Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

தமிழகம் முழுவதும் இன்று (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது

அகில இந்திய அளவில்  முஸ்லிம்களுக்கு 10 % இட ஒதுக்கீடு ! தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்வு !
பூரண மது விலக்கு! விசாரணை கைதிகளாக பல்லாண்டுகளாக உள்ள அப்பாவி சிறைவாசிகள் விடுதலை !
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது .

திருநெல்வேலியில் ரயில்வே சந்திப்பு முன் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா தலைமையில் நடந்தேறியது .ஆர்ப்பாட்டத்தின்  இறுதியில்  நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

தஞ்சாவூரில் கோரிக்கை பேரணி மாநில செயலாளர்  தளபதி ,ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான்  தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .
சுமார் 2500 க்கும் அதிகமானோர் எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .

கடலூரில்  கோரிக்கை பேரணி மாநில துணைத்தலைவர்   தளபதி ,ஷபிகுர்ரகுமான் மன்பஈ   தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

விழுப்புரத்தில்   கோரிக்கை பேரணி மாநில செயலாளர்    காயல் மஹபூப்    தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  விழுப்புரம்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சுமார் ஆயிரக்கணக்கானோர்  எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .

நாகப்பட்டினத்தில்   கோரிக்கை ஆர்ப்பாட்டம்  மாநில செயலாளர்   திருப்பூர் சத்தார்   தலைமையில்  நடந்தது .பேரணியின் இறுதியில்  நாகை  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சமுதயா மக்கள்  எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .


திருச்சியில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி மாநில துணை செயலாளர் ஜி.எம்.காசிம் தலைமையில் நடந்தது .பேரணியின் இறுதியில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .சமுதாய மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர் .
கன்னியாகுமரியில்  இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி மாநில துணை செயலாளர் இபுராஹிம் மக்கி  தலைமையில் நடந்தது .பேரணியின் இறுதியில்  மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக