Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 28 மார்ச், 2013

டுபாக்கூர் மனித உரிமை கழகங்கள் பற்றிய விபரங்கள் சேகரிப்பு : காவல்துறை நடவடிக்கை


காவல் துறை சார்பில், செயல்படும் மனித உரிமை கழகங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.தன்மானத்தை சீண்டும் வகையில், தனி மனிதனுக்கு ஏற்படும் அநீதி, கொடுமைகளை தட்டிக் கேட்டு, நீதி கிடைக்க செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் மனித உரிமை கழகங்கள். இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில்,  மாநிலத்தின் பல இடங்களில், ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

பல இடங்களில் உள்ள மனித உரிமை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை போன்று, கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுகின்றனர்.டுபாக்கூர் அமைப்புகள்இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பலர், தங்கள் வாகனங்களில், ஒரு வி.ஐ.பி.,க்களை போன்று, வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்வது, பணம் பறிப்பது போன்றவை இவர்களின் தொழிலாகவே உள்ளது. இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, என்ற கோர்ட் உத்தரவை, மாநில அரசு பின்பற்ற துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி போலீஸ் ஜரூர்நீலகிரி மாவட்ட காவல் துறை, இந்த விவகாரத்தில் வேகம் காட்ட துவங்கியுள்ளது. மாவட்டத்தில் "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள், அதன் நிர்வாகிகள், அவர்களின் செயல்பாடு, அணுகுமுறை உட்பட விவரங்களை சேகரிக்கும் பணியில், மாவட்ட காவல் துறை ஈடுபட்டுள்ளது. தவிர, அரசு அலுவலகம், காவல் நிலையங்களுக்கு, "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் வரும் நிர்வாகிகள் மீது, வழக்குப்பதிவு செய்யவும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு, மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.காவல் துறையின் இந்த அதிரடியால், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், பணம் பறிப்பு உட்பட செயல்களில் ஈடுபடும் "டுபாக்கூர்' நபர்கள், கலக்கத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக