Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 18 ஏப்ரல், 2013

மதுரை அரசு மருத்துவமனையில் தாகம் தணிக்க தண்ணீரின்றி நோயாளிகள் தவிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறையால், நோயாளிகளும், உறவினர்களும் தண்ணீரை தேடி அலைகின்றனர். இதன்காரணமாக, தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது.தினமும் பத்தாயிரம் பேர் வந்து செல்லும் மருத்துவமனையில், இரண்டு இடங்களில் தான் குடிநீர் வசதி உள்ளது. அதில், ஒன்று பழுதடைந்துள்ளது. மகப்பேறு இடத்தில் உள்ள குடிநீர் குழாய், உட்பகுதியில் இருப்பதால் பிற வார்டு நோயாளிகளுக்கு தெரிவதில்லை. அடிக்கும் வெயிலில் ஒரு நாளைக்கு கண்டிப்பாக மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு சொட்டு தண்ணீருக்கு, நோயாளிகள் வெளியே உள்ள தண்ணீரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.இதை பயன்படுத்திக் கொண்ட தனிநபர்கள், டிரைசைக்கிளில் "மினரல் வாட்டர்' என்ற பெயரில், ஒரு லிட்டர் ரூ.3, இரண்டு லிட்டர் ரூ.5க்கு தண்ணீரை விற்கின்றனர். "இது சுத்தமான குடிநீரா' என தெரியவில்லை. சுகாதாரமில்லாத தண்ணீரை குடிப்பதால் வயிற்றுப் போக்கு, டைபாய்டு காய்ச்சல் வரும் அபாயம் உள்ளது. உடல்நலமின்றி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், சுகாதாரமில்லாத தண்ணீரை குடித்தால் நிலைமை என்னவாகும்? அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை கூட நிறைவேற்றாவிட்டால், சிகிச்சை அளித்து என்ன பயன்? இதுகுறித்து பலமுறை தெரிவித்தும், மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரின்றி நோயாளிகள் மயங்கி விழுமுன், நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக