Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 10 மே, 2013

பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன

பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

 அவ்வகையில் 8 அரசுப் பள்ளிகள், 12 தனியார் பள்ளிகள், 1 நகராட்சிப் பள்ளி, 1 அரசு ஆதிதிராவிடப் பள்ளி, 1 சமூக நலத் துறைப் பள்ளி, 44 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

100% தேர்ச்சி பெற்ற 8 அரசுப் பள்ளிகள்: வெள்ளங்குளி, பத்தமடை, சுந்தரபாண்டியபுரம், ஊர்மேலழகியான், சாம்பவர்வடகரை, காசிதர்மம், வீராணம், பாலாமடை.  கடந்த ஆண்டு இம் மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றன. மேலப்பாளையத்திலுள்ள காயிதே மில்லத் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி அரசு சேவை இல்லம் ஆகிய பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

கல்வி மாவட்ட அளவில் தேர்ச்சி விவரம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 3 கல்வி மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 12,477 மாணவர்- மாணவிகளில் 11,835 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.85.

 சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 11,022 மாணவர்-மாணவிகளில் 10,398 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.59.

 தென்காசி கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 11,146 மாணவர்- மாணவிகளில் 10,544 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.59.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக