய் தலைமையிலான நிபுணர் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், இவ்வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சுதந்திர குமார், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க மறுத்துவிட்டார். மேலும் அந்த அறிக்கையின் பிரதிகளை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இவ்வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய வாதத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக