Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 14 மார்ச், 2013

கிராமப்புற ஏழைகளுக்கு இலவச பண்ணை வீடு: காங்கிரசின் அடுத்த திட்டம்


2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு மசோதா‌, பார்லிமென்ட்டில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வீடு அமைக்கும் உரிமை மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மசோதாக்களுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களை குறிவைக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் அமைத்து வருகிறது. வீடு அமைக்கும் மசோதா குறித்து தற்போது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனை முடிந்த பிறகு மசோதா தொடர்பான சுற்றறிக்கை மற்ற துறைகளை சார்ந்த அமைச்சர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் மார்ச் 18ம் தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஏக்தா பரிஷித் என்ற அமைப்பு கடந்த ஆண்டு ‌முன் வைத்த கோரிக்கையை தொடர்ந்து கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆக்ரா ஒப்பந்த அடிப்படையில் முக்கிய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
கிராம வளர்ச்சித்துறை அமைச்சகம் தகவல் :

சொந்த நிலம் இல்லாத மற்றும் வீடு இல்லாத கிராமப்புற ஏழைகளுக்கு 0.1 ஏக்கர் அல்லது 4356 சதுரடி நிலம் வழங்கப்படும் என மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இதே போன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொறு கிராமப்புற வாசிகளுக்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்திருந்தது. தற்போது வீடு வழங்கும் இந்த புதிய மசோதா பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் ‌போது தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சலுகை பெற தகுதியானவர்கள்:
சொந்த விவசாய நிலமோ அல்லது வீடோ இல்லாதவர்களுக்கு 10 சென்ட்க்கும் குறையாமல் நிலம் வழங்கப்பட உள்ளது. மேலும் வசிக்கும் இடத்தில் இல்லாமல் நாட்டின் பிற பகுதியில் சொந்த நிலம் வைத்திருந்து அதற்காக வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் இந்த புதிய மசோதாவின் கீழ் சலுகை பெற முடியும். 11வது திட்ட அறிக்கையின்படி 13 முதல் 18 மில்லியன் கிராமப்புற குடும்பங்கள் நிலம் இல்லாமலும், 8 மில்லியன் பேர் வீடு இல்லாமலும் உள்ளனர். மேலும் பெண்கள் நிர்வாகம் செய்யும் குடும்பங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

மசோதா அடிப்படையில் பங்கீடு :
75:25 என்ற பங்கீட்டில் மத்திய மற்றம் மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. தொழில்துறைக்கு பயன்படுத்தப்படாத நிலங்கள், மேலும் குத்தகை முடிந்து காலாவரியான நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை மாநில அரசு இந்த திட்டத்திற்காக பயன்படுத்தலாம். கிராம சபை மூலம் வீடுஇல்லாத ஏழை குடும்பங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக